பாடல்கள்

Home பாடல்கள் Page 2

ஏறெடுத்து என் முகத்தை

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்….
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்…….
ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

பாவ பலியாகி நீர் கல்வாரி மலையேறி
பட்ட துயர் பார் அறியுமே
பாவ பலியாகி நீர் கல்வாரி மலையேறி
பட்ட துயர் பார் அறியுமே
வார் அடிக்கு உமதுடலில் வழிந்தோடும் இரத்தமது
பாவியெம்மை இரட்சிக்குமே
தேவா பாவியெம்மை இரட்சிக்குமே

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

அன்பு கூர்ந்து எம்மை ஆதரிக்க வந்த தேவ
ஆட்டுக்குட்டியும் நீரே
அன்பு கூர்ந்து எம்மை ஆதரிக்க வந்த தேவ
ஆட்டுக்குட்டியும் நீரே
நம்பி வந்தோம் உமது மந்தையினில் எம்மையும்
சேர்த்துவிடும் மேய்ப்பரே
இயேசுவே சேர்த்துவிடும் மேய்ப்பரே

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்

வேறு ஒன்றும் கேட்கவில்லை நாதா
உம்மை மறவாத நெஞ்சம் ஒன்று வேண்டும்
வேறு ஒன்றும் கேட்கவில்லை நாதா
உம்மை மறவாத நெஞ்சம் ஒன்று வேண்டும்
இறவாத உமதன்பு நாமம் என்னை விட்டு
அகலாத வரம் தர வேண்டும்
தேவா அகலாத வரம் தர வேண்டும்

ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்
என் இயேசுவே வாரும்
சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்
என் நாதனே வாரும்
என் பாடலைக் கேளும்
என் நாதனே வாரும்

ஆண்டவர் இயேசு வருகின்றார்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
கதறி எம் கன்னத்தில் கண்ணீரும் வரும்வேளை
கையினால் துடைக்கின்றார்
இயேசு கையினால் துடைக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
படைத்திட்ட போதும் உன் பாவத்தை நாளும்
தன் சிலுவையில் சுமக்கின்றார்
இயேசு சிலுவையில் சுமக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
என்னிடம் வாவென்று இருகையை நீட்டும்
என் தேவனை மறக்காதே
என் இயேசுவை மறக்காதே

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு
மனதில் நீங்கும் துன்பம்
துயர் நீங்க வந்த தங்கம்
இயேசு யூத ராஜ சிங்கம்
இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்
இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன்
வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன்
தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு
இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு
தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு
இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்
இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன்
ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்
இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு

அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

ஆயனே தூயனே வாரும்

ஆயனே தூயனே வாரும்
இந்த பாவியை உம் மந்தையில் சேரும்
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன்
உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
கேளுங்கள் தரப்படும் என்றவர்
நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
தாயினை மிஞ்சிடும் அன்பையே
உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

அன்புள்ள மானிடனே

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

அழைக்கின்ற தெய்வம் இவர் போல
இந்த உலகத்தில் கிடையாது
அடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர்
அவர் அண்டையில் சென்றுவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

மானிடன் செய்யா அற்புதத்தை
இவர் செய்தே காட்டியவர்
மரித்தபின் உயிர்த்த தெய்வமென்று
இவர் மகிமையைப் பாடிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உன்னைப் போலவே பிறர் மீதும்
நீ அன்பினைக் காட்டிவிடு
இதுவே இயேசுவும் விரும்புவது
என்று இன்றே மனந்திரும்பு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உள்ளத்தில் இருக்கும் தேவனுக்கு
உன் உடம்பே ஆலயமாம்
அந்த உடலினை வீணே கெடுக்காதே
உன் பழக்கத்தை மாற்றிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு
அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வாழ்வு என்ற பயணத்தில் –நான்
வழி தவறிச் சென்றேனே
வாழ்வு என்ற பயணத்தில் – நான்
வழி தவறிச் சென்றேனே
பாவச் சேற்றில் எனை மீட்ட
பரமன் உம்மைத் துதிக்கின்றேன்
பாவச் சேற்றில் எனை மீட்ட பரமன்
உம்மைத் துதிக்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே

உமது அடிச்சுவட்டில் புதிய வாழ்வைத் தொடங்குகிறேன்
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
இறப்பின் விடுதலையை உலகில் மெய்ப்பித்த இரட்சகரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே

வேதத்தின் பொருள் நீரே – ஜீவ நாதத்தின் ஒளி நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
தவத்தின் தலைவராகி எம்மைக் காத்திட வந்தவரே
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ

மந்தைக் கூட்டத்துக்குள் நானும் சிந்தையைப் பறிகொடுத்தேன்
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
மன்னுயிர் காத்திடவே செஞ்சிலுவை சுமந்தவரே

என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்

Popular Posts

My Favorites

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11 "மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது" 1.யோவான் 2:8 இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம்...