முகப்பு தினதியானம் ஜனவரி கர்த்தாவே நான் உமது அடியேன்

கர்த்தாவே நான் உமது அடியேன்

ஜனவரி21

“கர்த்தாவே நான் உமது அடியேன்” சங்.116:16

நாம்கர்த்தருடைய ஊழியக்காரர். அவருடைய மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். அவர்துதியைச் சொல்லி வர மீட்கப்பட்டோம். அவரின் மேன்மையான குணங்களைவிளக்குவதற்கே உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய நெருங்கிய உறவினர்கள். இயேசுவானவர்நமது எஜமான். அவர் சித்தம் நமக்குச் சட்டம். அவருக்குப் பிரியமானதெதுவோ,அதுவே நமக்கு ஆனந்தமாயிருக்கவேண்டும். நமது எஜமானே நமக்கு முன்மாதிரி. அவர்பிதாவின் ஊழியக்காரனாக உலகத்துக்கு வந்து சகலத்தையும் பிதாவின் சித்தப்படியேசெய்து முடித்து பிதா கட்டளையிட்ட சகலத்தையும் முணுமுணுக்காமல் செய்து முடித்தார்.அன்று அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால் இப்பொழுது உயர்த்தப்பட்டு,மேன்மையாக்கப்பட்டு மகா உன்னதத்தில் இருக்கிறார்.

அவர்நம்மைப் பார்த்து ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்யமனதானால் அவன் என்னைபஇபோலிருக்கக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என் பிதா அவனைக் குனப்படுத்துவார் என்கிறார்.நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதினால் மனுஷன் நம்மைக் குறைவாய் எண்ணினாலும்எண்ணலாம். ஆனால் தேவனோ நம்மை மேன்மைப்படுத்துவார். உலகம் நம்மை நித்தித்துஅவமதிக்கலாம். அவர் தம்முடைய சமுகத்தாலும் அன்பான பார்வையாலும் நம்மைக்கனப்படுத்தி பிறகு நம்மை மகிமையில் சேர்த்துக் கொள்வார். இன்றைக்கு நாம்யாருக்கு ஊழியஞ் செய்தோம்? யாரைப் பிரியப்படுத்தினேம்? யாருடைய வேலைக்குமுதலிடம் கொடுத்தோம்? அவர் நம்மை அழைக்கும்போது அவரண்டைக்குப் போகமனமுள்ளவர்களாய், அல்லது நம்மை உலகத்தில் வைக்கும் பரியந்தமும் அவருக்குஊழியஞ்செய்ய முனமுள்ளவர்களாய் இன்றைய நாளில் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்அடியார்
மகாமேன்மை உடையார்
அவர்நுகம் சுமப்போர்
தேவாசீர்வாதம்பெறுவர்.