கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12

“கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது” அப். 21:14

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும் உண்டாக்குவது அவர் சித்தமானால், நாமும் இப்படியே அனுதினமும் சொல்ல வேண்டாமா? இந்த விருப்பம் நமது இருதயத்திலும் வளர விட வேண்டாமா? அவர் ஞானம் அளவற்றது. அவர் ஞானமுள்ளதை விரும்புகிறார். அவர் நமது ஷேமத்தையே விரும்புகிறார். நோக்கம் வைத்தே தேவன் கிரியை செய்கிறார். அவர் என்னதான் நமக்குச் செய்தாலும் நாம் நமது சொந்த சித்தப்படியே நடக்கப் பார்க்கிறோம். இப்பொழுது இருக்பிற நிலைமையிலும் வேறுவிதமாய் இருந்தால் நல்லது என்கிறோம். நமது தேவனுடைய சாமர்த்தியம், உண்மை, தயவு இவைகளில் குறைவுபடுகிறோம். எத்தனை மதியுPனம் இது. சில வேளைகளில் யோசனை இல்லாமைதான் இதற்குக் காரணம். விசுவாசக் குறைவினாலும் இது உண்டாகலாம். ஆனால் தன்னயப் பிரியமாகிய பாவந்தான் இதற்கு முக்கிய காரணம். இதற்குக் காரணம் சுய இஷ்டமே. அதனால் வருத்தமும் அடைகிறோம்.

தேவனை எதிர்க்கிறதுpனால் நம்மை வருத்தப்படுத்திக்கொள்கிறோம். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சித்தம் நிறைவுள்ளதென்றும் மேன்மையானது என்றும் சொல்கிறோம். ஆனால் நம் பிரியப்படி நடவாவிட்டால், தேவன் நம்மை சோதித்தால், நம்மை பரீட்சித்தால், நாம் முறுமுறுக்கிறோம் அல்லது சோர்ந்து விடுகிறோம். விசுவாசியே, நீ பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாக்கியவானாய் இருக்கவேண்டும். நித்திய நன்மையை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் சுய இஷ்டத்தை உடனே உதறித் தள்ளி எப்பொழுதும் அவர் சித்தம் ஆகக்கடவது என்று சொல்லிப்பார்.

என் ஜீவ காலமெல்லாம்
தேவை எதுவோ தருவீர்
உமது சித்தமே நலம்
அதுவே என் பாக்கியம்..

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”  மத். 5:5

சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை மதித்து நடுங்குகிறார்கள். இவர்கள் தேவன் சொல்லும் எல்லாவற்றையும் முறுமுறுக்காமல் காற்றுக்குச் செடி வளைகிறதுப்போல வணங்கி கர்த்தரின் சித்தம் ஆகக்கடவது என்பார்கள்.

சாந்த குணமுள்ளவர்கள் மௌனமாய்த் தேவ கட்டளைகளுக்கு அர்ப்பணித்து இயேசுவைப்போல் பொறுமையாய் நடந்து, பரிசுத்தாவியின் நடத்துதல்படி நடப்பார்கள். அவர்கள் தேவனிடம் தாழ்மையோடும், பிறரிடம் விவேகத்தோடு நடந்து தங்களுக்குப் புகழைத் தேடாமல் கர்த்தருக்கு மகிமையைத் தேடுவார்கள். இவர்கள் சாந்த குணமுள்ள ஆட்டுக்குட்டிகள். கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அல்ல. சாதுவான புறாக்கள். கொல்லுகிற கழுதுகளல்ல. ஆட்டைப்போல உபகாரிகள். ஓநாய்போல கொலையாளிகளல்ல. இவர்கள் கிறிஸ்துவைப்போல் நடந்து அவரைப்போல் பாக்கியராயிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு இருப்பது எல்லாம் கொஞ்சந்தான். ஆனால் பூமியைச் சீக்கிரத்தில் சுத்திகரித்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனநிலையே பெரிய பாக்கியம். ஒன்றுமற்றவர்களைக் கலங்கடிக்கும் பூசலுக்கு விலகி இருக்கிறார்கள். மற்றவர்கள் சேதப்படும்போது இவர்கள் தப்பி சுகமாய் காக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் சாந்தமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கலங்கி இருக்கும்போது இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் சாபமாகும்போது இவர்கள் ஆசீர்வாதமாகிறார்கள்.

ஏழைப்பாவி நான்
சாந்தம் எனக்களியும்
ஏழை பலவீனன் நான்
தாழ்மையை எனக்கருளும்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்

ஏப்ரல் 16

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன்” யோபு 19:25

மரணத்துக்குரிய உலகில் நாம் வாழ்கிறோம். சிநேகிதரும் இனத்தாரும் ஒவ்வொருவராய் மரித்துக்போகிறார்கள். ஓர் இனத்தான் மட்டும் மரிக்கிறதேயில்லை. இயேசுவே அந்த இனத்தான். நம்மை மீட்கும் சுதந்தரம் அவருக்குண்டு. நம்மை மீட்கும் பொருளைக் கொடுத்ததுமல்லாமல் முற்றும் விடுதலையாக்க உயிரோடிருக்கிறார். தேவ வலது பாரிசத்தில் நமது தன்மையைத் தரித்தவராயிருக்கிறார். மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக இருக்கிறார். என்றும் இருக்கிறவராகவே இருக்கிறார். அவரின் இவ்வேலையை வேறு ஒருவரும் செய்ய முடியாது. அவர் நமக்காக மன்றாடி நம்முடைய சத்துருக்களை ஜெயித்து, கிருபைகளைப் பூரணப்படுத்தி மரணத்தினின்று நம்மை மீட்டுக் கொள்வார். அவர் இரண்டாம் முறை பாவமில்லாமல் வருகையில் நம்மை இரட்சித்து மகிமைப்படுத்துவார்.

வேத வசனத்தின்மூலமும், பரிசுத்தாவியானவரின் போதனை மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம். நாம் நம்பியிருக்கும் வண்ணமே அவரை அறிந்துக்கொள்ளுவோம். நான் என் மீட்பராக அவரை அறிவேன். அவர் என்னைச் சாத்தானிடமிருந்தும், பழைய பாவத்திலிருந்தும், பொல்லாத உலகத்திலிருந்தும் மீட்டுக் கொண்டார். அவர் கரத்தில் என் ஆவியை ஒப்புவித்திருக்கிறேன். அவர் என்னை மீட்கும்படி உயிரோடிருப்பதால் நானும் பிழைத்திருப்பேன்.

என்றென்றும் நம்மை நேசித்து என்றுமே நம்மை பிழைப்பிக்கிற ஒரு நண்பன் நமக்கு இருப்பது எத்தனை மகிழ்ச்சி? நாம் அவருக்குப் பிரியமானவர்களானபடியால் நம்முடைய காரியம் அவருடைய கரத்தில் பத்திரமாயிருக்கும். இயேசுவே நான் இன்னும் அதிகம், உம்மை நேசித்தால் எவ்வளவு நலம்.

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
எனக்காகப் பேசுகிறார்
அவர் அளிப்பது இரட்சிப்ப
ஜீவன் சுகம் பூரிப்பு

சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?

ஏப்ரல் 24

“சமீபத்திற்கு மாத்திரமா தேவன்?” எரேமி. 23:23

தேவபிள்ளை ஒரு சிநேகிதனைத் தேடி தூரமாய்ப் போகவேண்டியதில்லை. கர்த்தர் எப்போதும் அவனுக்குச் சமீபமாயிருக்கிறார். அவர் சமீபத்திலிருக்கிற தேவன். தேவன் நம்மைக் கவனிக்க தயாராயிருக்கிறார். உதவி செய்யவும் ஆயத்தமாயிருக்கிறார். இதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். நாம் கலங்கி இருக்கும்போது இதுவே நம்மைச் சந்தோஷப்படுத்தும். சோதனையில் இது நம்மை ஆறுதல்படுத்தும், பயத்தில் தைரியம் சொல்லும். பாவம் செய்யாதபடி தடுக்கும். கடமைகளை முடிக்க உற்சாகத்தைக் கொடுக்கும். சோர்ந்துப்போன சமயத்தில் எழுப்பிவிடும். நமது நண்பர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்கள். இனஜன பந்துக்கள் நமது கஷ்டத்தில் அதிகம் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தேவனோ நமது சமீபத்தில் இருக்கிறார். நமக்கு இரக்கங்காட்டி நம்மைக் கண்டிதஇது புத்தி சொல்லி ஆதரிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார்.

நமக்கு அவர் சமீபத்திலிருக்கிறது மட்டுமல்லாமல் எங்கும் இருக்கிறார். தூரத்திலிருக்கிற நம்முடைய சிநேகிதர்களோடு இருக்கிறார். மறைவிடங்களில் ஒளித்திருக்கிற நம்முடைய சத்துருக்களோடு இருக்கிறார். அவர்களுடைய யோசனைகளை அழித்து அவர்களுடைய விரோதங்களை நமக்கு நன்மையாக  நடத்துவார். தேவன் சமீபமாயிருக்கிறார். தூங்கும்போது அவர் விழித்திருந்து நம்மைப் பாதுகாக்கிறார். அவர் சித்தமின்றி ஒன்றும் நம் வாழ்வில் நடப்பதில்லை. தேவனுக்குத் திடீரென்று ஒன்றும்  சம்பவிக்கிறதில்லை. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பார்க்கிறார். சகலத்தையும் நன்மைக்காக முடிப்பேன் என்று அவர் சொல்லியிருப்பதால் அந்த எண்ணத்தோடு இருப்போமாக. ஆத்துமாவே! நீ ஒருபோதும், உன் தேவன் சமீபத்திலிருக்கிறார் என்பதை மறவாதபடிக்குப் பார்.

தேவனே எனக்கு
உமது மகிமையைக் காண்பியும்
உமது வல்லமையே
என் இதயம் உணரட்டும்.

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

ஏப்ரல் 11

“நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்” எசேக். 20:3

இந்த ஜனங்கள் தங்களை உத்தம மார்க்கத்தாரென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்டோர் தேவனுடையப் பார்வையில் மகா அருவருப்பானவர்கள். இவர்களைத் தேவன் தம்முடன் ஐக்கியப்பட இடங்கொடார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்தேனானால் தேவன் எனக்குச் செவி கொடார். வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது.

உன்னுடைய இருதயம் உத்தமமாய் இருக்கிறதா? உன் நடக்கை உண்மையுள்ளதா? நீ பாவத்தை நேசித்து, அதைச் செய்து, சாக்கு போக்குச் சொல்லுவாயானால் தேவன் உன்னுடன் ஐக்கியப்படார். உன்னைக் கழுவி சுத்திகரி என்பார். பாவம் ஆத்துமாவிற்குத் தீட்டு. பரிசுத்தம்தான் ஆத்துமாவிற்கு சுத்தரங்கம். பாவிகள் தீட்டுள்ளவர்கள். தேவன் அவர்களை வெறுக்கிறார். தன்னைப் பரிசுத்தவானென்று சொல்லி பாவம் செய்பவரைப்போல் அருவருப்பானவர்கள் வேறு யாரும் இல்லை. பாவம் உனது ஊழியத்தை கெடுத்துப் போடும். குறிப்பாய் நீ ஒரு பாவத்தை இன்னும் விடாதிருப்பாயானால், உன் ஊழியத்தை இன்னும் தள்ளிப்போடுவார். பாவத்தோடு உன் ஜெபத்தைக் கேளார். பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனானபடியால் அவர் உன்னை அருவருத்துத் தள்ளுவார். இயேசுவானவர் பாவத்திற்கு ஊழியம்செய்ய மாட்டார். அக்கிரமத்துக்கு உடந்தையாக தம் கிரியையைபை; பிரயோகிக்கமாட்டார். நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, சத்தியத்தினால் பரிசுத்தராக்கப்படகிறோம். நம்முடைய இருதயம் பாவத்திற்கு பகையாக இருக்கும்போதுதான் நம் ஜெபம் கேட்கப்படும். அன்பர்களே! பாவத்துக்கு இணங்க சோதிக்கப்படும்போது நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று தேவன் சொல்வதை நினைத்துக் கொள்வோமாக.

கர்த்தாவே என்னைக் கழுவும்
உள்ளத்தைச் சுத்திகரியும்
கிருபையின் ஆவி அளித்து
என்னைப் பரிசுத்தமாக்கும்.

உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

ஏப்ரல் 09

“உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது” 2.தெச. 1:3

இந்தப் பாக்கியம் தெசலோனிக்கேய சபையாருக்குக் கிடைத்த சிலாக்கியம். அவர்களின் விசுவாசம் அதிக அதிகமாய் பெருகிற்று. விதை செடியாகி செடி விருட்சமாயிற்று. குழந்தை வாலிபனாகி, வாலிபன் கிறிஸ்துவுக்குள் பெரியவனாவான். விசுவாசம் சத்தியத்தில் வேர் விடுகிறது. அது கன்மலைய உறுதியாய் பிடித்திக்கிறபடியால் என்ன புயல் அடித்தாலும் அறுந்துவிட முடியாது. அது உடன்படிக்கையின்மேலும், மாறாக தேவ சத்தியத்தின்மேலும் பலமாய் நிற்கிறது. முயற்சித்து அது வளருகிறது. சுவிசேஷம் செம்மையாய்ச் செய்வதனால் அது வளருகிறது. நமது விசுவாசம் வளருமேயானால் கிறிஸ்து நமக்கு அதிக அருமையானவராய் இருப்பார். அப்போது அவரைப்போலிருக்க அதிக வாஞ்சை கொள்ளுவோம். விசுவாசத்திற்கும் உணர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னதென்று அறிவோம்.

கர்த்தர் வாக்கு தந்தார் என்று பிரசித்தப்படுத்தி நம்புவோம். பரிசுத்தவான்களின் மேலிருக்கிற வாஞ்சை பலப்பட்டு உறுதியாகும். தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நமக்கிருக்கும் வைராக்கியம் பெரியதாகும். தேவ வசனத்தின்மேல் அதிக வாஞ்சையும் ஆசையும் உண்டாகும். தேவ வசனத்தின்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். பரம சிந்தை நம்விசுவாசத்திற்குத்தக்கதாய் வளரும். விசுவாசம் வளர வேண்டியது மிக முக்கியம். உங்கள் விசுவாசம் வளருகிற விசுவாசமாய் இருக்கும்படி பாருங்கள்.

விசுவாசித்து நடப்பேன்
கர்த்தர்மேல் பாரம் வைப்பேன்
அவர் சொல்வதை நம்புவேன்
அதுவே போதுமென்றிருப்பேன்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

ஏப்ரல் 04

“நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்.” 1.தீமோ. 1:12

கிறிஸ்துவை அறிந்துகொள்வது பெரிய கிருபை. நம்முடைய ஜெபத்துக்கு அதுதான் காரணம். நம்முடைய விசுவாசத்துக்கு அதுதான் ஆதாரம். அவரை அறிந்துக்கொள்ளுகிற பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவருடைய வசனத்தினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். தேவனுடைய பிள்ளைகள் கூறிய சாட்சிகளால் தேவனை அறிந்துகொள்ளுகிறோம். இதற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரின் போதனையினால் அவரை அறிந்து கொள்ளுகிறோம். ஆனாலும் நாம் அறிந்துகொள்ளுகிறது மிக குறைவுதான். அவரை நேசிக்கத்தக்கதாக, அவருடைய தன்மையை அறிந்துகொள்ளுகிறோம்.

தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட அவர் முடிந்த பூரணகிரியையை நம்பினவர்களாக அவரையே அறிய வேண்டும். நமக்குத் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்ள அவரிடத்தில் நிறைவு உண்டென்று அறிய வேண்டும். துன்பத்திலும், துக்கத்திலும் அவர் அருகில் செல்ல அவருடைய இரக்கத்தையும், உருக்கத்தையும் அறியவேண்டும். மற்றப் பாவிகள் ஜீவனையும் சமாதானத்தையும் அடைய அவரிடத்தில் செல்லுங்கள் என்று சொல்லுத்தக்கதாக, பாவிகளை ஏற்றுக்கொள்ள மனதுள்ளவரென்று அறிய வேண்டும். இரட்சகர் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். விசுவாசிக்கத்தக்கவரென்றும் நாம் அறிவோம். அவரை விசுவாசிக்கிற எந்த ஏழைப்பாவியையும் அவர் கைவிடமாட்டாரென்றும் அறிவோம். இவ்வாறு நாம் அறிவதினால்தான் நம்முடைய சகல காரியங்களையும் அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம். அவரை அறிந்திருக்கிறபடியால்தான் அவரை நம்முடைய கர்த்தரும் தேவனும் என்று சொல்ல நாம் வெட்கப்படுகிறதில்லை. அவர் தேவ குமாரன் என்றும், இரட்சகர் என்றும், தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றும் அறிவோம். நம்முடைய பாவங்களுக்காக மரித்து, நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார் என்றும் மறுபடியும் தம்மண்டையில் நம்மைச் சேர்த்துக்கொள்வார் என்றும் அறிவோம்.

யாரை விசுவாகித்தேனென்று
நான் அறிவேன் அது நல்லது:
நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை
பாதுகாத்திடவார் எந்நாளும்.

உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது

ஏப்ரல் 13

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது” லூக்கா 10:20

எத்தனை பெரிய பரம சிலாக்கியம் இது. தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுதலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டு ஜீவபுத்தகத்தில் பேர் எழுதப்பட்டிருத்தலும், எருசலேமில் உயிருள்ளோருடன் சேர்க்கப்படுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம். தெரிந்துக் கொள்ளப்படுதலே கிருபையின் முதல் காரியம். நாம் கிறிஸ்துவில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டோம். நமது இரட்சிப்பு அவர் கையில் ஒப்புவிக்கப்பட்டது. நமது செயல்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறது. நமது பெயர்களும் தேவனுடையவர்களோடு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நம்மீதும் நினைவுக்கொண்டிருக்கிறாரென்று நாம் சந்தோஷப்பட வேண்டியவர்கள். தேவன் நம்மை நினைத்தார். நித்திய ஜீவனுக்கென்று நம்மை நியமித்தார். நமது குறைகளுக்காக உடன்படிக்கையில் நிறைவுகளை சேர்த்து வைத்திருக்கிறார். விலையேறப் பெற்றதும், பெரியதுமான வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார்.

அவருடைய பட்டயம் நமது பாதுகாப்பிற்கு நீட்டப்பட்டிருக்குpறது. அவருடைய நாமம் நமது ஞாபகத்தில் எப்போதும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவருடன் எப்போதும் இருக்க வேண்டியதால் பரிசுத்தமே நமது வாழ்க்கையின் கடமையென்றிருப்போம். எவரும் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர் என்றால், அதினால் உண்டாகும் கனியினால்தான் அறிந்துக்கொள்ள முடியும். அந்தக் கனிகளில் பரிசுத்தம் மிக விசேஷித்தது. நாம் பரிசுத்தமாய் இல்லாவிட்டால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு பொருள் இராது. நமது மனமும், நம்பிக்கையும், விருப்பமும் பரலோகத்தைப்பற்றி இல்லாது இருக்குமானால், நம் பெயர் அங்கு இருப்புதைப்பற்றி சந்தேகப்பட வேண்டும்.

அநாதி சிநேகத்தால் என்னை
மீட்டு முற்றும் இரட்சித்தீர்
ஜீவ புத்தகத்தில் என் பெயரை
எழுதி முத்திரையிட்டீர்.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

Popular Posts

My Favorites

நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31 "நான் தேவனை நாடி" யோபு 5:8 இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத்...