Home Blog

சிலுவையைச் சுமந்தது போதும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

வருத்தப்பட்டு நாம் பாரம் சுமப்பதை
சகிக்காத மனம் உமக்கு
சிலுவையில் தொங்கிடும் உம்மை கண்டுமே
மனம் திருந்தாத குணம் எமக்கு
வாக்குத்தத்தம் தந்த தேவா
உமது வார்த்தைக்கு கீழ்ப்படிவேன்
சாத்தானின் சோதனைக்கு நீக்கியே
எம்மையும் உம் பிள்ளைகளாய் எண்ணியே மீளும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

எம் கேடான குணத்தையே கண்டு நீர்
பாடுகள் பட்டது போதும்
வாடாத மலரான உமதுள்ளத்தை
தேடாத பாவியெம்மைக் காரும்
முறை  கேடான பாவியென உணர்ந்தோம்
எம் தேவா நம் குறைதன்னைக் கேளும்
யாரோடு நாம் சேர்ந்துகொள்வோம்
எங்கள் ஐயனே ஆறுதலைத் தாரும்

சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்
மனந்திரும்பிடுவேன் இனி நானும்
உமது  மலரடிக்கே திரும்ப வேணும்
சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவே
சிந்தையில் இறங்கியே வாரும்

வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்

வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்
தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது
வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்
தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது

வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது
வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது

இயேசுவின் வார்த்தையில் சுத்தம் உள்ளது
அந்த வார்த்தையில் கர்த்தரின் சித்தமுள்ளது
இயேசுவின் வார்த்தையில் சுத்தம் உள்ளது
அந்த வார்த்தையில் கர்த்தரின் சித்தமுள்ளது
மன மாறுதலைத் தந்துவிடும் அர்த்தமுள்ளது
மன மாறுதலைத் தந்துவிடும் அர்த்தமுள்ளது
தேவ வார்த்தை எங்கள் கால்களுக்கு வெளிச்சமானது

வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது
வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது

இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால்
எங்கள் வாழ்விலே நிம்மதி தேடி வந்தது
இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதால்
எங்கள் வாழ்விலே நிம்மதி தேடி வந்தது
மாசில்லா ஜீவனை மீட்டுக் கொண்டதால்
மாசில்லா ஜீவனை மீட்டுக் கொண்டதால்
அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுவோம்

வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது
வாழ வைக்குது எம்மை வாழ வைக்குது
இயேசுவின் வார்த்தையே வாழ வைக்குது

கல்வாரி அழைக்குது உம்மை

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

இயேசு தம்மை சிலுவையிலே
கொன்றிட்ட பாவியரை மன்னிக்கவே
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
மன்றாடி ஜெபித்த மனுக்குல தேவா
நின் கருணைக்கு ஈடில்லையே
நின் கருணைக்கு ஈடில்லையே

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை ஆ… ஆ… ஆ…

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
பாவமில்லாத நீர் மரித்ததும் ஏன்
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
பாவிகள் மேல் கொண்ட பாசத்தாலோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ
கொடுமையின் கோரத்தைச் சகித்தீரோ

கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
கல்வாரி அழைக்குது உம்மை
கண்ணீர்  சிந்திட வைக்குது எம்மை
ஜீவ பலியாக வந்த தேவமைந்தனே
பாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமே ஆ… ஆ… ஆ…

வழி நடத்த வாரும் இயேசுவே

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
பழியைச் சுமந்து நாங்கள்
பாவக் கடலில் மூழ்கினோமே
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்
எமது படகைச் செலுத்தி
அன்புக் கரையில் சேர்க்க வாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
ஐம்புல ஆசைகளால்
தினமும்  அடிமையாகிப் போனோம்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்
எங்களின் நாயகனே
சத்திய வழியைக் காட்டித் தாரும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
சுதந்திர புருஷர்களாய் உமக்குச்
சொந்த ஜனங்களாக வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்
உமது சுகந்தரும் வார்த்தையினால்
நாங்களும் சுகத்தை அடைய வேண்டும்

வழி நடத்த வாரும் இயேசுவே
வழி நடத்த வாரும்
வழி நடத்த வாரும் மேய்ப்பரே
வழி நடத்த வாரும்

விசுவாசிகளே விசுவாசிகளே

விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே
விசுவாசிகளே விசுவாசிகளே
விரைந்து வாருங்களே
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து பாடுங்களே

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே
சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்
சங்கீதம் பாடுங்களே
தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி
கீர்த்தனம் செய்யுங்களே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே
துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்
எழுந்து வருவாரே இங்கே
துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு
மகிழ்ந்து வருவாரே

 

                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே
                விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்
இயேசுவுக்காய் இங்கே பாட வந்தோம்
வாக்குகளால் எம்மை வாழ வைக்கும்
இயேசுவுக்காய் இங்கே பாட வந்தோம்
இரக்கமுள்ள எங்கள் தேவனுக்கே
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்திடுவோம்
இரக்கமுள்ள எங்கள் தேவனுக்கே
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்திடுவோம்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

ஏற்கெனவே எம்மில் அன்புகூர்ந்த
காரணத்தால் இங்கு இயேசு வந்தார்
ஏற்கெனவே எம்மில் அன்புகூர்ந்த
காரணத்தால் இங்கு இயேசு வந்தார்
பாவத்திலே பலியாகும் நம்மை
காத்திடவே ஜீவபலியுமானார்
பாவத்திலே பலியாகும் நம்மை
காத்திடவே ஜீவபலியுமானார்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

நன்றியுடன் எங்கள் தேவனுக்காய்
நல்ல  கனிகளை மண்ணில் கொடுத்திடுவோம்
நன்றியுடன் எங்கள் தேவனுக்காய்
நல்ல  கனிகளை மண்ணில் கொடுத்திடுவோம்
அன்பினிலே என்றும் நிலைத்திருந்து
எங்கள் மேய்ப்பரின் வழியிலே நடந்து செல்வோம்
அன்பினிலே என்றும் நிலைத்திருந்து
எங்கள் மேய்ப்பரின் வழியிலே நடந்து செல்வோம்

மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
பாட்டுக்களால் அவர் நாமத்தினை
பாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்
மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்
பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்

எட்டுத் திசைகளிலும் இருந்தே

எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
இயேசுவின் சத்தியத்தில்
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்
இயேசுவின் சத்தியத்தில்
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்
முன்னர் குறிக்கப்பட்டு
கர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்
முன்னர் குறிக்கப்பட்டு
கர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்
இத்தரை மீதினிலே
இனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்
இத்தரை மீதினிலே
இனி நாம் இயேசுவுக்காய் வாழுவோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்

சத்தியத்தை அறிந்தே
நித்திய தேவனை ஸ்தோத்தரிப்போம்
சத்தியத்தை அறிந்தே
நித்திய தேவனை ஸ்தோத்தரிப்போம்
பக்தியுடன் தொழுதே
இயேசுவின் நாமத்தைப் பாடிடுவோம்
பக்தியுடன் தொழுதே
இயேசுவின் நாமத்தைப் பாடிடுவோம்
கர்த்தரின் பிள்ளைகளாய்
இனி நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம்
கர்த்தரின் பிள்ளைகளாய்
இனி நம்மை ஒப்புக் கொடுத்திடுவோம்
எத்தனை துன்பத்தையும்
அவரால் முற்றும் ஜெயம் கொள்ளுவோம்
எத்தனை துன்பத்தையும்
அவரால் முற்றும் ஜெயம் கொள்ளுவோம்

எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்
எட்டுத் திசைகளிலும் இருந்தே
கூட்டியே சேர்க்கப்பட்டோம்

வார்த்தையில் தேவன் வந்தார்
எம்மை வாழவைக்கப் பிறந்தார்
வார்த்தையில் தேவன் வந்தார்
எம்மை வாழவைக்கப் பிறந்தார்
பாவத்தில் மீட்டெடுத்தே
எமக்காய் பாடுகள் அனுபவித்தார்
பாவத்தில் மீட்டெடுத்தே
எமக்காய் பாடுகள் அனுபவித்தார்
அன்பு சொரிந்தெமக்காய்
அவர் அல்லல் பல அடைந்தார்
அன்பு சொரிந்தெமக்காய்
அவர் அல்லல் பல அடைந்தார்
வள்ளலின் பேரன்பிலே
இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
அன்பு வலை வீசி எம்மை ஆண்டிடவே
நீர் அருள் வடிவாக வந்த தேவமகன்
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
துன்பச் சுமை நீக்க வந்த பேரொளியே
எங்கள் தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்
தூயவரே உம்மைப் பணிந்து பாடுகிறோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
தந்தை உம்மைச் சிந்தையிலே ஏற்றிடவே
நாளும் தேடுகின்ற உள்ளங்களோ கோடி இங்கே
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
அன்பு வெள்ளம் பெருகி இங்கே பாயுதப்பா
உமது ஆறுதலைக் காண வந்த வேளையிலே
ஆறுதலைக் காண வந்த வேளையிலே

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே
சத்தியத்து நாயகனாய் வந்தவரே
உலகச் சர்வ வல்ல தேவனாகி நின்றவரே

நித்தியத்து ஜீவனையும் தாருமையா
நித்தியத்து ஜீவனையும் தாருமையா
இயேசு நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்
நாயகனே மனமிரந்து வேண்டுகின்றோம்

வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
ஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
தேவ ராஜ்ஜியத்தைத் தேடி இங்கே நாம் வருவோம்
வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே
நம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனே

என்னோடு வாழும் என் இயேசு நாதன்

என்னோடு வாழும் என் இயேசு நாதன்

என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்
கண்மூடி நானும் கால் மாறும் வேளை
கை நீட்டி வழி காட்டினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

மண்மீது நானும் தவிக்கின்ற போது
விண்ணின்றும் இரங்கி வந்தார்
மண்மீது நானும் தவிக்கின்ற போது
விண்ணின்றும் இரங்கி வந்தார்
பண்ணோடு நானும் துதி பாடும் போது
கலங்காதே எனத் தேற்றினார்
பண்ணோடு நானும் துதி பாடும் போது
கலங்காதே எனத் தேற்றினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

என்நாளும் வந்து என் இயேசு ராஜன்
என்னோடு உறவாடுவார்
என்நாளும் வந்து என் இயேசு ராஜன்
என்னோடு உறவாடுவார்
முன்நாளில் செய்த என் பாவம் நீக்கி
தன்னோடு உறவாக்கினார்
முன்நாளில் செய்த என் பாவம் நீக்கி
தன்னோடு உறவாக்கினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

கண்மூடும் வேளையிலும் கலங்காதே என்று
கண்ணீரைத் துடைக்கின்றவர்
கண்மூடும் வேளையிலும் கலங்காதே என்று
கண்ணீரைத் துடைக்கின்றவர்
சொந்தங்கள் எல்லாம் இனி நானே என்று
என் வாழ்வில் இறையானவர்
சொந்தங்கள் எல்லாம் இனி நானே என்று
என் வாழ்வில் இறையானவர்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்
என்னோடு வாழும் என் இயேசு நாதன்
என் வாழ்வில் பெலனாகினார்

நான் வணங்கும் தெய்வமே

நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே
வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே
வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே
என்னை வழிநடத்தும் இயேசுவே

பாதையைக் காட்டியே உலகை காத்திடும் இயேசுவே
பாதையைக் காட்டியே உலகை காத்திடும் இயேசுவே
ஆயனே ஐயரே எமக்கு ஆறுதல் தாருமே
ஆயனே ஐயரே எமக்கு ஆறுதல் தாருமே

நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்துதான் பாடினேன்
தேனிலும் இனியது உம் நாமம் தெரிந்துதான் பாடினேன்
வானிலும் மண்ணிலும் உமது வல்லமை விளங்குதே
வானிலும் மண்ணிலும் உமது வல்லமை விளங்குதே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாருமே
நீதியின் தேவனே எங்கள் நெஞ்சத்தில் வாருமே
ஆதியில் வார்த்தையாய் வந்த ஆண்டவர் இயேசுவே
ஆதியில் வார்த்தையாய் வந்த ஆண்டவர் இயேசுவே

நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
இந்த மானிலத்தை நொடியிலே வகுத்த மாசில்லா ஜோதியே
நான் வணங்கும் தெய்வமே என்னை வழிநடத்தும் இயேசுவே

Popular Posts

My Favorites

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்

மார்ச் 27 "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்." யாக் 4:3 கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம்...