ஆயனே தூயனே வாரும்
இந்த பாவியை உம் மந்தையில் சேரும்
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன்
உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ…….
இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
கேளுங்கள் தரப்படும் என்றவர்
நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ……. ஓ…….
இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
தாயினை மிஞ்சிடும் அன்பையே
உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ……. ஓ…….
இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்