முகப்பு தினதியானம் என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.