முகப்பு தினதியானம் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு

நீ மரணபரியந்தம் உண்மையாயிரு

நவம்பர் 06

“நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” வெளி 2:10

தேவன் தமது ஜனத்திற்கு அதிகம் நல்லவர். தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுபவர். தமது மக்களின் வேண்டுதல்கள் வீணென்று ஒருபோதும் நினைப்பதேயில்லை. தமது மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களைத் தூண்டுகிறார். இந்த வசனம் எபேசு சபையிலுள்ளவர்களுக்குள் கூறப்பட்டது. அவர்கள் வசனத்தைப் பிரசங்கிப்பதிலும், ஆத்துமாக்களுக்காக விழித்திருப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும், பரிசுத்தத்தையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும்.

சபையின் போதகர்கள் சபையில் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகள் சத்தியத்தைப் பிடித்துக்கொண்டு அதன்படி நடந்து எப்போதும் அதையே பிரசங்கிக்க வேண்டும். தங்களது மனசாட்சிக்கு உண்மையாயிருந்து அதற்குக் கீழ்ப்படிந்து, நீதியாய் உத்தமமாய் நடக்க வேண்டும்.

தன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தையை நம்பி, தேவ சித்தத்தின்படி நடந்து, தேவனுக்கா துன்பத்தையும் சகிக்க வேண்டும். உலகத்தாரிடத்தில் உண்மையாக வாழ்ந்து, பாவத்தைக் குறித்து, அவர்களை எச்சரித்து, கிருபையால் கிடைத்த நற்செய்தியைக் கூறி அவர்களை இயேசுவண்டை வழி நடத்தவேண்டும். பரிசுத்தவான்களிடத்திலும் உண்மையைக் காட்டி, அவர்களை நேசித்து, துன்பத்தில் அவர்களைத் தேற்றி அவர்களின் கஷ்டத்தில் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நீ மரணபரியந்தம் உண்மையாயிரு என்றால், மரணம் வந்தாலும் உண்மையாயிருப்பதைத் தவறவிடாதே என்று பொருள். அப்படி நீ இருந்தால் ஜீவ கிரீடத்தைப் பெறுவாய்.

உண்மையாயிருக்க உதவி செய்யும்
விசுவாசத்தால் எமது இடைகட்டும்
உயிர் மெய்யிலென்றும் நிலைத்து
உயிர் மகுடம் பெற்றிடச் செய்யும்.