முகப்பு தினதியானம் சிலுவையைப்பற்றி வரும் இடறல்

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.