முகப்பு தினதியானம் அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.