முகப்பு தினதியானம் ஏப்ரல் எசேக்கியா மனமேட்டிமையானான்

எசேக்கியா மனமேட்டிமையானான்

ஏப்ரல் 26

“எசேக்கியா மனமேட்டிமையானான்” 2.நாளா. 32:25

எசேக்கியா மனமேட்டிமையில் அதிகம் வளர்ந்து விட்டான். அவன் நல்லவன்தான். சற்று நேரத்துக்கு முன்னே தேவன்புக்குரிய சாட்சி பெற்றான். நாம் மாம்சத்தின்படி பெருமை வாய்ந்தவர்களானபடியால் தேவன் நமக்குத் தயவு காட்டும்போது நாம் வெகு அதிகமாய் இன்னும் மனமாட்டிமை கொள்கிறோம். தேவன் சோதிக்கும்போது  முறுமுறுக்கிறோம். தேவன் அதிகமாய் தம்மை நமக்கு வெளிப்படுத்தும்போதுதான் டிடிடிடிடி அதிகம் சோதிப்பார். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பெருமையைப் பகைக்கிறது போல் வேறெதையும் அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அடிகனநநந445வர் அதைச் சகிக்க அவ்வளவு அதிகம் பகைக்கிறதில்லை. அவர் அதைச் சகிக்க மாட்டார். ஆனாலும் நாம் பெருமையில்தான் அதிகம் விழுந்து விடுகிறோம்.

பெருமையுள்ள இருதயம் நல்ல கனிகளைக் கொடாது. தாழ்மையுள்ள இருதயம் ஆவியின் கனிகளைக் கொடுக்கும். பெருமையால், பகையும் விரோதமும், பாகுபாடும், இருதய கடினமும், அடையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமைப்பட்டால் தேவன் நம்மை கீழேத் தள்ளி எசேக்கியாவின் விஷயத்தில் செய்ததுப்போல் நமக்கும் செய்ததுப்போல் நமக்கும் செய்துவிடலாம். சாத்தான் நாம் பெருமையில் வளர வேண்டும் என்பதால் நாம் ஜெபம்பண்ணுவதை விட்டுவிடச் செய்வான். ஜெபம்செய்வதை நிறுத்துவோமானால் சாத்தானுடைய ஆதிக்கத்திற்குக் கீழே இருப்போம். அவனோடிருந்தால் பெருமை வந்துவிடும். ஆகவே கிருபை பெறுமுன் எப்படி இருந்தோம். கிருபையை பெறாவிட்டால் எப்படி இருப்போம். கிருபையினால் தேவன் நம்மை இரட்சிக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படி இருக்குமென்று எண்ணி தாழ்மையாய் இருப்போமாக.

இயேசுவே உம்மைப்போல் நான்
தாழ்மையுள்ளோன் சுத்தவான்
சாந்தம் உள்ளவனாக
இருக்கச் செய்யும் தேவன்.