Home பாடல்கள் சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே