முகப்பு வலைப்பதிவு பக்கம் 40

தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே

ஜனவரி 03

“தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே”  1.தீமோ 2:5

மனுஷன் அநேக மத்தியஸ்தர்களை ஏற்படுத்திக் கொள்கிறான். மத்தியஸ்தர் ஒருவர்தான். தேவன் ஒருவரைத்தான் அங்கீகரித்திருக்கிறார். ஒரே மத்தியஸ்தர் போதும். இயேசு கிறிஸ்துதான் அந்த ஒருவர். அவர் செய்த பிராயச்சித்தம் அளவற்றது. அது நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி, நீதிக்கு திருப்தியுண்டாக்கி, தேவனுடைய லட்சணங்களையெல்லாம் மகிமைப்படுத்திற்று. அது என்றைக்கும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களைப் பூரணப்படுத்திற்று. அது தேவனுக்கு சுகந்த வாசனையான பலியாயிற்று. இயேசு செலுத்தின இந்த ஒரு பலிமூலமாய்தான் தேவன் பாவிகளை ஏற்றுக்கொண்டு மன்னிப்பளிக்கிறார்.

தேவன் உன்னை அங்கீகரிப்பதற்கு வேறொன்றையும் தேடாதே. இயேசுவின் வழியாய்ப் போ. அவரை மட்டும் பிடித்துக்கொள். நீ எவ்வளவு பாவம் நிறைந்தவனாய் இருந்தாலும், அவர்மூலமாய் நீ தேவனோடு ஒப்புரவாகலாம் நமக்காகப்; பரிந்து பேசும் மத்தியஸ்தர் ஒருவராகிய இயேசு போதும். நமக்காக மன்றாட கிறிஸ்துவானவர் எப்பொதும் மாறாதவராயிருக்கிறார். பிதா அவர் கேட்கிறதை மறுக்கிறதேயில்லை. அவுர் சுபாவதே அன்பு. இரட்சிப்பதே அவர் விருப்பமும் வேலையுமாய் இருக்கிற. அந்த வேலையில் அவர் ஆனந்தம் கொள்கிறார். ‘தமதுமூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்போதும் உயிரோடிருக்கிறவர். ஆகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராய் இருக்கிறார்” ஆகையால் இயேசுவின் மூலமாய்த் தேவனண்டைக்குப் போக உன்னை ஏற்றுக்கொள்வது நிச்சயம் சந்தேகமின்றி உன்னையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார்.

பிதாவின் சமூகத்தில்
மன்றாடி நிற்கிறார்
அவரிடம் சொன்னால்
உன் மனு கேட்கப்படும்.

இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்

ஜனவரி02

“இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” ஆதி. 29:35

நன்றிகேடுபெரும் பாதகம். ஆனால் இது வெகு சாதாரணமான பாவமாகிவிட்டது. நாம் நன்மைகளைப்பெற்றுக்கொள்ளுகிறோம். நன்றி செலுத்தாமல் அவைகளை அனுபவிக்கிறோம்.நன்மைகளுக்கு தேவனைத் துதிக்காமல் இருப்பதால் அவைகள் நம்மை விட்டுஎடுக்கப்பட்டுப் போகின்றன. நாம் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து சொல்லாதஎத்தனை உபகாரங்களை நாம் பெற்றனுபவித்திருக்கிறோம்! ஸ்தோத்திரபலி இடுகிறவன்என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் பெற்றுக்கொண்டநன்மைகளைக் குறித்துச் சிந்தித்து, நம்முடைய நன்றிக்கேட்டுக்காகத்துக்கப்பட்டு லேயாளைப்போல் ‘இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்” என்றுசொல்லுவோம். இப்படி சொல்வது இம்மைக்குரிய நன்மைகளுக்காகவும் இப்பொழுதே அவரைத்துதிக்கத் தொடங்குவோமாக. கர்த்தர் இதுவரையில் நமக்குச் செய்ததற்காகவும், இனிசெய்வேனென்று வாக்களித்திருகிறதற்காகவும், ஆதாமின்மூலமாய் நமக்குக் கிடைத்தநன்மைகளுக்காகவும், அதிலும் அதிகமாய் கிறிஸ்துவினாலே நாம் பெற்றுக்கொண்டநன்மைகளுக்காகவும் அவரைத் துதிக்கக்கடவோம். நமது தேவைகளையெல்லாம் அவர்சந்தித்ததற்காகவும் பணமின்றி இலவசமாய் அவைகளையெல்லாம் நமக்குத்தருகிறதற்காகவும் அவரை துதித்து நன்றி சொல்வோம். அவர் நமக்கு தருவது இன்பமானாலும்,துன்பமானாலும் சகலத்தையும் அன்பினால் தருகிறார்.

ஆதலால் அப்போஸ்தலன் புத்தி சொல்லுகிறபடி “எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம்”செய்யக்கடவோம். அப்படி செய்வதே கிறிஸ்துவுக்குள் உங்களைக் குறித்து தேவ சித்தம்.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்வின் நாமத்திலே எப்போதும்எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் செய்யுங்கள். ‘துதிசெய்வதே செம்மையானவர்களுக்குத் தகும்”

தேவனைத்துதி, உள்ளமே
அவர்ஈவை நினை
நன்மைகளைஎன்றும் மறவாதே
மௌனமாயிராதே.

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

Popular Posts

My Favorites

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08 "சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்." ரோமர் 8:12 அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர்....