முகப்பு தினதியானம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

மார்ச் 22

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.” எபி. 6:17

சுபாவத்தின்படி மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் புத்திரர். மற்றவர்களைப்போலவே அக்கிரமக்காரர். எது மற்றவர்கள். கெட்டுப்போனவர்கள். தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாகவும் கலகம்பண்ணினார்கள். எந்த நற்கிரியைகளையும் தேவன் நமக்கு செய்ய நாம் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலே தமது குமாரன் இயேசு கிறிஸ்துவால் வாக்குத்தத்தங்களையும் சுதந்தரத்தையும் கிருபையால் ஏற்படுத்தியிருக்கிறார். நம்மையும் ஒரு பொட்டென எண்ணினபடியால் தன் ஆத்துமாவை வியாகுலத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நம் மூலம் தேவனுக்கு மகிமையுண்டாக அவரில் ஆம் என்றும் ஆமென் என்றும் இரு;கிற வாக்குத்தத்தங்களுக்கு நம்மைப் பாத்திரராக்கினார்.

ஆகையாம் நாம் கிறிஸ்துவோடு சம்மந்தப்பட்டிருக்கிறபடியினாலும், கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் நமக்கு பங்கிருக்கிறபடியினாலும், வேதத்தின் சகல வாக்குத்தத்தங்களுக்கும் நம்மை சொந்;தரக்காரர் ஆக்கினார். நித்தியி ஜீவனும் என்றுமுள்ள நீதியும், இம்மைக்கும் மறுமைக்கும் நமக்கு வேண்டிய சகலமும் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுதந்தரர், ஆகையால் நமது சுதந்ரத்தில் எல்லாம் இருக்கிறது. இந்தச் சுதந்தரம் நமக்கு கிருபையினால் வந்ததுது. இந்தக் கிருபை கிறிஸ்துவால் கிடைத்தது. மோட்சத்துக்கு நம்மை நடத்துகிறது. நன்றி செலுத்த நம்மை ஏவுகிறது. நான் சுதந்தரவாளியா? வாக்குத்தத்தங்கள் என் பத்திரமா? அப்படிப்பட்ட சுதந்தரத்துக்கு நான் பாத்திரனாக ஜீவிக்கிறேனோ என்று நாம் நம்மை சோதித்தறியக்கடவோம்.

தேவன் வாக்குப்பண்ணினதை
சுதந்தரிப்போம் எந்நாளும்
அவரில் நிறைவடைவோம்
தேவ நாமம் துதிப்போம்.