முகப்பு துண்டு பிரதிகள் நன்றியுள்ள ஒரு நண்பன்

நன்றியுள்ள ஒரு நண்பன்

குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதிகபிரயோஜனமான ஒரு நல்ல நாய் அவனிடம் இருந்தது. இந்த நாய் மிகவும் வயதானதாகிவிட்டதால். நன்றி கெட்ட தன் எஜமான் அதை கொண்டுபோய் தண்ணீரில் மூழ்கச்செய்து கொன்றுபோட்டுவிட தீர்மானம் செய்தான. ஒருநாள் இக்குடியானவன் நாயை அழைத்துக் கொண்டு தன் வயலுக்கு பக்கத்திலிருந்த ஒருநதியண்டை போனான். அங்கே ஒரு படகில் தன் நாயை ஏற்றிக் கொண்டு நதியின் ஆழமான இடத்துக்கு படகை ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகு அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ஒரு பாரமான கல்லை ஒரு கயிற்றில் கட்டி, அந்த கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி, நாயை கொன்றுபோட்டுவிட தண்ணீருக்குள் தள்ளிவிட்டான். அந்த நாய் தண்ணீரில் மூழ்கிப் போகும்போது, திடீர் என்று கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துபோயிற்று. அப்போது நாய் ஊளையிட்டுக்கொண்டு மறுபடியும் படகுக்குள் வர முயற்சித்தது. கொஞ்சமேனும் இரக்கமற்ற எஜமான் கருணையற்றவனாய் அந்த வயது சென்ற நாயை பலமுறை தன் கையிலிருந்த துடுப்பால் தண்ணீரில் அமிழ்ந்துபோக தள்ளினான்.

கடைசியில் கல் நெஞ்சம் படைத்த அம்மனுஷன் நாயை பலமாக துடுப்பால் ஒரே அடி அடித்து நதியின் தண்ணீரின் ஆழத்தில் தள்ளிப் போட கையை ஒங்கினான். அச்சமயம் தவறி அவனே தண்ணீரில் விழுந்துவிட்டான். பின்பு நீந்தி வெளியே வர முடியாமல் தவித்து அமிழ்ந்துபோகும் தருணத்தில் இருந்தான். தன் எஜமான போராடிக்கொண்டிருக்கிறதை கண்ட நாய் அவன தன்னை அவ்வளவு கொடூரமாய், நன்றி கெட்டவனாக அப்போது நடத்திஇருநதபோதும், அவனுடைய உடுப்பை தன் வாயால் கடித்து, இழுத்துக்கொண்டு வந்து அவனை பத்திரத்தோடு கரையில் சேர்த்தது.

என் அருமை நண்பா ! சற்று நிறுத்தி யோசித்துப் பார்! எல்லா அன்புக்கும் நேர்மைக்கும் விரோதமாக பாவம் செய்து பயங்கரமான குற்றவாளிகளாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். யோசித்துப்பார். சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததைப் பார்ப்போம். அவர் தேவாதி தேவன்; சத்தியமும் ஒளியும் நிறைந்தவர்; அழிவுக்குள்ளும் தரித்திரததிலுமுள்ள மனுஷனுக்கு தம் பரம அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தார். அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்; குருடருக்கு கண்பார்வை அளித்தார்; மரித்தோரை எழுப்பினார்; பசியுள்ளோரை போஷித்தார்; சோர்ந்துபோனவர்களுக்கும் துக்கமுள்ளவர்களுக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து நன்மை செய்து சுற்றித்திரிந்தார். இப்படிப்பட்டவருக்கு மனுஷன் என்ன செய்தான்? அவனை அகற்றும் அகற்றும் என்று சத்தமிட்டு கூவி சிலுவை மரததில் அறைந்தான். ஐயோ ! மனுஷனுடைய இருதயம் எவ்வளவு மோசமாய் கெட்டுப்போய் கசப்பு நிறைந்து இருக்கிறது ! நம்முடைய இருதயத்தின் நிலையும் இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது. பரிசுத்த வேதம் போதிப்பதாவது: எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனுஷனுடைய) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் (எரேமியா 17:9). ஒரேஒரு நொடியில் அவருடைய கரத்திலிருந்து நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் நாம் அவருடைய பாதையை விட்டு விலகிப்போனால் உடனே அவர் நம்மை விட்டுவிலகி போய்விடுவார் !

இந்த மாட்சிமையான தேவ மனுஷன் நடு சிலுவைபில் கோர காட்சியோடு தொங்குகிறது தேவனுடைய உள்ளம் எப்படிப்பட்டது என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எதிர்த்து ஒரு இழிவான வாரத்தையோ, வெறுப்பான வார்த்தையோ தன் விரலை சுட்டிக்காட்டி எதிர்த்து பேசவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் இருந்தார். இவை எல்லாம் உலகத்தில் இருக்கிற எல்லா குற்றவாளிகளுக்கும் பாவிகளுக்கும் தேவன் காண்பிக்கிற பரம அன்பு.

ஓ ! என்ன அருமையான அன்பின் குணம் இது
அவர் இன்றைக்கு திறந்த இருதயத்தோடும்
ஆணிகளால் கடாவப்பட்ட
விரிக்கப்பட்ட கரங்களோடும் நிற்கிறார் !
ஓ! அவரது இரக்கம் இணையற்றது
இந்த இணையற்ற இரக்கத்தை
தம் சத்துருக்களுக்காக எடுத்துக்காட்டுகிறார்.

பிறகு இவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதெனறு. அறியாமலிருக்கிறார்கள்’ என்று ஜெபித்தார்.

மனுஷன் அவரை சிலுவையில் அறைந்து அங்கே அவருக்கு ஒரு முடிவு கட்ட எண்ணமிட்டான். ஆனால் சபிக்கப்பட்ட அதே கல்வாரி சிலுவையின் கொடூர மரணத்திலிருந்து, மனந்திரும்பி, தன் பாவங்களை அறிக்கை செய்து, அவரைத் தன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொரு பாவியான மனுஷனுக்கும் இரட்சிப்பின் கிருபையின் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

நாம் படித்த கதையில் அந்த நன்றியுள்ள நாய் தன் எஜமானின் ஜீவனை காப்பாற்றியது. இயேசு கிறிஸ்து இரட்சிக்கும்போது நம்மை மீட்டு இரட்சிக்கிறார்;. அவர் சொற்ப காலத்துக்காக மட்டுமல்ல் நித்திய காலத்துக்கென்று நம்மை இரட்சிக்கிறார் “தன்னை விசுவாசிப்போருக்கு அவர் நித்திய ஜீவனை கொடுக்கிறார்.
இதை வாசிக்கும் என் அருமை நண்பா! இந்த ஆச்சரியமான இரட்சகரை இன்னும் உன் இரட்சகராக அறியாமல் இருப்பாயானால், கிருபையின் நாளாகிய இதே நாளில், இன்றைக்கு, அவரண்டை வந்து அவர் அளிக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நான் உன்னை துரிதப்படுத்துகிறேன். இவ்வுலகத்தை நியாயம் தீர்க்க அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் அப்போது அவருடைய கோபம் பற்றி எரியும். அந்த பயங்கரமான நாளில் தெய்வ பக்தியற்றவர்களும், பாவிகள் எல்லோரும் அவருக்கு முன்பாக நிற்பார்கள் ஒருவரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”.

“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உணடாயிருக்கிறது” (1யோவான் 4:9,10)