ஜனவரி 29
“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.” சங். 119:11
பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.
நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.
தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.