பாடல்கள்

Home பாடல்கள்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு

அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

பேரின்பக் கன்மலையே என்னை

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
யாரையும் நம்பி விடேன்  இந்த
நானில மீதினிலே
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்
வேறு துணை இல்லையே
இளைப் பாறுதலைத் தாரும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

தேசத்தை விட்டு வந்தேன் பிள்ளைப்
பாசத்தையும் பிரிந்தேன்
நேசத்தைத் தந்து என்னை இங்கு
மீட்டவரே வாரும்
ஆயனே இங்கு வந்து  என்னை
ஆதரித்துக் கொள்ளும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

வேதத்தில் மனம் லயித்தேன் உமது
போதனையில் திளைத்தேன்
என் மகனே என்று என்னை நீர்
கூப்பிட்ட குரல் கேட்டேன்
அந்நியன் என்றே என்னை கணமும்
தள்ளி விடாதேயும்

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்

அந்தி பகல் மறையும் அப்பா உன்
ஆறுதல் மறைந்திடுமோ
மந்திர மாயமெல்லாம் உமது
மலரடி கண்டிடுமோ
ஐயனே அழைக்கின்றேன் என்
அருகினில் வாருமையா

பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே  என்னை
வாரி அணைத்துக் கொள்ளும்
பேரின்பக் கன்மலையே …

இதயத் தூய்மையோடு எங்கள் இயேசுவை

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு
மனதில் நீங்கும் துன்பம்
துயர் நீங்க வந்த தங்கம்
இயேசு யூத ராஜ சிங்கம்
இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

வானத்திலும் பூமியிலும் மகிமையுள்ள தேவன்
இயேசு வார்த்தையோடு மாமிசமாய் வந்த நல்ல யூதன்
வாக்குகளைத் தந்து நம்மை காக்கும் நல்ல நாதன்
தம்மில் வாஞ்சையுள்ள அடியவராய் மனந்திருப்பும் நேசன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

புதியதொரு வாழ்வைத் தர இயேசுவிடம் கேளு
இந்த மனித வாழ்வின் நடைமுறைக்கு வழிவகுத்தவர் யாரு
தினமுமவர் நாமத்தினால் தரிசனங்கள் கூறு
இயேசு மனந்திரும்பு என்று மட்டும் சொல்லுகிறார் பாரு

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

அன்பு கூர்ந்து மனுக்குலத்தை மீட்க வந்த நாதன்
இயேசு ஆவியிலே தரிசனமாய் உயிர்த்தெழுந்த ஜீவன்
ஆண்டவராய் அவனியிலே வந்துதித்த பாலன்
இயேசு மீண்டுமொரு தலைமுறைக்கு வரவிருக்கும் தேவன்

இதயத் தூய்மையோடு
எங்கள் இயேசுவை நீ பாடு

நீர் கொடுத்த வாழ்வு இது

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன்
தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்
மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன்
மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன்
ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்
நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன்
நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் பெற்றேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா

இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன்
இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன்
கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்

நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவா
நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா
பார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா
பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா…

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்
பவனியும் வருகின்றார்
கதறி எம் கன்னத்தில் கண்ணீரும் வரும்வேளை
கையினால் துடைக்கின்றார்
இயேசு கையினால் துடைக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
அடைக்கலம் கொடுக்கின்ற ஆண்டவர் இயேசு
உன் அண்டையில் வருகின்றார்
படைத்திட்ட போதும் உன் பாவத்தை நாளும்
தன் சிலுவையில் சுமக்கின்றார்
இயேசு சிலுவையில் சுமக்கின்றார்

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
உன்னிலும் என்னிலும் வாழ்கின்ற நேசரை
என் நாளும் வெறுக்காதே
என்னிடம் வாவென்று இருகையை நீட்டும்
என் தேவனை மறக்காதே
என் இயேசுவை மறக்காதே

விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்
உன்னிலும் வாழ்கின்றார்
கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்
என் இயேசு வாழுகின்றார்

என்னிடம் வாவென்று இயேசு

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தை
நீயேன் சுமக்கின்றாய்
என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல்
தருவேன் என்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்
வார்த்தையில் மாமிசமாய்  இயேசு
மானிடராய் உதித்தார்

ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்
ஆவியில் அசைவாடி எங்கள்
உணர்விலும் வாழுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
வேதத்தின் வார்த்தையினால்  தேவன்
ஜீவனைக் கொடுக்கின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்
அன்பால் எமை மீட்டு  நல்ல
வழியினைக் காட்டுகின்றார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்
ஆண்டவர் இயேசுவிடம்  உன்னை
அடைக்கலம் கொடுத்து விட்டால்

உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்
உன்னையும் மீட்டுக் கொள்வார்  நித்திய
வாழ்வையும் தந்திடுவார்

என்னிடம் வாவென்று  இயேசு
இரு கையை நீட்டுகிறார்
அழைக்கின்ற தேவனையே என்றும்
ஆண்டவனாய் வணங்கு

ஆண்டவர் இயேசு வருகின்றார்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பாவத்தின் இருளைப் போக்கியவர்
பாரச் சிலுவையைத் தோளில் தூக்கியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்
பன்னிரு சீடரைக் காட்டியவர்
பரம தந்தையின் பாதையைக் காட்டியவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
மறுபடி வருவேன் என்ற தெய்வம்
எங்கள் மனுக்குலம் காக்கவே வந்த தெய்வம்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்
தனக்கென்ற வழியைக் காட்டியவர்
இந்த தாரணி வணங்கிடும் தெய்வமவர்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்

வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
வேதத்தின் வார்த்தையில் பொருளானார்
நல்ல வாக்குத் தத்தங்களைத் தரலானார்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்
பாக்கியம் பெற்றிட இவர் நாமம்
என்றும் நோக்கியே ஸ்தோத்திர துதி செய்வோம்

ஆண்டவர்  இயேசு வருகின்றார்
தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்
வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்
மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்
ஆண்டவர்  இயேசு வருகின்றார்

மரண இருளில் இருந்த எமக்கு

மரண இருளில் இருந்த எமக்கு
ஒளியைத் தந்தவர் யார்
இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்
தூக்கி எடுத்தவர் யார்
தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

தேவ சாயல் எமக்குத் தந்த
தேவ மைந்தனும் யார்
இங்கு நாளும் நம்மை வழி நடத்தும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மாய உலகில் வாழும் நமக்கு
வாழ்வைத் தந்தவர் யார்
எங்கள் ஆயனாக இங்கு வந்த
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

திசைகள் மாறிச் சென்ற நமக்கு
உதவி செய்தவர் யார்
என்றும் மேய்ப்பராகி வழியைக் காட்டும்
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

மனித வாழ்வின் நடை முறைக்கு
வழி வகுத்தவர் யார்
எம்மை மனந்திருப்பி அணைத்துக் கொண்ட
இயேசு ஒருவர் தான்
இயேசு ஒருவர் தான்…..

Popular Posts

My Favorites

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27 "தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்". நீதி. 2:8 விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது....