Home Blog Page 2

மகிமை நிறைந்த தேவனின்

மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து களி கூர வா
மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை
மகிழ்ந்து களி கூர வா
அவர் வருகை நெருங்கிடும் நேரமிதே நீ
மனந்திரும்பியே வா
அவர் வருகை நெருங்கிடும் நேரமிதே நீ
மனந்திரும்பியே வா
நீ மனந்திரும்பியே வா

பலியினாலே உன்னைக் காக்கவந்த என்
ரபியை நோக்கியே வா
பலியினாலே உன்னைக் காக்கவந்த என்
ரபியை நோக்கியே வா
இரட்சிப்பைத் தந்துன்னை மீட்கும் ஐயனென்
இயேசுவை நோக்கியே வா
இரட்சிப்பைத் தந்துன்னை மீட்கும் ஐயனென்

இயேசுவை நோக்கியே வா
எந்தன் இயேசுவை நோக்கியே வா

கல்லிலும் முள்ளிலும் கடவுளேது நீ
கர்த்தரை நோக்கியே வா
கல்லிலும் முள்ளிலும் கடவுளேது நீ
கர்த்தரை நோக்கியே வா
உன்னை மனிதனாகவே சிருஷ்டித்த எந்தன்
தேவனைத் தேடியே வா
உன்னை மனிதனாகவே சிருஷ்டித்த எந்தன்
தேவனைத் தேடியே வா
எந்தன் தேவனைத் தேடியே வா

கருணை பொழியும் அவர் அன்பை நீயும்
கல்வாரியில் பார்த்திட வா
கருணை பொழியும் அவர் அன்பை நீயும்
கல்வாரியில் பார்த்திட வா
எம்மைக் காத்திடும் மேய்ப்பரின்
மந்தையில் நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா
எம்மைக் காத்திடும் மேய்ப்பரின்
மந்தையில் நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா
நீயும் சேர்ந்து வாழ்ந்திடவே வா

எங்களைக் காத்திடும் இயேசுவே உன்னையும்
நேசிக்கிறார் ஓடிவா
எங்களைக் காத்திடும் இயேசுவே உன்னையும்
நேசிக்கிறார் ஓடிவா
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் ஓடிவா

இயேசு ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னை நேசிக்கிறார் ஓடிவா
இயேசு ஜீவிக்கிறார் ஓடிவா
உன்னை நேசிக்கிறார் ஓடிவா

அன்பு பொழிந்தோனே

அன்பு பொழிந்தோனே
எம்மை ஆதரிக்கும் தெய்வமே
அன்பு பொழிந்தோனே
எம்மை ஆதரிக்கும் தெய்வமே
இறைமகன் ஆக வந்தே
எங்கள் இன்னல் களைந்தவரே
இறைமகன் ஆக வந்தே
எங்கள் இன்னல் களைந்தவரே

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

நம்பிக்கை ஒளியைத் தந்தே
நாதனே நல்வழி காட்டிவைத்தீர்
நம்பிக்கை ஒளியைத் தந்தே
நாதனே நல்வழி காட்டிவைத்தீர்
உன்னதமானவரே உள்ளத்தில்
ஒளிதர வேண்டி நின்றோம்
உன்னதமானவரே உள்ளத்தில்
ஒளிதர வேண்டி நின்றோம்

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

பேரின்பக் கன்மலையே எங்கள்
கோட்டையும் நீரல்லவோ
பேரின்பக் கன்மலையே எங்கள்
கோட்டையும் நீரல்லவோ
வானம் பூமி அழிந்தாலும்
உமது வார்த்தைகள் அழிவதில்லை
வானம் பூமி அழிந்தாலும்
உமது வார்த்தைகள் அழிவதில்லை

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

அதிசயமானவரே உமது
மகிமையைப் பாட வந்தோம்
அதிசயமானவரே உமது
மகிமையைப் பாட வந்தோம்
ஆண்டவரே உமக்காய் ஆரோகண
சங்கீதம் பாட வந்தோம்
ஆண்டவரே உமக்காய் ஆரோகண
சங்கீதம் பாட வந்தோம்

இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்
இயேசப்பா ஸ்தோத்திரம்
இறைமகனே ஸ்தோத்திரம்

இடையில் என் பாடல்

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது
இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது
படகில் நான் பயணம் செய்கின்றபோதும்
என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும்
படகில் நான் பயணம் செய்கின்றபோதும்
என் பரமனின் பலமே எனைக் கரை சேர்க்கும்
இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

இடைவரும் துன்பம் எது வந்த போதும்
என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும்
இடைவரும் துன்பம் எது வந்த போதும்
என் இயேசுவுக்காய் அதைத் தாங்கிடக் கூடும்
பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே
திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும்
பலமுள்ள பரிசுத்த ஆவியினாலே
திடன்கொள்ள என்னை அவர் நிரப்பிடக்கூடும்

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார்
என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன்
கடையவன் என்றென்னைக் கைவிட மாட்டார்
என் நடைமுறை வாழ்வுக்கு வழிதந்த மேய்ப்பன்
உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன்
இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை
உலகுக்கு ஒளியாக உயிர்தந்த நாதன்
இவருக்கு இணையாக இனித் தெய்வம் இல்லை

இடையில் என் பாடல் நின்றும் விடாது
என் இயேசுவின் அன்பும் குறைந்தும் விடாது

எத்தனை பாடலை நான்

எத்தனை பாடலை நான்….

எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
நித்தியமானதொரு ஜீவியத்தைக் காட்டும்
தேவனின் பாடலுக்கே மகிமையுண்டு
அந்த சத்தியப் பாடலினைப் பாடுவதால்
சத்தியப் பாடலினைப் பாடுவதால் தினமும்  
இத்தரை மீதினிலே மகிழ்ச்சியுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
உத்தமராக எம்மை வழி நடத்தும் இயேசு
வார்த்தையில் தானே நல் ஜீவனுண்டு
அந்த சத்திய நாதனின் பாட்டினிலே
சத்திய நாதனின் பாட்டினிலே நல்ல
நித்திய வாழ்வுக்கும் வழியுமுண்டு
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா
சித்தம் கொண்டே என்னை சீர் செய்யும்
இயேசுவின் அன்புக்கு முன்னெதுவும் ஈடாகுமா
எத்தனை பாடலை நான் பாடியபோதுமெந்தன்
கர்த்தரின் பாடலுக்கு இணையாகுமா

நானுந்தன் பிள்ளையென ஆனதும்

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

அப்பா பிதாவே என்று தினமும் நான் 
அழைத்தேதான் கூப்பிடுவேன்
அப்பா பிதாவே என்று தினமும் நான் 
அழைத்தேதான் கூப்பிடுவேன்
தப்பாமல் வந்து என் துதியை
நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே
தப்பாமல் வந்து என் துதியை
நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

ஸ்தோத்திரம் சொல்லிடும் வேளையில்
என் மீட்பரே எனை வந்து தேற்றிவிடும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
பாமாலை பலநூறு பாடவேணும்
நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும்
பாமாலை பலநூறு பாடவேணும்

நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
யாரெந்தன் வேதனையைப் போக்குவார்
என் இயேசுவே என் துன்பம் நீக்கினார்
நானுந்தன் பிள்ளையென ஆனதும்
நீரெந்தன் தந்தையென ஆகினீர்

உத்தமமானவரின் உபதேசம்

உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே

சுத்தமுள்ள ஒரு ஜீவியமும்
தூய்மையுள்ள ஒரு ஊழியமும்
சுத்தமுள்ள ஒரு ஜீவியமும்
தூய்மையுள்ள ஒரு ஊழியமும்
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
அவர் காட்டிய பாதையில் சென்றிடுவோம்
கர்த்தருக்கென்றே செய்து கொண்டு
அவர் காட்டிய பாதையில் சென்றிடுவோம்
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே

எத்தனை துன்பத்தை நீக்கியவர்
செய்யும் அற்புதங்களுக்கு அளவே இல்லை
எத்தனை துன்பத்தை நீக்கியவர் செய்யும்
அற்புதங்களுக்கு அளவே இல்லை
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நம்மை வாழ்விக்கச் செய்யும் பரிகாரங்கள்
நித்தமும் அவர் செய்யும் அதிசயங்கள்
நம்மை வாழ்விக்கச் செய்யும் பரிகாரங்கள்

உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
எப்பவோ அவர் சொன்ன கற்பனைகள்
இப்பவும் உனைக் காக்க துணையாகுதே
உத்தமமானவரின் உபதேசம்
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே
உன்னை சத்திய பாதைக்கு வழிகாட்டுதே….

எனையாளும் இயேசு நாதா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
படு பாவியான எம்மை
பரிசுத்தமாக்கினீரே
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
கணமேனும் உமது அன்பை
மறவாத மனத்தைத் தாரும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்
இனிமேலும் உமது வழியில்
எம்மை வழுவாது காத்துக் கொள்ளும்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
தாயின் கருவில் எம்மை
நீர் முன்னறிந்து கொண்டதாலே
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
இன்றெம்மைச் சேர்த்துக் கொண்டீர்
இறைநாமம் பாட வைத்தீர்
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா
நிறைவான ஆசி தந்து
எமைக் காக்க வாரும் தேவா

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
அன்பின் வழியைக் காட்டி
அடைக்கலம் தந்ததாலே
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
நன்றியோடு துதி செய்வோம்
ஸ்தோத்திரங்கள் சொல்ல வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்
மகிழ்வோடு உமது வழியில்
களி கூர்ந்து நடந்து வந்தோம்

எனையாளும் இயேசு நாதா
துணையாக வாரும் தேவா
எனையாளும் இயேசு நாதா

ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்

ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே

தேவாதி தேவன் ஐயா
உம்மை நெஞ்சுருகிப் பாடுகிறேன்
தேவாதி தேவன் ஐயா
உம்மை நெஞ்சுருகிப் பாடுகிறேன்
வானாதி வானத்திலும் உயர்ந்து உம்
வல்லமைதான் விளங்குதே
வானாதி வானத்திலும் உயர்ந்து உம்
வல்லமைதான் விளங்குதே

ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே

நீதியுள்ள தேவன் உமது நாமத்தை
நாமத்தை நெஞ்சுருகி பாடுகிறேன்
நீதியுள்ள தேவன் உமது நாமத்தை
நாமத்தை நெஞ்சுருகி பாடுகிறேன்
ஜாதி மத பேதமில்லை
உமது சன்னிதி தான் ஆனந்தமே
ஜாதி மத பேதமில்லை
உமது சன்னிதி தான் ஆனந்தமே

ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே

என்னிதயம் பொங்குதையா
உமது  ஜீவனுள்ள வார்த்தையினால்
என்னிதயம் பொங்குதையா
உமது  ஜீவனுள்ள வார்த்தையினால்
கண்ணெடுத்துப் பாருமைய்யா
உமக்காய் பண்ணமைத்துப் பாடிடுவேன்
கண்ணெடுத்துப் பாருமைய்யா
உமக்காய் பண்ணமைத்துப் பாடிடுவேன்

ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன்
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே
எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு
தெய்வம் கண்டதில்லை இயேசுவே

நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  

ஏலேலோ……. ஏலேலோ……. ஏலேலோ……. ஏலேலோ…….

நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  
நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா 
காசு பணம் கூடவரப் போகுதா  
பண ஆசையினால் நீயழியப் போறீயா
நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  
நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா 

இருள் நிறைந்த உலகம் இந்த கடலிலே
எழும் பாவம் என்னும் பெரும்புயலாய் அலைகளே
இருள் நிறைந்த உலகம் இந்த கடலிலே
எழும் பாவம் என்னும் பெரும்புயலாய் அலைகளே
தொல்லை தரும் மாயையை நீ தாண்டியே
நம்ம இயேசுவையே நோக்கி நீயும் ஓடிவா
தொல்லை தரும் மாயையை நீ தாண்டியே
நம்ம இயேசுவையே நோக்கி நீயும் ஓடிவா

நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  
நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா 

மின்னல் போல இன்னல் வரும் வேளையில்
அவர் உன்னை வந்து காத்திடுவார் பாரப்பா
மின்னல் போல இன்னல் வரும் வேளையில்
அவர் உன்னை வந்து காத்திடுவார் பாரப்பா
மண்ணில் வந்து வாழ்ந்தவர்தான் இயேசப்பா
நம்மை வாழவைக்கும் தெய்வமவர் கேளப்பா
மண்ணில் வந்து வாழ்ந்தவர்தான் இயேசப்பா
நம்மை வாழவைக்கும் தெய்வமவர் கேளப்பா

நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  
நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா 

சத்தியத்தின் நாயகராய் தெரிகிறார்
இயேசு சாந்தமுடன் சமாதானம் தருகிறார்
சத்தியத்தின் நாயகராய் தெரிகிறார்
இயேசு சாந்தமுடன் சமாதானம் தருகிறார்
நித்தியமாய் வாழ்வு தரும் தேவனை
நீ மனந்திரும்பி ஏற்றிடலாம் ஏறிவா
நித்தியமாய் வாழ்வு தரும் தேவனை
நீ மனந்திரும்பி ஏற்றிடலாம் ஏறிவா

நம்பிக்கையின் படகினிலே ஏறிவா  
நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா 

இயேசு என்னும் நாமத்திலே

இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஐக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்

இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஐக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்

ஐக்கியத்தின் பெருமைதன்னை
அவனிக்கெல்லாம் சொல்லி வைத்த
ஆண்டவரின் நாமத்தையே பாடுங்கள்
ஐக்கியத்தின் பெருமைதன்னை
அவனிக்கெல்லாம் சொல்லி வைத்த
ஆண்டவரின் நாமத்தையே பாடுங்கள்
அந்த அண்ணல் நாமம் மகிமை பெறப் பாடுங்கள்
அந்த அண்ணல் நாமம் மகிமை பெறப் பாடுங்கள்

இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஜக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்

சத்தியத்தைக் காட்டி நம்மை
சாந்தமுடன் காத்துக் கொள்ளும்
கர்த்தர் இயேசு ஒருவரென்றே கூறுங்கள்
சத்தியத்தைக் காட்டி நம்மை
சாந்தமுடன் காத்துக் கொள்ளும்
கர்த்தர் இயேசு ஒருவரென்றே கூறுங்கள்
அந்தக் கன்மலையின் கருணைதன்னைத் தேடுங்கள்
அந்தக் கன்மலையின் கருணைதன்னைத் தேடுங்கள்

இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஐக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்

அன்பு என்னும் குரல் கொடுத்து
அழைக்கும் இயேசு சாமியிடம்
அடைக்கலம் நான் இயேசு என்றே வாருங்கள்
அன்பு என்னும் குரல் கொடுத்து
அழைக்கும் இயேசு சாமியிடம்
அடைக்கலம் நான் இயேசு என்றே வாருங்கள்
அவர் மாசில்லாத மகிமை தன்னைப் பாடுங்கள்
அவர் மாசில்லாத மகிமை தன்னைப் பாடுங்கள்

இயேசு என்னும் நாமத்திலே
அன்பு என்னும் ஜக்கியத்துள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்
சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்
அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள்

Popular Posts

My Favorites

அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்

நவம்பர் 14 "அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்" அப். 9:11 பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய...