முகப்பு தினதியானம் ஜனவரி நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

ஜனவரி 30

“நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்.” 1.யோவான் 5:19

இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். எவ்வளவு பெரிய ஆறுதல். நாம் தேவனால் உண்டானவர்கள். கிறிஸ்து இயேசுவின் வல்லமையினாலும் அவரின் இரத்தம் நம்மேல் தெளிக்கப்பட்டதினாலும், அவரின் சேவைக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டிருக்கிறோம். நித்திய காலமாய் நாம் அவரை ஸ்தோத்தரிக்கு, பரிசுத்தமும் பிரயோஜனமுள்ளவர்களாய் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம். முன்பு அவருக்கு விரோதமாய் கலகஞ் சொய்தோ. இப்போதோ மனமார அவருக்கு ஊழியம் செய்கிறோம். முன்பு அவருக்கு விரோதமான சத்துருக்கள். இப்போதோ அவருக்குப் பிரியமான சிநேகிதர். முன்பு கோபாக்கினையின் புத்திரர். இப்போதோ அவர் நேசத்திற்குரிய பிள்ளைகள்.

அவருடைய வசனத்தை விசுவாசிப்பதினாலும் அவரோடு ஜக்கியப்பட்டிருப்பதினாலும், பாவஞ் செய்வது நமக்கு துக்கமாய் இருப்பதினாலும், அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் இருப்பதினாலும், வாக்கிலும், செய்கையிலும், நோக்கிலும், ஆசையிலும் உலகத்தாருக்கு வித்தியாசப்படுவதினாலும், நாம் தேவனால் உண்டானவர்களென்று அறியலாம். தேவனால்தான், நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். நாம்தான் அவரின் சொத்து, அவரின் பொக்கிஷம். அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. என்ன பாக்கியம். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். இது நமக்கு கிடைத்த கிருபை. இக்கிருபை இல்லாமல் ஒருபோதும் நாம் வாழ முடியாது.

தேவனே என்னோடு வாரும்
என் சமீபத்தில் தங்கும்
எது போனாலும் போகட்டும்
நீர் இருந்தால் போதுமே.