தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

யூன் 05

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” 2.கொரி. 1:20

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், அவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கொடுத்த உறுதி மொழிகள் ஆகும். அவர் சுயாதிபதியான தேவனானபடியால் அவரிடத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள் அவருடைய அன்புக்கு அடையாளங்கள். அவைகள் வாக்குப்பண்ணினவரை ஒரு கட்டுக்குள்ளாக்குகிற திவ்ய தயவான செய்கைகள். அவர் பிதாவின் அன்பால் நமக்காக கவலை;படுகிறார். அவருடைய உண்மையும் உத்தமுமாகிய மாறாத அஸ்திபாரத்தின்மேல் அவைகள் நிற்கின்றன.

வாக்குத்தத்தங்கள் அவர் ஜனங்களி;ன் சொத்தாகவே இயேசுவில் பத்திரப்பட்டிருக்கின்றன. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலமும் அவைகளுக்குள் அடங்கி நமக்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன. இது தேவனுடைய இருதயத்தை அவைகள் திறந்து, விசுவாசியினுடைய விசுவாசத்தை வளர்த்து, பாவியின் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தை அவை அதிகப்படுத்துகின்றன. ஏனென்றால் தீர்க்கதரிசியாக அவைகளை முன்னுரைக்கிறார். ஆசாரியராக அவைகளை உறுதிப்படுத்துகிறார். அரசனாக அவைகளை நிறைவேற்றுகிறார். அவைகளெல்லாம் விசுவாசத்திற்குச் சொந்தம். நம்முடைய நன்மைக்காகத்தான் அவைகள் கொடுக்கப்பட்டன. யோகோவாவின் கிருபையைத் துதிப்பதே அவைகளி; முடிவு. அவைகளெல்லாம் கிறிஸ்துவின் ஊற்றாகிய நிறைவுக்கு நம்மை நடத்தி எச்சரிப்பு, நன்றியறிதல், துதி ஆகியவற்றைப் பிறப்பிக்கும்.

தேவவாக்கு உறுதியானது
இதுவே என் நம்பிக்கை
அவர் சொன்னது எல்லாம்
நிறைவேற்றுவார் அன்றோ.

வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்

யூன் 04

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” அப். 20:35

கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. நித்தியத்தில் அவரை ஏவிவிட்டதும் பரத்தை விட்டு பூமிக்கு வரும்படி செய்ததும் இன்னும் அவரைத் தூண்டிவிடுகிறதும் இந்த வசனத்தில் உள்ள பொருள்தான். தமது சீஷர்களுக்கு இதை அடிக்கடி சொன்னதால் இது ஒரு பழமொழியாய் மாறி இருக்கலாம். நம்முடைய போதகத்துக்கும் எச்சரிப்புமாக இது எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனிதர் இதன்படி செய்ய முடியாமல் போனாலும் இது ஒரு சரியான சட்டவாக்காகும்.

வாங்குகிறது என்பது குறைவையும் திருப்திபடாத ஆசையையும் காட்டுகிறது. கொடுக்கிறதென்பது மனநிறைவையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. கொடுக்கிறதில் உதார குணமும் மற்றவர்களின் நன்மைக்கடுத்த கவலையும் வெளிப்படுகிறது. இது தெய்வீகத்தன்மை. அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியே நமக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கு கொடுக்கத்தான் தேவன் நம்மை மீட்டார். நம்மை மகிமைப்படுத்துகிறார். தூய இன்பத்துக்க இது ஊற்று. நாம் அவர் சமூகம் போய், இவ்வார்த்தைகளால் தைரியப்பட்டு, மேலானவற்றை நம்பிக்கையோடு அடிக்கடி கேட்க ஏவப்படும்போது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துக்கொள்ளக்கடவோம். இதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தி அவரண்டைப் போக ஏவிவிடுவோமாக. இந்தச் சட்டவாக்கின்படி விவேகமாயும், கபடற்ற விதமாகவும் செய்ய, தடையாயிருக்கும் எல்லாவற்றையும் வெற்றி பெற்று வாழ்வோமாக.

இயேசு தம்மைத் தந்தார்
நமக்குக் கிருபை ஈந்தார்
அவரைப் பின்பற்றிப் போ
அவரைப் போல வாழப்பார்..

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.

தேவனுடைய வீட்டார்

யூன் 02

“தேவனுடைய வீட்டார்.” எபேசி. 2:13

கர்த்தர் தமக்குச் சொந்தமான ஒரு விசேஷித்த குடும்பத்தை வைத்திருக்கிறார். அது ஆவிக்குரிய குடும்பம். ஏனென்றால் அதைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தேவனால் பிறந்து, ஆவியானவரால் போதிக்கப்பட்டு ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்து, ஒரே சரீரமாக அவரில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். இக்குடும்பம் அவர் நோக்கத்திலிருந்து தோன்றியது. இது அவருடைய சித்தம் எது என்று காட்டுகிறது. அவர் வல்லமையால் உண்டானது. தேவனுடைய வீட்டார் என்பது அதன் பெயர். உலகத்திலிருந்துப் பிரிக்கப்பட்டதால் தேவனுடைய வீட்டார். அவர் நடத்திச் செல்லும் மந்தை.

அவர் ஒவ்வொருவரைப் பாதுகாத்து, குறைவையெல்லாம் நீக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் வேலை தந்து, நேசித்து, மகிழுகிறதால் பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த யாவரும் சகோதரர்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய கிருபையைப் பிரஸ்தாபப்படுத்த, அவருடைய காரியத்தை நடத்த, அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே இக்குடும்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் அவர் அறியப்பட்டு, நம்பப்பட்டு, துதிக்கப்படுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, அவருக்குள் மகிழுகிறார்கள். நீ இக்குடும்பத்தைச் சேர்ந்தவனா? இந்தக் குடும் விருந்துக்கு நீ செல்கிறாயா? இந்தக் குடும்பத்தின் ஆராதனைகள் உனக்கு இன்பமா? இந்தக் குடும்பத் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நீ உண்மையாய் நேசிக்கிறாயா? இந்த கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டு.

தேவனே, என்னிடம் வாரும்
என் உள்ளத்தில் தங்கும்
உமது குடும்பத்தில் என்னைச் சேர்த்து
இரட்சியும் கண் பார்த்து.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

Popular Posts

My Favorites

என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று

ஓகஸ்ட் 19 "என் ஆத்துமா ஆறுதலடையாமல் போயிற்று" சங்.77:2 கர்த்தர் தமது ஜனத்திற்கு தேவையானதும் போதுமானதுமான ஆறுதலைச் சவதரித்து வைத்திருக்கிறார். தம் பிள்ளைகளின் அவசர நேரத்தில் தேவைப்படுகிற ஆறுதல் சொல்பவர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் சில வேளைகளில்...