முகப்பு தினதியானம் ஏப்ரல் நீங்கள் அசதியாயிராமல்

நீங்கள் அசதியாயிராமல்

ஏப்ரல் 14

“நீங்கள் அசதியாயிராமல்” ரோமர் 12:11

அதியாயிருந்தால் சத்தியத்தைப் புரட்டி நன்மைகளை அவமதித்து கர்த்தரைக் கனவீனப்படுத்தி, அந்தகாரப் பிரபுவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவோம். அசதி, அவகீர்த்தி, உலக காரியங்களிலும், பரம காரியங்களிலும் ஒன்றே. நம் கடமைகளில் நாம் அசதியாயிராமல் சுறுசுறுப்பாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நல்ல நோக்கத்தோடு, நல்ல சிந்தையோடு, வைராக்கியத்தோடு நம் வேலையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படி தன் வேலைகளைச் செய்வது அவனது கடமை.

இந்த வசனத்தில் அப்போஸ்தலன் பரம காரியங்களைக் குறித்துதான் பேசுகிறோம். பரம நன்மைகளைத் தேடுவதில், தாலந்துகளைப் பயன்படுத்துவதில், கிரியைகளை முயற்சி செய்வதில் நல் மாதிரிகளைப் பின்பற்றுவதில் நாம் அசதியாயிருக்கக் கூடாது. விசுவாசித்தின்மூலம், பொறுமையின்மூலம், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்தவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். முற்பிதாக்களின் நடத்தை உங்களை உட்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவ வேண்டும். சுவிசேஷத்திலுள்ள பரிசுத்த கற்பனைகள் உங்களை நடத்த வேண்டும். கிருபையின் மகிமை நிறைந்த வாக்குத்தத்தங்கள் உங்களை உயிர்ப்பிக்க வேண்டும். ஆகவே சோம்பலுக்கு இடங்கொடாதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். உலகம் அதிக ஜாக்கிரதையாயிருக்கிறது, உங்களுக்காக பணி செய்ய தேவதூதர்களும் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். தேவ சமுகத்தில் உங்கள் காரியம் முடிக்க இயேசுவும் ஜாக்கிரதையாய் இருக்கிறார். காலம் இனி செல்லாது. கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. நமக்குக் கிடைக்கும் கடைசி தருணம் சீக்கிரம் வரும்.

உமக்கர் உழைக்கும்போது
நாங்கள் என்றும் பாக்கியர்
உழைப்பெல்லாம் அன்பினால்
இன்பமாகும் அதனால்.