முகப்பு தினதியானம் கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

பெப்ரவரி 16

“கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” எபேசி. 2:5

நாம் இலவசமாய் இரட்சிக்கப்படுகிறது எவ்வளவு பெரிய தேவ இரக்கம். நமது இரட்சிப்பு துவக்கம் முதல் முடிவுவரை கிருபைதான். உலகம் தோன்றுமுன்னே அது தேவ சித்தமாய் முன் குறிக்கப்பட்டது. நாம் இரட்சிப்புக்கென்றே தெரிந்துக்கொள்ளப்பட்ட்டோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். தேவன் நம்மை தெரிந்தெடுத்து அவரோடு நித்திய நித்தியமாய் நாம் வாழவே. கர்த்தர் தமது சுய சித்தப்படியே நம்மை இரட்சிப்புக்கு தெரிந்தெடுத்தார். அவர் மாறாதவர். ஆகவே அவர் திட்டமும் மாறாது. தேவ புத்தகத்தில் நம்முடைய பெயர் இருக்கிறது. தேவன் ஆரம்பித்த கிரியைகளில் நமக்கும் பங்கிருக்கிறது. பரிசுத்தவான்களின் சுதந்தரமும் நமக்குண்டு. நாம் உலகத்திலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்டோம். இது பெரிய தேவ தயவு.

நாம் மீட்கப்படவே நமக்காக கிரயம் செலுத்தப்பட்டது. நம்மை விடுவிக்கவே வ்லமை புறப்பட்டது. நாம் தேவனோடு பேசுகிறோம். தேவ இராஜய்த்தின் இரகசியங்களை தெரிந்துக்கொள்வதும் எத்தனை தயவு. தேவன் நமக்குக் கொடுக்கும் கிருபை எத்தனை பெரியது. இது வல்லமையும் மேன்மையுமுள்ளது. இப்படி நாம் அழைக்கப்பட்டதினால் புது ஜீவனுக்கும், பரம அழைப்புக்கும், சகல நன்மைகளுக்கும் பங்குள்ளவர்களாகிறோம். தேவ வல்லமையால் நாம் காக்கப்படுகிறோம். இதுவும் பெரிய கிருபை. சத்துருவின் கைகளுக்கும், விசுவாசத்தைவிட்டு வழுவாமல் காக்கப்படுவதும் கிருபையே. இப்படி செய்வதினால் தேவன் நம்மை எல்லாவற்றிலிருந்தும் இரட்சிக்கிறார் என்பது உண்மையாகிறது. நாம் சீக்கிரத்தில் மறுரூபமாவோம். அப்போது மோட்சத்தில் இலவசமாய் நுழைவோம். இரட்சிப்பு இலவசமாய் கிடைப்பதினால் அதை எவரும் பெற்றுக்கொள்ளலாம். துவக்க முதல் முடிவு மட்டும் அதினால் உண்டாகும் மகிமை கர்த்தருடையதாகவே இருக்கும்.

தேவகுமாரன் மரித்ததால்
நமக்கு இரட்சிப்புண்டாயிற்று
பாவிகளை மீட்டதால்
துதிகள் வானம் எட்டியது.