முகப்பு தினதியானம் ஒகஸ்ட் கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

ஓகஸ்ட் 29

“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்” ஏசாயா 49:13

இந்த உலகத்தில் கர்த்தருக்குச் சொந்தமான ஜனங்கள் உண்டு. வேதாகமத்தில் எங்கும் இதைப் பார்க்கலாம். தமது ஜனத்தை தேவன் அதிகமாய் நேசித்தார். இரட்சிப்புக்காகவே இவர்களை தெரிந்துக் கொண்டார். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்கிறார். அவர் அவர்களைத் தமது அன்பான குமாரனோடு இணைத்து ஐக்கியப்படுத்தி ஒன்றுப்படுத்துகிறார். அவரின் கண்மணிப்போன்று அவர்கள் அவருக்கு அருமையானவர்கள். என்றாலும் அவர்களுக்குப் பலத்த சோதனைகள் வரும். அவர்கள் அதிக பெருமூச்சு விட்டுத் தவிக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாவிகள்தான். பாவம் புண்ணாக வெளியே காணவிட்டாலும் உள்ளே புடம் வைத்து இருக்கிறது. வெளியரங்கமாய்ப் பாவத்தால் அவர்களுக்குத் தண்டனையில்லையென்றாலும் அது அவர்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது.

காபிரியேலைப்போல் நன்றி செலுத்துவதற்காண காரணங்கள் அதிகம். இருந்தபோதிலும், அவர்களை மனமடிவாக்கி சிறுமைப்படுத்தும் அநேக காரியங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் தேவனோ அவர்களை ஆற்றித் தேற்றுகிறார். தமது பரிசுத்த வசனத்தை அனுப்பி, அவர்களை தேற்றி, கிருபாசனத்தை ஏற்படுத்தி அவர்களின் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து தமது சமாதானத்தை அளித்து, தாம் அவர்கள் பிதா என்று உறுதி அளித்து, முடிவில்லாத பாக்கியம் கிடைக்கப்போவதை அவர்களுக்கு விவரித்து, இவ்விதமாய் அவர்களைத் தேற்றுகிறார். நித்தியமான தேவன் ஒரு புழுவுக் ஆறுதல் சொல்ல முனைவது எவ்வளவு பெரிய தாழ்மை. முன்னே கலகம் செய்த துரோகியை ஆற்றித் தேற்றுவது எவ்வளவு பெரிய தயவு.

இந்த மகிழ்ச்சி அந்நியர்
அறியார் பெறவும் மாட்டார்
நேசர்மேல் சார்ந்தோர்தான்
இதில் களித்துப் பூரிப்பர்.