ஜனவரி

முகப்பு தினதியானம் ஜனவரி

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12

“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”  லூக்கா 2:10

நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம். இவ்வுலகம் நமக்குக் கவலையையும் கண்ணீரையும் கொண்டு வரும். ஆனால் சுவிசேஷமோ மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரும். சுவிசேஷம் பெரிய ஒரு மேலான இரட்சகரை நமக்கு முன் நிறுத்துகிறது. இயேசு கிறிஸ்து மனுஷ ரூபமானபடியினால், மனிதர்களாகிய நமக்கு மனமிறங்கி தேவனிடத்தில் சகலத்தையும் பெற்றுத்தர கூடியவர். என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறார்? ஏன் எனக்குள் தியங்குகிறாய் என உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்முடைய பாவம் எல்லாமே பரிபூரணமாய் மன்னிக்கப்படுகிறது. அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்தபடியால், நிறுத்தும்படி கிருபையை தமது நீதியால் உண்டாக்கிக் கொடுத்தார். அவர் பாவமில்லாதவரானபடியால், நமது பாவங்களை மன்னிக்க காத்திருக்கிறார் அவர் இரக்கமுள்ளவரானபடியால் நம்மீது எப்போதும் இரங்குகிற தேவனாய் இருக்கிறார். நாம் துன்பப்படும்போது தேற்றரவாளனால் உதவிட ஓடி வருகிறார். பாவிகளுக்கு இரட்சகராய் இருக்கிறார். பிதாவின் முன் பரிந்து பேசும் நேசராய் இருக்கிறார். பாவிகளை அழைத்து அவர்களைத் தம் இரத்தத்தால் கழுவி தமது இராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார். செய்திகளைச் சுபசெய்தியாக்குகிறதே சுவிசேஷம் தான். நம்மை சந்தோஷத்தில் நிரப்பும் அனைத்தும் நற்செய்தியில் இருக்கிறது.

இவ்வன்பை அளவிட முடியாது
நீளம் அகலம் அற்றது
ஆழம் உயரம் இல்லாதது
அளவிடப்பட முடியாதது.

அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை

ஜனவரி 27

“அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை.” உபா. 31:6

தேவன் சொன்னதை நாம் எதிர்பார்ப்பது வீணாய் இராது. அவர் உண்மையை நாம் நம்புவதினால் நமக்குக் குறை வராது. தமது வார்த்தையை அவர் மறக்கவுமாட்டார். நம்முடைய நன்மையை விடவுமாட்டார். தம்முடைய ஜனங்களை அவர் கைவிட்டதுமில்லை, கைவிடப் போகிறதுமில்லை. உங்களுடைய விசுவாசம் பவீனமாயிருக்கலாம். நீங்கள் பயம் நிறைந்தவர்களாயிருக்கலாம். சந்தேகங்கள் உங்களைத் துன்பத்துக்குள்ளாக்கலாம். உங்கள் குறைகள் உங்களைத் திடுக்கிடப் பண்ணலாம். ஆனாலும் தேவன் உங்களைக் கைவிடவே மாட்டார். ஏன் அவர் கைவிட வேண்டும்?

அவர் தமது கிருபையால் உன்னை அழைக்கும் முன்னே உன் குறைவையும் நிர்பந்தத்தையும் உன் அபாத்திர தன்மையையும் பார்த்தார். உனது நிகழ்கால நிலைமையை அவர் அறியாதவரல்ல. அவர் உனக்கு வாக்களித்தபோது அது அவருக்குத் தெரிந்திருந்தது. உன்னை மகிமைப்படுத்திக் கொள்வார். அவரை நம்புகிறதினால் நீ தவறிப் போகக்கூடாது. எந்தக் கவலையையும் அவர்மேல் வைப்பதில் தயங்கக்கூடாது. அவருடைய உண்மையான வார்த்தையை நம்புவதில் உன் விண்ணப்பத்திற்கு பதில் கொடுப்பதில் தவற மாட்டார். உன் காரியம் ஒருவிதமாய் கண்டாலும் உன் பாதை விருப்பமில்லாமல் போனாலும் அவர் வார்த்தை உண்மையுள்ளது. அவமதிக்கிற துன்பத்தைவிட அதிகமாய் வர விடமாட்டார்.

தேவன் உன் பக்கமிருந்தால்
நீ பயப்படுவானேன்?
அவர் பலம் தருவதால்
பலவீனனென்பானேன்.

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15

“நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்.”  ஏசாயா 64:6

மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில் வாடி வதங்கி போகலாம். ‘ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன், வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்டு, நிழலைப்போல் நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்’. இந்நிலை நம்மை எவ்வளவு மோசமாக்கி விடுகிறது. ஆயினும் அது நமக்குப் பிரயோஜனமே. நாம் சீக்கிரம் மாண்டுபோவது நிஜமா? ஆம்மென்றால், நமது வாழ்வில் நடக்கிற காரியங்களைக் குறித்து பெரிதாக எண்ணக்கூடாது. பூமிக்குரியவைகளைவிட்டு மேலானவைகளை நாடி, பரலோக பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கக்கடவோம்.

இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, தேவனோடு சஞ்சரித்து, நாம் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தப்பார்ப்போம். நாம் உலகில்வாழும் நாள்வரையிலும் உலக சிந்தனைக்கு இடம் கொடாமல், பயபக்தியாய் கர்த்தர்முன் செலவழிக்கவேண்டும். சுகம், வியாதியாக மாறலாம். பலம் பலவீனமாய் மாறலாம். வாலிபம் வயோதிபமாகலாம். மரணப்படுக்கை சவப்பெட்டியாகலாம். நமக்கு முன்னே நமது கல்லறை தெரிகிறது. அதற்கு முன்னே நமது தெரிந்துக்கொள்ளுதலையும் அழைப்பையும் நிச்சயித்துக் கொள்வோமாக. தேவனோடு தேவ விள்ளைகளாக நெருங்கி வாழ்வோமாக. நாம் ஆழமாய்த் தோண்டி கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடுவோமாக. பிரியமானவரே, நமது வாழ்நாள்கள் குறுகினது. மகிமை நிறைந்த நித்தியம் நமக்கு முன்னே இருக்கிறது. நாம் எல்லாரும் இலைகளைப் போல் வாழப் போகலாம்.

நித்திய ஜீவ விருட்சம்
என் நம்பிக்கைக்கு ஆதாரம்
என்றென்றும் பசுமையாம்
இதன் இலை வாடாதாம்.

உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?

ஜனவரி 25

“உன் சிநேகிதன்மேல் உனக்கு தயை இதுதானா?.” 2.சாமு. 16:17

இயேசு நமக்குக் காட்டும் அன்புக்குச் சமமாய் வேறெங்கும் காணமுடியாது. நாமோ அவருக்குச் செய்யும் கைமாரோ இதற்கு எதிரிடையானது. பல சமயங்களில் நாம் அவரை அசட்டை செய்கிறோம். அவரை நோக்கிக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமாய் இருக்கிறதே தவிர, சில நேரங்களில் அது ஒரு பாரமான வேலையாய் இருக்கிறது. நமக்குத் தெரிந்தவைகளையெல்லாம் செய்து, அவர் சொல்வதை விட்டு விடுகிறோம். அடிக்கடி அவர் வார்த்தையில் சந்தேகம் கொண்டு அவர் அன்பைச் சந்தேகித்து அவரைக் குறித்து முறையிடுகிறோம். அவருக்குக் கீழ்ப்படியாமல் மாம்சத்துக்கு இடங்கொடுத்துவிடுகிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துகொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொல்கிற உலகத்தைச் சேர்த்துக்கொள்கிறோம். அவர் எதிர்க்கச் சொன்ன சாத்தானோடு இணைந்துவிடுகிறோம்.

எத்தனை வேளைகளில் உலகத்தாருக்குமுன் அவரை அறிக்கையிட வெட்கப்பட்டிருக்கிறோம்? நம்மீது பட்சமும் தயையும் நிறைந்த நம்முடைய மீட்பருக்கு நாம் செய்கிறதைப் பார்த்து, ‘உன் சிநேகிதன் மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ?’ என்று நம்மைக் கேட்கும்போது, வெட்கம் நம்முடைய முகத்தை மூடவேண்டும். நமது உள்ளமும் கலங்க வேண்டும். அவருக்கு நாம் செய்யும் கொடுமை துரோகம் போன்றது. அவர் மன்னித்து நேசிக்கிற அடையாளங்களை நாம் மறுபடியும் தேடி, இனி சோதனைக்கு இணங்கவாவது, பாவத்தில் இடங்கொடுக்கவாவது நினைக்கும் சமயத்தில், நம்முடைய மனச்சாட்சியைப் பார்த்து உன் சிநேகிதன்மேல் உனக்கும் தயை இதுதானா என்று கேட்போமாக.

நான் மகா துரோகி
என் நேசரை மறந்த பாவி
அவர் கிருபை இல்லாவிட்டால்
என்னை அகற்றுவார் அப்பால்.

சுகந்தான்

ஜனவரி 16

“சுகந்தான்” 2.இராஜா. 4:26

இப்படிச் சொல்லக்கூடிய நேரங்கள் எத்தனை பாக்கியமுள்ள நேரங்கள். நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் நீதியால் உடுத்தப்பட்டு அவர் அப்பத்தை உட்கொண்டிருப்போமானால் சுகந்தான். ஏனென்றால் நமது பாவங்கள் தொலைந்துப் போயிற்று. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் வாசம்பண்ணுகிறார். தேவன் தமது அளவற்ற நேசத்தால் நம்மை நேசிக்கிறார். நமது பேர் ஜீவ புத்தகத்தில் இருக்கிறது. ஆகவே நமக்குச் சுகந்தான்.

நமது வாழக்கை ஆண்டவர் கரங்களில் இருக்கிறது. நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய நாள்கள் மந்தாரமாயிருந்தாலும் நித்திய வெளிச்சமாய் கர்த்தர் உதிப்பார். நமது துக்க நாள்கள் முடிந்துப்போம். தேவ செயல்கள் நமக்கு விரோதமாய் இருப்பதுப்போல் தெரியும். சரீரத்திற்குரிய துன்பங்கள் பரமநன்மைகளை நமக்கு துயரத்திலிருக்கும்Nபுhது தேற்றுகிறது. சாத்தான் நம்மை மலைமேலேற்றி குருவியைப்போல் வேட்டையாடலாம். தேவனோ அவனை நமது காலடிகளுக்கு கீழே நசுக்குவார். ஏனென்றால் தேவன் நமது பிள்ளைகளைப் பரிசுத்தமாக்கி, மகிழ்வித்து அவர்கள் சுகமாய் வாழ அனுகூலமாக்குகிறார்.

நமது இருதயம் வெறுமையாய் அமைதியாய் இருக்கலாம். தேவனோடு அதிலும் சுகம் கொடுக்க சித்தங்கொள்ளுகிறார். தேவ சுகத்தை பெற்றுக்கொள்ள முடியாதபடி நமதுஆவியில் பெருமையும், அகந்தையும் வராமல் இருக்கலாம், இயேசு கிறிஸ்துவின் முடித்த கிருபையை நமக்கு அருமையாக்கவுமே தேவன் இதை அனுமதித்திருக்கலாம். புறம்பான காரியம் எப்படியிருந்தாலும் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்குச் சகலமும் நலந்தான்.

பொய்பாவம் பொல்லா இதயமும்
உன்னைக் கெடுக்கப் பார்த்தாலும்
பிதாவின் அன்பு நிச்சயம்
ஆகவே எல்லாம் நலமே.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5

“சாவு எனக்கு ஆதாயம்”  பிலி. 1:21

தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்: இப்பொழுதோ அது ஆசீர்வாதம். முன்னே அது நமக்கு நஷ்டம். இப்பொழுதோ அது நமக்கு இலாபம். சாகும்போது எல்லாவித சத்துருவினின்றும், சோதனையினின்றும், துன்பத்தினின்றும் விடுதலையடைந்து, கணக்கற்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டு பரிசுத்தத்தில் பூரணமாகிறோம். அறிவிலிருந்து தேறுகிறோம். அப்போதுதான் நாம் அறியப்பட்டிக்கிறபடி அறிந்துகொள்வோம். பரிசுத்தமும் பெறுவோம், ஏனென்றால் கிறிஸ்துவோடும் அவரைப்போலும் இருப்போம்: மேன்மையும் கிடைக்கும். ஏனென்றால் வெள்ளை வஸ்திரம் நமக்குக் கொடுக்கப்படும். சாத்தானையும், உலகையும், பாவத்தையும் வென்ற வெற்றி வீரர்களாகக் கருதப்படுவோம். கிறிஸ்துவோடு அவர் சிங்காசனத்திலும் உட்காருவோம்.

எந்த விசுவாசிக்கும் மரணம் இலாபம்தான். உடனடியாகக்கிடைக்கிற இலாபம்: பெரில இலாபம், என்றுமுள்ள இலாபம். மரண நதியைக் கடக்கிறது கடினந்தான். கடந்த பிறகோ மகிமைதான். நாம் மரணத்திற்குப் பயப்படலாமா? ஏன் பயப்படவேண்டும்? இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார்? ‘என் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவன் மரணத்தை ருசிப்பதில்லை” என்கிறார். அவன் உறங்கலாம், அவன் துன்பங்கள், போராட்டங்கள் நீங்கி இளைப்பாற வீடு பேறு பெறலாம். ஆகிலும் அவன் மரிக்கவே மாட்டான். மரணம் அவன்மேல் ஆளுகைச் செய்யாது. இயேசுவின் மூலம் மரணத்தைப்பார், மரணத்தின்மூலம் இயேசுவைப் பார்.

கிறிஸ்து வெளிப்படுகையில்
என் துக்கம் நீங்குமே
கிறிஸ்து என் ஜீவனாகில்
பாவம் துன்பம் நீங்குமே.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.

குறிப்பினால் அறிந்தேன்

ஜனவரி 26

“குறிப்பினால் அறிந்தேன்.” ஆதி. 30: 27

குறிப்பினால் அறிந்தேன் அல்லது அனுபவத்தால் அறிந்தேன். இப்படி சொன்னவன் லாபான். யாக்கோபு தனக்கு ஊழியஞ் செய்ததினால் தான் அடைந்த பிரயோஜனத்தைப்பற்றி இப்படி சொன்னான். தேவ போதனையால் உண்டாகும் நன்மையைக் குறித்தும் ஒரு கிறிஸ்தவன் இப்படிச் சொல்லலாம். அனுபவம் என்பது பரீட்சையினால் உண்டாகும் அறிவு. அனுபவத்தால்தான் உண்மை மார்க்கத்தின் உண்மையும், மேன்மையும் அடைகிறோம். அறிகிறோம். சாத்தானுடைய தந்திரங்களையும், விசுவாசத்தின் ரகசியங்களையும் அறிகிறோம். துன்பத்தால் உண்டாகும் பிரயோஜனத்தையும் இவ்வுலகத்தின் வெறுமையையும் ஒன்றுமில்லாமையையும் உடன்படிக்கையில் நமக்கு தேவனுடைய அன்பையும் உண்மையையும் கற்றறிகிறோம்.

அனுபவத்தால் வருகிற அறிவுக்கு சமமானது ஒன்றுமில்லை. கேள்வியால் உண்டாகும் அறிவுக்கு இது மேலானது. உறுதியைப் பார்த்தாலும் பிரயோஜனத்தைப் பார்த்தாலும் மனதை ஸ்திரப்படுத்துகிற நிச்சயத்தைப் பார்த்தாலும் இது எந்த அறிவுக்கும் மேலானது. வாலிபர்கள் அடக்கமுடியவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் அறிந்துக் கொண்டது கொஞ்சம். அனுபவமடைந்தவர்கள் தாங்கள் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். இதுபோல் பிரயோஜனமுடையது ஒன்றுமில்லை. அனுபவத்தால் நாம் சொல்லுகிறதும் நமது நடக்கையையும் ஒத்திருக்க வேண்டுமென்பதைக் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நேசித்து உமது சொல்படி
செய்திட எனக்கு கற்பியும்
உமது அனுபவத்தின்படி
என்னை உம்முடையவனாக்கும்.

Popular Posts

My Favorites

பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

யூன் 30 "பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்." 1.தீமோ. 6:2 சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப்...