பாடல்கள்

Home பாடல்கள்

திடன் கொள் மகனே என்றவர்

திடன் கொள் மகனே என்றவர்
தினம் வந்து திருத்தியே நடத்துவார்
பலங்கொள்ள அவர் என்னை
பரிசுத்தஆவியால் பரிவுடன் நிரப்புவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

விசுவாசிகளே விசுவாசிகளே

விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே
விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே
சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே
துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

இராஜாதி இராஜா மண்மீது வந்து

இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு

அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

எனையாளும் இயேசு நாதா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

இயேசுவைத் தேடிடுவாய் மனமே

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்
பாவத்தின் பிடியினின்று உன்னை
மீட்டெடுக்கும் தேவன் – அந்த தூயனாம் இயேசு

ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
ஆவியானவர் எங்கு உண்டோ – அங்கு
விடுதலை உனக்கு உண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு
பாவியாகி நீ மரிப்பதினாலே
உனக்கென்ன சுகமுண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
ஒரே ஒருதரம் மரிப்பதும் – பின்பு
நியாயத்தீர்ப்பினை அடைவதுமே
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து
மனிதனுக்கென்றே வேதத்தில்
நியமிக்கப்பட்டே இருப்பதையுணர்ந்து

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
இயேசுவின்றி ஒரு தெய்வத்தினாலும்
இரட்சிப்புக் கிடைக்காது
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு
அவர் வார்த்தையை நம்பியே மனந்திரும்பு
மன்னிப்பு உனக்கு உண்டு

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

இயேசுவைத் தேடிடுவாய் மனமே
இயேசுவைத் தேடிடுவாய்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
அவர் அண்டையிலே வந்து சேருது

வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
வேதத்திலே மனம் சேருது 
வேத நாயகனைத் தான் தேடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது
பேரின்பப் போதனை தந்தவரை
தினம் நன்றியினால் துதி பாடுது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தேவனின் பிள்ளைகள் ஆகிட
இவர் நெஞ்சங்கள் இங்கே ஏங்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது
தாகங்கள் தீர்த்திடும் ஜீவ நீரை
எமக்குத் தாருங்கள் என்றே கேட்குது

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
பாவங்கள் போற்றிடும் தேவனை
இங்கு பார்த்திடக் கண்கள் ஏங்குது
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்
வாருங்கள் இயேசுவின் பாதத்தில்
ஜென்ம சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
நித்திய ஜீவனை நாமடைய
அந்தச் சத்திய நாதனை நாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்
கேட்டதைத் தந்திடும் தேவனிடம்
எங்கள் கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம்

அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அன்புள்ளங்கள் இங்கே கூடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது
அந்தக் கன்மலையைத் தான் தேடுது….

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
உமதண்டையே எமக்குப் பரலோகமே
உமதண்டையே எமக்குப் பரலோகமே
அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

வழி நடத்த வாரும் இயேசுவே

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

கூட்பிட்ட குரல் கேட்டு ஓடிவந்தீர்
என்னைக் குழந்தையாய் அணைத்துமே தேற்றுகிறீர்
குற்றத்தை மன்னிக்கும் பெருந்தகையே
என் கர்த்தரே உம்மால் பிழைத்துக் கொண்டேன்
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

சித்தம் இரங்கியே வந்துவிட்டீர்
என் சத்தம் உம் காதில் விழுந்தனவோ
இத்தரை வாழ்வெல்லாம் மாயமன்றோ
உமது நித்திய ஜீவனே நிலைக்குமன்றோ
கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்

நித்தம் உம் வார்த்தையால் பிழைத்திருப்பேன்
உமது சித்தத்தின் நினைவுக்கே கீழ்ப்படிவேன்
எத் திசை சென்றாலும் உமதன்பை
என் இதயத்தில் ஏந்தியே எடுத்துச் செல்வேன்

கர்த்தாவே என்று நான் கதறி அழுகையிலே
என் மகனே என்று நீர் எனை வந்து அணைத்துவிடும்
உம்மையே தஞ்சமென்று நினைக்கின்றேன் தினமும்
என்னையே வழிநடத்த இரங்கி நீர் வந்துவிடும்

Popular Posts

My Favorites

நீர் கொடுத்த வாழ்வு இது

https://youtu.be/eWl3SJDxHVs?si=WTNpe2zkI8zOn9Iq நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாநீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாபார் முழுக்க உமதன்பு பரவுகின்றதல்லவாபாவியெம்மை மீட்க வந்த...