இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்
இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு
இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு
இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு
இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு