முகப்பு தினதியானம் அவருக்குக் காத்துக்கொண்டிரு

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.