நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா…