முகப்பு வலைப்பதிவு பக்கம் 2

நன்றியுள்ள ஒரு நண்பன்

குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதிகபிரயோஜனமான ஒரு நல்ல நாய் அவனிடம் இருந்தது. இந்த நாய் மிகவும் வயதானதாகிவிட்டதால். நன்றி கெட்ட தன் எஜமான் அதை கொண்டுபோய் தண்ணீரில் மூழ்கச்செய்து கொன்றுபோட்டுவிட தீர்மானம் செய்தான. ஒருநாள் இக்குடியானவன் நாயை அழைத்துக் கொண்டு தன் வயலுக்கு பக்கத்திலிருந்த ஒருநதியண்டை போனான். அங்கே ஒரு படகில் தன் நாயை ஏற்றிக் கொண்டு நதியின் ஆழமான இடத்துக்கு படகை ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகு அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ஒரு பாரமான கல்லை ஒரு கயிற்றில் கட்டி, அந்த கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி, நாயை கொன்றுபோட்டுவிட தண்ணீருக்குள் தள்ளிவிட்டான். அந்த நாய் தண்ணீரில் மூழ்கிப் போகும்போது, திடீர் என்று கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துபோயிற்று. அப்போது நாய் ஊளையிட்டுக்கொண்டு மறுபடியும் படகுக்குள் வர முயற்சித்தது. கொஞ்சமேனும் இரக்கமற்ற எஜமான் கருணையற்றவனாய் அந்த வயது சென்ற நாயை பலமுறை தன் கையிலிருந்த துடுப்பால் தண்ணீரில் அமிழ்ந்துபோக தள்ளினான்.

கடைசியில் கல் நெஞ்சம் படைத்த அம்மனுஷன் நாயை பலமாக துடுப்பால் ஒரே அடி அடித்து நதியின் தண்ணீரின் ஆழத்தில் தள்ளிப் போட கையை ஒங்கினான். அச்சமயம் தவறி அவனே தண்ணீரில் விழுந்துவிட்டான். பின்பு நீந்தி வெளியே வர முடியாமல் தவித்து அமிழ்ந்துபோகும் தருணத்தில் இருந்தான். தன் எஜமான போராடிக்கொண்டிருக்கிறதை கண்ட நாய் அவன தன்னை அவ்வளவு கொடூரமாய், நன்றி கெட்டவனாக அப்போது நடத்திஇருநதபோதும், அவனுடைய உடுப்பை தன் வாயால் கடித்து, இழுத்துக்கொண்டு வந்து அவனை பத்திரத்தோடு கரையில் சேர்த்தது.

என் அருமை நண்பா ! சற்று நிறுத்தி யோசித்துப் பார்! எல்லா அன்புக்கும் நேர்மைக்கும் விரோதமாக பாவம் செய்து பயங்கரமான குற்றவாளிகளாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். யோசித்துப்பார். சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததைப் பார்ப்போம். அவர் தேவாதி தேவன்; சத்தியமும் ஒளியும் நிறைந்தவர்; அழிவுக்குள்ளும் தரித்திரததிலுமுள்ள மனுஷனுக்கு தம் பரம அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தார். அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்; குருடருக்கு கண்பார்வை அளித்தார்; மரித்தோரை எழுப்பினார்; பசியுள்ளோரை போஷித்தார்; சோர்ந்துபோனவர்களுக்கும் துக்கமுள்ளவர்களுக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து நன்மை செய்து சுற்றித்திரிந்தார். இப்படிப்பட்டவருக்கு மனுஷன் என்ன செய்தான்? அவனை அகற்றும் அகற்றும் என்று சத்தமிட்டு கூவி சிலுவை மரததில் அறைந்தான். ஐயோ ! மனுஷனுடைய இருதயம் எவ்வளவு மோசமாய் கெட்டுப்போய் கசப்பு நிறைந்து இருக்கிறது ! நம்முடைய இருதயத்தின் நிலையும் இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது. பரிசுத்த வேதம் போதிப்பதாவது: எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனுஷனுடைய) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் (எரேமியா 17:9). ஒரேஒரு நொடியில் அவருடைய கரத்திலிருந்து நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் நாம் அவருடைய பாதையை விட்டு விலகிப்போனால் உடனே அவர் நம்மை விட்டுவிலகி போய்விடுவார் !

இந்த மாட்சிமையான தேவ மனுஷன் நடு சிலுவைபில் கோர காட்சியோடு தொங்குகிறது தேவனுடைய உள்ளம் எப்படிப்பட்டது என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எதிர்த்து ஒரு இழிவான வாரத்தையோ, வெறுப்பான வார்த்தையோ தன் விரலை சுட்டிக்காட்டி எதிர்த்து பேசவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் இருந்தார். இவை எல்லாம் உலகத்தில் இருக்கிற எல்லா குற்றவாளிகளுக்கும் பாவிகளுக்கும் தேவன் காண்பிக்கிற பரம அன்பு.

ஓ ! என்ன அருமையான அன்பின் குணம் இது
அவர் இன்றைக்கு திறந்த இருதயத்தோடும்
ஆணிகளால் கடாவப்பட்ட
விரிக்கப்பட்ட கரங்களோடும் நிற்கிறார் !
ஓ! அவரது இரக்கம் இணையற்றது
இந்த இணையற்ற இரக்கத்தை
தம் சத்துருக்களுக்காக எடுத்துக்காட்டுகிறார்.

பிறகு இவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதெனறு. அறியாமலிருக்கிறார்கள்’ என்று ஜெபித்தார்.

மனுஷன் அவரை சிலுவையில் அறைந்து அங்கே அவருக்கு ஒரு முடிவு கட்ட எண்ணமிட்டான். ஆனால் சபிக்கப்பட்ட அதே கல்வாரி சிலுவையின் கொடூர மரணத்திலிருந்து, மனந்திரும்பி, தன் பாவங்களை அறிக்கை செய்து, அவரைத் தன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொரு பாவியான மனுஷனுக்கும் இரட்சிப்பின் கிருபையின் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

நாம் படித்த கதையில் அந்த நன்றியுள்ள நாய் தன் எஜமானின் ஜீவனை காப்பாற்றியது. இயேசு கிறிஸ்து இரட்சிக்கும்போது நம்மை மீட்டு இரட்சிக்கிறார்;. அவர் சொற்ப காலத்துக்காக மட்டுமல்ல் நித்திய காலத்துக்கென்று நம்மை இரட்சிக்கிறார் “தன்னை விசுவாசிப்போருக்கு அவர் நித்திய ஜீவனை கொடுக்கிறார்.
இதை வாசிக்கும் என் அருமை நண்பா! இந்த ஆச்சரியமான இரட்சகரை இன்னும் உன் இரட்சகராக அறியாமல் இருப்பாயானால், கிருபையின் நாளாகிய இதே நாளில், இன்றைக்கு, அவரண்டை வந்து அவர் அளிக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நான் உன்னை துரிதப்படுத்துகிறேன். இவ்வுலகத்தை நியாயம் தீர்க்க அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் அப்போது அவருடைய கோபம் பற்றி எரியும். அந்த பயங்கரமான நாளில் தெய்வ பக்தியற்றவர்களும், பாவிகள் எல்லோரும் அவருக்கு முன்பாக நிற்பார்கள் ஒருவரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”.

“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உணடாயிருக்கிறது” (1யோவான் 4:9,10)

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

சுமை தாங்கிகள்

நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர், ஒரு சமயத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ‘வேறு ஏதாவது சுமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டார்; ஆம், என்றார் அவர்களில் ஒருவர். என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு சுமையாக இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்குப் போதுமான உணவு வகைகளை கொடுக்க என்னால் முடியவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார். என் பிள்ளைகளை படிக்கவைக்கமுடியவில்லையே என்றார் மற்றவர். உலக வாழ்க்கையில் கண்களினால் காணமுடியாத சுமைகள் பல உண்டு. இதை கேட்ட அந்த தேவனுடைய ஊழியர் பாவ சுமையைப் பற்றி அவர்களுக்கு சொன்னார், இந்த சுமையை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அது உண்மை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். மேலும் பாவச்சுமையை தம்மிடம் கொண்டு வரும்படி அழைத்த அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களிடம் கூறினார்.

அநேக மாதங்களுக்குப்பின் ஒருவன் அதே தேவஊழியரைச் சந்தித்து, “நான் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் பாவச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். நீர் எனக்கு மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னதற்காக தேவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான். உடனே அவனை அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடியவில்லை. பின்பு சுமைதாங்கி கல் அருகே சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த மனிதன் தன் கடந்தகால வாழ்க்கையில் சுய முயற்சியால் பாவச் சுமையை நீக்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் அதினால் தான் சோர்வடைந்ததையும், காலம் வீணானதையும் கூறினதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற சந்தோஷத்தையும் கூறினான். இவனுடைய திடீர் மாறுதலைக் குறித்து அறிந்து கொள்ள அந்த கிராமத்து மக்களும், இவனுடைய உறவினர்களும்’ விருப்பங்கொண்டு விசாரித்தனர் (மாற்கு 10:46-52). இயேசு கிறிஸ்து ஒரு குருடனை முதலில் “அழைத்தார்” பின்னர் “அவர் கண்களை திறந்து குணமாக்கினார்” அவன் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தான். அதைப்போலவே இவனும் தான் குணமடைந்த பின்பு அவரை பின் தொடர்ந்தான். கிராமத்தார்களுக்கும், தன் உறவினர்களுக்கும் இரட்சகரைப்பற்றி சொல்வதில் ஆனந்தமடைந்தான். இந்த ஏழை மனிதன் தன்னுடைய பாவச் சுமையை “எக்காலத்திலும் மாறாத கன்மலையின் மேல் வைத்து ஓய்வடைந்தான். 1 பேதுரு 2:6-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலைக்கல் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.” அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” கர்த்தராகிய இயேசு “விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறார்.

மனந்தளர்ந்து போனவர்களையும், பாவபாரம் சுமந்து தவிப்பவர்களையும் இயேசு கிறிஸ்து வருந்தி அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28).

இதைப் படித்துக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளே, பெரியோரே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் “மரண வழி தொடராதிருக்க முடியும்.” தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் உங்கள் பாவச் சுமையை உணர்ந்து விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி செய்யமாட்டீர்களா? அருமையானவர்களே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள்; இயேசு இரட்சகரை விசுவாசியுங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் ஜெய வேந்தராக உயிர்த்தெழுந்தார். நீங்கள் தாமதிப்பீhகளானால் தேவனுடைய சந்நிதியை விட்டு நிரந்தரமாக புறம்பாக்கப்பட்டு பாவத்தின் கடும் சுமையை சுமந்துகொண்டு அக்கினி கடலுக்கு இரையாவீர்கள். இதிலிருந்து தப்புவதற்கு வேறெந்த நம்பிக்கையோ மார்க்கமோ இல்லை. இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்கள் பாவச் சுமையை நீக்கி மெய்யான சமாதானத்தை இலவசமாக கொடுப்பார். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் எப்படி தண்டனைக்குத் தப்பித்துகொள்ளுவோம்” (எபிரெயர் 4:2).

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து…..

மெத்தை படுக்கைகள் வாங்கலாம்,
நித்திரையைப் பெற முடியாது.
மருந்துகள் வாங்கி சாப்பிடலாம்,
சுகத்தைப் பெற இயலாது.
புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்,
அறிவை அடைய முடியாது.
ஆபரணங்கள் வாங்கி அணியலாம்,
அழகைப் பெற முடியாது.
வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
ஆயினும் வாழ்க்கை அமையாது.
வீடுகளைக் கட்டலாம்,
குடும்பத்தைக் கட்ட முடியாது.
வசதிகள் பலதும் பெறலாம்,
மெய்யின்பத்தை நுகர முடியாது.
உறவுகள் பெற்றிருக்கலாம்,
அன்பைப் பெற முடியாது.
தான தருமங்கள் செய்யலாம்,கடவுளைக் காண இயலாது.
புண்ணிய யாத்திரை செல்லலாம்,
ஆன்ம இரட்சிப்பை அடைய முடியாது.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாதவைகளை எல்லாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாகவே அருளுகிறார். மெய்தேவனிடம் சிபாரிசுகள் பலிக்காது; பணமும் செல்லாது. “நமக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி தேவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்று தூய வேதம் கேட்கிறது. பணம் கொடுத்து நாம் தேவனை திருப்தி செய்ய முடியாது. நமக்கு ஜீவன் கொடுத்து, நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், நீரையும் இலவசமாக கொடுக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு பாவமன்னிப்பையும், ஆன்ம இரட்சிப்பை யும் பணமுமின்றி விலையுமின்றி வழங்குகிறார்.

“வருத்தப்பட்டுப்பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:28-30) தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டுபண்ணி, உன்னதத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார்.

ஆன்ம இரட் சிப்பையும் தேவ சமாதானத்தையும் அவரிடம் வரும் எவருக்கும் இலவசமாக அருளுகிறார்.

“சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, அவரையே உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே அவரிடம் வருவீர்களா?

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!

பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!

‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.

சத்தியம் என்றால் என்ன?

நம்மை உண்டாக்கின தேவன் சத்தியமுள்ளவர் (யோவான்8:26), இயேசு கிறிஸ்து சத்தியமுள்ளவர் (யோவான்14:6), பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் (யோவான்16:13).

இவர்களை அறிய அறிய நம் வாழ்க்கையில் விடுதலை உண்டாகும். இவர்களை எப்படி அறிந்து கொள்வது? சத்திய வசனமாகிய வேத வசனங்கள் மூலமாகத்தான் சத்திய தேவனை அறிந்து கொள்ள முடியும் (யோவான்17:17).

வேத வசனம் சத்தியம். வேத வசனங்களை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் விடுதலையை அனுபவிக்க முடியும்.

வேத வசனங்கள் மனிதனால் எழுதப்பட்ட தத்துவங்களல்ல.
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” 2.தீமோ.3:16

பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த மனிதர்களைக்கொண்டு
எழுதியதுதான் வேத வசனங்களாகிய வேத புத்தகம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகம் வேத புத்தகம்தான்!

தமிழில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம்தான்!

உலகிலேயே அதிகமான புத்தகங்கள், விளக்க உரைகள் எழுதப்பட்டது வேத புத்தகத்திற்குத்தான்!

காரணம்,
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.

தேவனுடைய வார்த்தையாகிய சத்தியம் வல்லமையுள்ளது.
பாவியை பரிசுத்தமாக்கும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு! வியாதியஸ்தரை குணமாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையில் உள்ளது! துக்கத்தில் மூழ்கிப்போகிறவர்களை ஆறுதல்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு! சோர்ந்து போகிறவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை வேத வசனத்தில் உள்ளது! எந்த சூழ்நிலையில் இருக்கிற மனிதனையும் விடுவிக்கிற வல்லமை வேத வசனத்திற்கு உண்டு!

வசனத்தில் வல்லமை மட்டுமல்ல, ஜீவனும் (உயிர்) இருக்கிறது. வேத வசனங்களை வாசிக்கும்போது, அது நம்மோடு பேசுவதை உணர முடியும்! இந்த ஜீவனும், வல்லமையுமுள்ள வேத வசனங்களை வாசிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! உங்களுக்கென்று ஒரு வேத புத்தகம் இல்லாவிட்டால் உடனே ஒரு வேத புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் வேதத்தில் பிரியமாய் இருந்து. அதை வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தமும், சுகமும், விடுதலையும், ஆசீர்வாதமும் உண்டாவதை காண்பீர்கள்.

சத்தியம் உங்களை பரிசுத்தமாக்கும்.
வேத வசனமாகிய சத்தியத்தை வாசித்து அறியும்போது உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?

‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.” யோவான்17:17
வேத வசனங்கள் நம்மை பரிசுத்தப்படுத்தும்.

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் ரோமர் 13:12,13,14.

நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.

‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான?  உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.

வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.

விசுவாசம்!

“விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17

அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.

வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து  எபி. 12:1.

இயேசுவை ஒரு மனிதன் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அவனுக்குள் விசுவாசம் துவக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால் தேவனுடைய வசனங்களை கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், தியானிக்கவேண்டும்.

உங்களுக்குள் ஆண்டவர் மீது விசுவாசம் பெருக வேண்டுமா?  அதிகமாக வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள்.

“விசுவாச வீரன்” என்று அழைக்கப்பட்டவர் ஜார்ஜ் முல்லர் என்கிற தேவ ஊழியர். கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்தவர். விசுவாசத்தினால் கர்த்தருக்காக இவர் பெரிய காரியங்களை சாதித்தார்.

இவர் விசுவாச வீரனாக திகழ்ந்ததற்கு காரணம், வேத வசனங்கள்தான். இவர் தேவ புத்தகத்தை இருநூறு (200) முறை வாசித்து முடித்திருக்கிறார். நூறு முறைக்கு மேலாக முழங்காலிலேயே நின்று வேதத்தை வாசித்து முடித்தாராம்!

விடுதலை!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32

வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!

“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92

தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.

ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:

“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

பயத்திலிருந்து விடுதலை!

ஒரு சகோதரன் தன் அனுபவத்தை கூறினார். இவர் உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு பயம். எதற்காகவும் பயந்து கொண்டேயிருப்பார். பயம் இவரை அடிமையாக்கி விட்டது.

ஒருசமயம் ஏசாயா 41:10ஐ வாசித்தபோது ஆண்டவர் இவரோடு பேசினார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் பேசினவுடன் பயம் உள்ளத்தை விட்டு விலகினது. இந்த சத்திய வசனம் விடுதலை கொடுத்தது.
நீங்களும் விசுவாசத்தோடு வேத வசனத்தை வாசிக்க வாசிக்க பயத்திலிருந்து விடுதலையடைவீர்கள். உங்களுக்குள் தைரியமும், பெலனும் உண்டாகும்.

ஆதலால், தினமும் தவறாமல் வேதத்தை வாசியுங்கள்!
வசனத்தை கருத்தாய் தியானியுங்கள்! வசனத்தின்படி வாழுங்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

சத்தியமுள்ள தேவனே!

உமது வசனமாகிய சத்திய வசனத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்!

நீர் விரும்புகிற வண்ணமாக சத்தியத்தை அறிந்து கொள்ள எனக்கு கிருபை தாரும்!

உம்முடைய சத்தியத்தினால் என்னை பரிசுத்தமாக்கும்!
உம்முடைய சத்திய வசனங்களினால் என் விசுவாசத்தை பெருகச் செய்யும்!

உம்முடைய வசனமாகிய சத்தியம் என்னை விடுதலையாக்கட்டும்!

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு பகல் பாராது மக்களுக்குச் சேவை புரிவதால் அம்மருந்தகத்திற்குமட்டும் ஒரு தனிச் சிறப்பு. சுமார் 35 வயது மதிக்கக்கூடிய வாலிபன் சுந்தர் ஓர் மருந்தாளுநன். தன் பணியில் எப்பொழுதுமே மிக உண்மையுள்ளவனும், மனச்சாட்சிக்குப் பயந்தவனும், மருந்துகளைப் பற்றிய நல்ல அனுபவமுள்ளவனுமாயிருந்தான். ஆனால், சில நேரங்களில் மருந்து பெறுமிடத்தில் அமர்ந்தவாறே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். அப்பொழுது மருந்து வாங்க வருவோரின் அவசர நடைச் சப்தம் கேட்டு விழித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு! மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாய்க்கு மருந்து வாங்க ஒரு சிறுமி மருந்துச் சீட்டைக் கொண்டுவந்து சுந்தரிடம் கொடுத்தாள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சுந்தரோ வெறுப்போடுகூட, பல்வேறு மருந்துப்புட்டிகளை எடுத்து, வைத்திய நியமத்தின் விகிதாச்சார முறைப்படி கலந்து ஒரு புட்டியில் ஊற்றி, புட்டியின் மேல் ஒரு அடையாளச் சீட்டையும் ஒட்டி அச்சிறுமியிடம் கொடுத்தான். அதை வாங்கிய அச்சிறுமி அதிவேகமாக ஓடி மறைந்தாள். அச்சிறுமி சென்றவுடன் பல்வேறு மருந்துப்புட்டிகளை அதனதன் இடத்தில் எடுத்து வைக்கும் பொழுது சுந்தரைப் “பெரும் பயம்” ஆட்கொண்டது. சுந்தர் என்ன காரியம் செய்து விட்டான்? தப்பிதமான வேறு ஒரு புட்டியையும் எடுத்திருந்தான். மருந்துகளை மருந்தோடு கலப்பதற்குப் பதிலாக கொடிய விஷத்தையும் கலந்துவிட்டான். நோயால் படுத்திருக்கும் அத்தாய் அதைச் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! தாங்கொண்ணாத் துயர் கொண்ட மரணம்!!

சுந்தரால் என்ன செய்யமுடியும்? அச்சிறுமியையோ அல்லது அவள் வசிக்கும் இடத்தையோ அவன் அறியான். அச்சிறுமியை மட்டும் இப்போது அவன் கண்டு கொண்டானானால்! தன் மருந்தகத்தை விட்டு இருள் நிறைந்த வீதிக்கு ஓடினான்! தன்னால் முடிந்தமட்டும் வலதுபுறமும் பின் இடது புறமும் ஓடினான்!! தேடினான்!!! மூடிவோ பலனற்றுப் போயிற்று. அநேக வீதிகளின் ஊடாகக்கடந்த அச்சிறுமியையோ கரும் இருள் கவ்விக்கொண்டது. அச்சிறுமியோ வேறு அதிகப் பரபரப்புடன் காணப்பட்டாள். ஒருவேளை, தன் வீட்டையடைந்த சிறுமி அதே நிமிடத்தில் அவ்விஷத்தை ஊற்றித் தன் தாய்க்குக் கொடுத்திருந்தால்? ஆறியா சுந்தருக்குக் குப்பென்று வியர்த்துக்கொட்டியது! அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்பொழுது …… தன் கிறிஸ்தவ நண்பன் மறக்க வேண்டாமெனச் சொன்ன திருமறையின் தேவவாக்கு திடீரென அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”, கடந்த நாட்களில் சுந்தர், தன் கிறிஸ்தவ நண்பனிடம் குதர்க்கமும் கேலியும் செய்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்திருந்தாலும் அவன் நினைவில் நின்ற நீங்காத வேத வாக்கு இதுவே.

சுந்தர் தன் மருந்தகத்துக்கு மிக அவசரமாகத் திரும்பினான். முழங்காலிட்டுத் தன்னை முற்றுமுடியத் தாழ்த்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி வேண்டுதல் செய்தான். இப்பொழுது அவன் எந்தவிதமான குதர்க்கமோ கேலியோ செய்யவில்லை. தன்னுடைய தாங்கொண்ணா வேதனையில் ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட்டு உதவி செய்யும்படி மன்றடினான். தன்னுடைய இருதயத்தை முற்றிலுமாகத் தேவனிடத்தில் ஊற்றி வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரெனக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தான். என்ன ஆச்சரியம்!!

கண்ணீர் வழிந்தோட, உடைந்த மருந்துப் புட்டியைப் பிடித்தவாறே, தான் அதிவேகமாக ஓடியதால் கீழேவிழுந்து மருந்துப் புட்டியை உடைத்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் விம்மியழுது கெஞ்சினாள் அச்சிறுமி! ஆனந்தப்பெருக்கில் சுந்தர் வேறு ஒரு புதுப் புட்டியை எடுத்து இம் முறை மிகக்கவனத்தோடு நிரப்பி அனுப்பினான். தான் அதிக நாட்களாகப் புறக்கணித்து வந்த தேவனின் ஒப்பற்ற பரிகாரத்துக்கு எவ்வளவு தகுதியற்றவன் என்று தன்னை நொந்துகொண்டான். சுந்தர் தன் கண்களை மூடினபொழுதோ, அவன் உள்ளத்துறைந்திருந்த சகல அசுத்தத்தையும், புத்தியில் புதைந்திருந்த துர்ச்சிந்தை யாவையும் கண்டான். தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ‘என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொள்ளும்’ என்று வேண்டுதல் செய்தான். அக்கணமே அவன் ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளையாக மாறினான். இப்பொழுதோ சுந்தர் அதிகச் சந்தோஷமுள்ளவனாகவும் உண்மையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் காணப்பட்டான்.

இக்கைப்பிரதியை வாசிக்கின்ற என் அருமையான நண்பரே! சுந்தர் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து விடுதலை பெற்றன் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். ஒருவேளை அவருடைய அன்பான அழைப்பைத் தொடர்ந்து புறக்கணித்திருந்தால் சுந்தரின் முடிவு எப்படியிருந்திருக்கும்? இதை வாசிக்கும் சிநேகிதரே! ஆண்டவர் உம்மைப் பார்த்து “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்கிறார். உமக்கு மெய்வருத்தம் உண்டா? சுந்தருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல நீர் ஈடுபட்டிருக்கும் எப்பொறுப்பிலும் இவ்வித நிர்ப்பந்தமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.“ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோ.6:37) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது கையை மிகுந்த ஆவலோடும் அன்போடும் நீட்டிக்கொண்டிருக்கிறார். உருகி அழைக்க உமக்கு மனமில்லையா? உருகி அழைத்தால் உமக்கேது துயரம்? வருந்தும் மனமே ஒளிவீசும் ஆலயம் என்பதை மறவாதேயும் !!

எனவே இதை வாசிக்கும் அன்பரே! பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23) என்று தேவன் கூறுகிறார். ஒருவேளை இத்தேவ அழைப்பின் சப்தத்திற்கு நீர் செவிசாய்க்காது போனால்….? ” மனமே மருளாதே! நீர் இன்றே அவரை உமது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் உமக்கு இளைப்பாறுதல் தந்து இளமையும் முதுமையுமற்ற நித்திய ஜீவனை உமக்களிப்பார்.

சிருஷ்டிப்பில் தேவனுடைய வல்லமை

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”

‘கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர். நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” வெளி 4:11.

முதலாம் நாள்

“தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.”

இரண்டாம் நாள்

“பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.”

மூன்றாம் நாள்

பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

நாலாம் நாள்

“பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.”

ஐந்தாம் நாள்

“பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.”

ஆறாம் நாள்

“பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார். தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.”

ஏழாம் நாள்

“இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.”

பூமி உருவாக்கப்படுவதற்கு முன்பே, தேவன் அத்திட்டத்தை மனதில் கொண்டிருந்தார். அவர் தமது தெய்வீக மாட்சிமையில் தனித்து அசைவாடிக்கொண்டிருந்தாலும் இராஜாவாகவே இருந்தார். தம் விருப்பத்தின் படி அவர் உலகத்தைப் படைக்கலாம் அல்லது படைக்காமல் இருக்கலாம். கோடானகோடி கோளங்களைப் படைக்கலாம், அல்லது ஒரே ஒரு உலகத்தைப் படைக்கலாம். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்: சம மகிமையுள்ள கோடிப் பிராணிகளைப் படைக்கலாம், அல்லது அவற்றை முற்றிலும் ஒன்றிற்கொன்று மாறுபட்டவையாகப் படைக்கலாம். அவருக்கு ஆலோசனை சொல்ல யாரால் கூடும்?

உலக சிருஷ்டிப்பைச் சற்று உற்று நோக்குவோம். அதன் மகத்துவத்தை முற்றும் நம்மால் உணரமுடியுமா? ஆகாயத்துப் பட்சிகள், நீர் வாழும் ஜந்துக்கள், வனவிலங்குகள், ஊர்வன, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள் முதலியவைகளுள் உருவத்திலும், நிறத்திலும், குணத்திலும் எத்தனை வேறுபாடுகள்! இது அவருடைய சர்வவல்லமையைக் காட்டுகிறதல்லவா? ஆகாய விரிவைப் பார்த்தால் “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.” (1கொரி 15:41). கிரகங்களைவிடச் சூரியன் மிகப் பிரகாசமாயிருக்கிறது. ஒளியுள்ள நட்சத்திரங்களுக்கிடையே, ஒளி மங்கிய நட்சத்திரங்கள் ஏனிருக்கவேண்டும்? பதில் என்னவென்றால், “உமது சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்பார்கள்” (வெளி 4:11).

நாம் வாழும் உலகத்தில் மூன்றில் ஒரு பங்குதான் தரை. அதிலும் பாலை நிலம், உவர் நிலம், பனிப்பிரதேசம்; நீங்க, நாம் குடியிருக்கத் தகுந்த இடம் எவ்வளவு சொற்பம்! அதில் ஒரு பாகம் வளமுள்ள நிலம், மற்றொரு பாகம் பாழ் நிலம். கர்த்தருடைய விரும்பம் இவையெல்லாம். ஓரிடம் பொன் விளையும் பூமி, பூமியின் ஆழத்திலே இரத்தினக் கற்கள், நிலக்கரி, எண்ணெய், உலோகப் பொருள்கள், இன்னோரிடத்தில் பூமியதிர்ச்சி, எரிமலை இவையெல்லாம் எத்திட்டத்தில் அமைக்கப்பட்டன? உயிர்ப்பிராணிகளில் சிங்கமும் ஆட்டுக்குட்டியும், கரடியும் வெள்ளளாட்டுக் கடாவும், யானையும் சுண்டெலியும் இவற்றில் உருவத்திலும் குணத்திலும், அழகிலும் எத்தனை விதங்கள்! சில மிருகங்களுக்கு உழைத்துக் கடினவேலை செய்யவேண்டியிருக்கிறது, சில சுயாதீனமாயிருக்கின்றன. சில வேகமாக ஓடக் கூடியவை, சில மெதுவாக ஊர்ந்துசெல்லுபவை. சில நெடுங்காலம் வாழுகின்றன: சில அற்ப ஆயுசு உள்ளன. இதோ மாதிரிப் பலவித மாறுதல்கள்: பறவைகள், பூச்சிகள், மரங்கள், பூக்கள், கனிகள் முதலியவைகளிலும் காணப்படுகின்றன. உண்மையாகவே “வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும் கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்” (சங் 135:6).

“நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்: தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” (சங் 115:13)

சிருஷ்டிப்பில் உள்ள வேறுபாடுகள்போலவே மனிதருக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஒருவன் பெலசாலி, மற்றொருவன் பெலவீனன்: ஒருவன் தீர்க்காயுசுள்ளவன், மற்றவன் அற்பாயுசுள்ளவன்: ஒருவன் சுறுசுறுப்புள்ளவன், மற்றவன் சோம்பேறி. இவையெல்லாம் பிறப்பினாலும் சூழ்நிலையினாலும் ஏற்பட்டதல்ல. தேவன்தான் இதற்குக் காரணர். அவர் ஏன் இப்படிச் செய்யவேண்டும்? “ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (மத் 11:26). சர்வ வல்லமையுள்ள தேவன் தமது சித்தத்தின் படி செய்கிறார். “தீங்கு நாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்” (நீதி 16:4). படைக்கும் தேவனுக்கு அந்த உரிமையுண்டு. அவரைத் தடுத்துக் கேட்கக்கூடியவன் யார்? அவர் செய்கையைக் குறித்து முறுமுறுத்து தேவனுக்கு ஞானமில்லை என்று சொல்லக்கூடியவன் யார்? அவருடைய செயல்களைக் குறை கூறுவது பெரும் பாவம். அவருடைய கர்த்தத்துவத்தை நாம் பக்தியுடன் மனதிற்கொள்ளவேண்டும். “சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஓன்றுமில்லை அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (ஏசா 40:17-18).

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நீ….. யார்?

நீ ஏற்றுக்கொள்ளப்படுகிறாய்

நீ தேவனுடைய பிள்ளை. (யோவான 1:12)

நீ கிறிஸ்துவின் நண்பன். (யோவான் 15:15).

நீ நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். (ரோம. 5:1)

நீ கர்த்தரோடு இசைந்திருக்கிறாய் அவருடனே ஒரே ஆவியாயிருக்கின்றாய். (1கொரி. 6:17)

நீ கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறாய். நீ தேவனுக்குச் சொந்தமானவன். (1கொரி. 6:19-20)

நீ கிறிஸ்துவின் சரிரத்தின் அவயவமாயிருக்கின்றாய்;. (1கொரி. 12:27)

நீ ஒரு பரிசுத்தவான் .(எபே. 1:1)

நீ தேவனுடைய சுவிகாரபுத்திரன் (எபே. 1:6)

பரிசுத்த ஆவியானவராலே தேவனிடத்தில் நேரடியாகச் செல்லக்கூடிய சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய். (எபே. 2:13)

உன்னுடைய சகல பாவங்களும் மன்னிக்கப்பட்டு நீ மீட்கப்பட்டிருக்கிறாய். (கொலோ. 1:14)

நீ கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவனாயிருக்கிறாய்;. (கொலோ. 2:10)

நீ பாத்திரமாய் இருக்கிறாய்

நீ ஆக்கினைத் தீர்ப்பினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய்.. (ரோம. 8:1-2)

உனக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறாய். (ரோம. 8:28)

உன்னை யாரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கு முடியாது. (ரோம. 8:31-34)

தேவனுடைய அன்பை விட்டு யாரும், எதுவும் உன்னைப் பிரிக்கமுடியாது. (ரோம. 8:35-39)

தேவனே உன்னை ஸ்திரப்படுத்தி, அபிஷேகம்பண்ணி முத்திரித்து வைத்திருக்கின்றார். (2கொரி. 1:21-22)

நீ கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைந்திருக்கிறாய். (கொலோ. 3:3)

தேவன் உன்னில் தொடங்கிய நற்கிரியையை பூரணமாக நடத்தி முடிப்பர் என்று நீ நம்பியிருக்கிறாய். (பிலி. 1:5).

நீ பரலோக குடிமகன். (பிலி. 3:20)

தேவன் உனக்கு பயமுள்ள ஆவியை அல்ல, பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கின்றார். (2தீமோ.1:7)

நீ ஏற்ற சமயத்தில் இரக்கத்தைப்பெறவும், சகாயம் செய்யவும் கிருபையைக் கண்டடையக்கூடும். (எபி. 4:16)

நீ தேவனால் பிறந்திருக்கிறாய், பொல்லாங்கன் உன்னைத் தொட முடியாது (1யோவான். 5:18).

நீ முக்கியத்துவம் வாய்ந்தவன்

நீ உலகத்துக்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறாய். (மத். 5:13-14)

நீ மெய்யான திராட்சைச் செடியின் கொடியாய் இருக்கிறாய். அவரது ஜீவன் உன் மூலமாகப் பாய்ந்தோடுகிறது. (யோவான் 15:1,5)

நீ கனிகொடுக்கும்படியாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கிறாய். (யோவான் 15:16)

நீ கிறிஸ்துவுக்குச் சாட்சியாயிருக்கிறாய். (அப். 1:8)

நீ தேவனுடைய ஆலயமாயிருக்கின்றாய். (1கொரி. 3:16)

நீ தேவனுடைய ஒப்புரவாக்குதலின் ஊழியக்காரன். (2கொரி. 5:17-21)

நீ தேவனுடன் கூட உடன் ஊழியக்காரன். (2கொரி. 6:1, 1கொரி.3:9)

நீ கிறிஸ்துவுடன் கூட உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறாய். (எபே. 2:6)

நீ தேவனுடைய படைப்பு. (எபே. 2:10)

நீ தேவனிடத்தில் தைரியத்துடனும் திடநம்பிக்கையுடனும் சேரலாம். (எபே. 3:12)

உன்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே நீ எல்லாவற்றையும் செய்ய முடியும். (பிலி. 4:13)

Popular Posts

My Favorites

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13 "தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து" கொலோசெயர் 1:10 பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம்...