Home Blog

மனம் கசிந்தேயொரு ஜெபம்

மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது – தன்
ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு – உன்
மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு

இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
இனம் தெரியாத நோய் எது வந்தபோதும் – அதை
குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு
உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு

பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது – பாவச்
சுமையினில் எமை மீட்க வந்தது யாரு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு
கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு
கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு

நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு – ஆவியில்
எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு – அந்த
இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்

இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்
இன்னும் வேண்டுமோ உனக்கொரு பாடல்
எழுது மகனே என்றார் – என்
நாமம் மகிமைபெற செல்லுமிடமெல்லாம்
பாடு மகனே என்றார்

நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்
நல்ல மேய்ப்பன் என் பாடல் உனக்குத்
தினம் நம்பிக்கை தந்துவிடும் – என்
வார்த்தையில் தினமும் கீழ்ப்படிந்தால்
உனக்குச் சீரிய வாழ்வமையும்

உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது
உவமைகளால் என் உதட்டினைத் தினமும்
உனக்காய்த் திறந்து வைப்பேன் – அந்த
உண்மை நிலை உணர்ந்து உலகில் வாழ்பவர்க்கு
உன்னதப்பாட்டெழுது

நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்
நன்மை கிருபைகளை நாளும் உனக்காக
தந்திட நான் மறவேன் – தினம்
என்னை இயேசுவென மகிழ்ந்து பாடுமுந்தன்
மனக்குறை நான் அறிவேன்

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே
உபத்திரவங்கள் நிறைந்த உலகம்
உன்னைத் துன்பப்படுத்தும் – அதை
ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று
விரைந்து வா மகனே

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்
உயிரைத் தந்து உலகில் உன்னை
உலவவிட்ட இறைவன் – இன்று உன்
அழுக்கை நீக்கி ஆத்துமாவை
தேற்றவே அழைக்கிறார்

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா
பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில்
பாவம் குறைந்திடுமா – சிலுவை
சுமக்கும் இயேசு கிருபையின்றி
மீட்பும் அடைந்திடுமா

அழைப்பு ஒன்று உனக்கு உண்டு
எழுந்து வா மகனே – இறைவன்
சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு
தூக்கி வா மகனே

காப்பார் காப்பார் எந்தன்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
ஆவியில் நிறைவாகி தீர்க்க
தரிசனங்கள் சொல்வேன்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
பாடுகள் அனுபவித்து
பாவச்  சேற்றினில் மீட்டவரை
பாடுகள் அனுபவித்து
பாவச்  சேற்றினில் மீட்டவரை
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே

நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே…

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
மனம் நிம்மதி இன்றி அலைமோதிடும் வேளை
இளைப்பாறுதல் தரும் நிழல் நீரன்றோ
உமதண்டையே எமக்குப் பரலோகமே
உமதண்டையே எமக்குப் பரலோகமே
அதைத் தரவேண்டியே இன்று துதி பாடினோம்

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
பழி பாவங்கள் நெஞ்சில் குறைவானதே
உமது பரிசுத்தத்தால் அவை மறைவானதே
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
தினந்தோறுமே ஜெபத்தில் நிறைவாகினோம்
ஜெகஜோதியே எங்கள் குறை தீருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
மனம் மாறியே தினமும் மன்றாடினோம்
உமது மலரடியிலே இன்று சரணாகினோம்
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
அருள் வாக்கினால் எம்மைக் குணமாக்கவே
மன இருள் நீக்கியே ஞான ஒளி தாருமே

சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா
சபை கூடியே ஒரு சங்கீதம் பாடுகிறோம்
எங்கள் அருள்நாதரே நீர் அதைக் கேட்க வருவீரைய்யா

திடன் கொள் மகனே என்றவர்

திடன் கொள் மகனே என்றவர்
தினம் வந்து திருத்தியே நடத்துவார்
பலங்கொள்ள அவர் என்னை
பரிசுத்தஆவியால் பரிவுடன் நிரப்புவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உலகத்தில் உனக்கே உபத்திரவம் உண்டு
மகனே கலங்காதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே
உனக்காய் ஜீவனைத் தருவேன்
எந்தன் வாக்கை நீ மறவாதே

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆபத்து வேளையில் கூப்பிடும்
போதெந்தன் அருகினில் வருகிறார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்
ஆண்டவா என்று அழைத்திடும் போதவர்
அன்போடு கைநீட்டுவார்

என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்
என் மேய்ப்பர் என்னோடு இருக்கிறார்
என் இயேசு என்னோடு வாழ்கிறார்

நல்ல பாடலொன்று தினமும்

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்
வல்ல தேவன் என்றே என்னை நீ
வாழ்த்தியே பாடிவிடு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
உள்ளம் களிகூர்ந்தே
எனக்காய் பாடிடும் வரம் தருவேன்
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே
நீ செல்லுமிடமெல்லாம் எந்தன்
நாமத்தையே பாடு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
கள்ளமில்லா எனது அடியவர்
உள்ளத்தில் வாசம் செய்வேன்
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே
நீ பாடும் துதியில் எல்லாம் எந்தன்
பரிவினை எடுத்துச் சொல்லு மகனே

நல்ல பாடலொன்று தினமும்
உனக்காய் நான் தருவேன்

வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
வள்ளலே உமதன்பை என்றும் நான்
பாடிடும் வரம் தாரும்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் வாழ்வு முடியும் வரை
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்
உமக்காய்ப் பாடிக்கொண்டேயிருப்பேன்

அன்பு கொண்ட மனிதனே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே
இன்னல் காணும் இந்த உலகில்
எந்த நன்மையும் இல்லையே
இங்கு காணும் இன்பம் யாவும்
இடையில் தோன்றும் மாயையே

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

கல்லும் மலையும் கடந்து சென்றே
கடவுளைக் காண முடியுமோ
உள்ளும் புறமும் உனக்குள் வாழும்
தெய்வத்தை நீ மறந்ததேன்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்
எல்லையில்லா அன்பை நீயும்
இயேசுவிடத்தில் காணலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

அல்லும் பகலும் அலைந்து உழைத்தும்
மனதில் நிம்மதி இல்லையே
கொல்லும் துன்பம் எதையும் வெல்ல
வல்ல தேவன் அழைக்கிறார்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்
கள்ளமில்லா இயேசு அன்பை
கண்டு நீயும் மகிழலாம்

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

மின்னல் போல மனித வாழ்வு
இடையில் தோன்றி மறையுமே
இன்று நீயும் மனந்திரும்பி
மகிமை வாழ்வு அடையலாம்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்
அண்ணல் இயேசு அன்புகூர்ந்து
அருகில் உன்னை அழைக்கிறார்

 

அன்பு கொண்ட மனிதனே – உன்னை
அழைக்கிறார் என் தெய்வமே

கர்த்தரை நோக்கியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

வல்லமை நிறைந்தவர் வாக்குமாறாதவர்
பரிசுத்தரும் இவரே
உன்னதமானவர் உயிர்த்தெழுந்தே இன்னும்
ஜீவிக்கிறார் நம்பிக் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

தேவனை நோக்கியே கூப்பிடு
உன்னைத் தெரிந்து கொள்வாரவர் கூப்பிடு
உன்னத கிருபையால் தினம் உன்னைத் தேற்றிடும்
மன்னவனைப் போற்றியே கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய
இயேசு நாதனையே கூப்பிடு
அற்புதமானவர் இரட்சிப்பைத் தந்திடவே
அழைக்கத் துடிக்கிறார் கூப்பிடு

கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
உன்னைக் காத்திடும் மேய்ப்பனைப் பணிந்திடு
கர்த்தரை நோக்கியே கூப்பிடு
உன்னைக் கரம் பிடிப்பாரவர் புறப்படு

Popular Posts

My Favorites

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23 "எங்களை எப்படிச் சிநேகித்தீர்" மல். 1:2 இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச்...