முகப்பு தினதியானம் மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்

மார்ச் 21

“மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.” எபி. 11:16

மேலான தன்மையே அல்ல மேலான நிலைமையை அல்ல. மேலான தேசத்தையே விரும்பினார்கள். முற்பிதாக்கள் விரும்பினது இதுதான். அப்போஸ்தலரும் இதையே நாடினார்கள். எந்த உண்மை கிறிஸ்தவனும் இதைத்தான் நாடுவான். நாமும் மேலான பரம தேசத்தை நாடுகிறோமா? ஒரு நித்திய தேசம் நமக்குண்டு. அது வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவை விசுவாசித்து மரண பரியந்தம் உண்மையாயிருக்கிற யாவருக்கும் அது வருத்தம் இல்லை. துன்பம் இல்லை, கண்ணீர் இல்லை, கவலை இல்லை. அது இளைப்பாறும் இடம். அந்த மேல் வீட்டில் அன்பு நிறைந்திருக்கும். சத்துருக்கள் இல்லை. பாவம் செய்யும் மனிதனும் மாய்மாலம் நிறைந்த கிறிஸ்தவர்களும் அங்கே இல்லை. பொறாமையுள்ள சகோதரர் அங்கு இல்லை.

அது பூரண அன்பும் இடைவிடாத துதியும் நிறைந்த ஓரிடம். அங்கே எல்லாரும் தேவனை நேசிப்பார்கள், தேவன் எல்லாரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் பிறரை நேசிக்கும் ஸ்தலம். அது பரிசுத்தம் நிறைந்த வீடு. அங்கே பாவமில்லாததால் ஒவ்வொருவரும் இயேசுவைப்போலவே இருப்பார்கள். எங்கும் எப்போதும் மகிழ்ச்சிப் பரவசம், பரிசுத்தம், கலக்கமற்ற ஆறுதல்தான் அங்கு உண்டு. அங்கே இயேசுவை முகமுகமாய் பார்க்கலாம். அங்கே தேவன் தமது மகிமையை வெளிப்படையாகக் காண்பிக்கிறார். நமது ஆசைகளெல்லாம் நிறைவேறும் இடம் அது. எல்லா ஆத்துமாவும் மகிமையின் நிறைவுப்பெற்று பொங்கி வழியும். அதுN நமது நித்திய உண்மை தேசம். ஆத்துமாவே நீ அதை வாஞ்சிக்கிறாயா? அதுவே உனக்கு போதும் என்று நினைக்கிறாயா? கர்த்தருடைய ஜனங்களுக்கு இருக்கும் இளைப்பாறுதல் அதுவே.

வரும் மகிழ்ச்சி கண்டு
பயம் அகற்றுவோம்
தேவன் நம் சொந்தமென்று
கண்ணீரைத் துடைப்போம்.