முகப்பு தினதியானம் கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்