Home பாடல்கள் கல்வாரி அழைக்குது உம்மை

கல்வாரி அழைக்குது உம்மை

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

இயேசு தம்மை சிலுவையிலே
கொன்றிட்ட பாவியரை மன்னிக்கவே
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
நின் கருணைக்கு ஈடில்லையே
நின் கருணைக்கு ஈடில்லையே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே ஆ… ஆ… ஆ…