Home Blog Page 35

தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு

யூன் 03

“தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு….” 1.கொரி. 15:28

யோகோவா எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். தமது சகல வழிகளிலும் கிரியைகளிலும் தாம் மகிமைப்படுவதே அவர் நோக்கம். இரட்சண்ய ஒழுங்கில் அவர்தான் சமஸ்தம். அந்த ஒழுங்கு நித்தியத்தில் அளவற்ற ஞானத்தால் ஏற்படுத்தப்பட்டு, மகாவல்லமையால் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இரட்சிப்புக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டோமெனில் அது இயேசு கிறிஸ்துவினால் தேவனுக்குள் ஆயிற்று. நாம் இயேசுவுக்குச் சொந்தமாக்கப்பட்டோமெனில் அதைச் செய்தவர் பிதா. நித்திய ஜீவனுக்கென்றுக் குறிக்கப்பட்டோமெனில் அது உன்னத தேவனின் செய்கை. எல்லா பரம ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமெனில் அது இரக்கங்களின் பிதாவால் அப்படியாயிற்று. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோமெனில் அவர் அப்படிச் செய்ய பிதாவினால் முன் குறிக்கப்பட்டார்.

நாம் உயிர்ப்பிக்கப்பட்டோமெனில் அது தேவனால் ஆயிற்று. நாம் தேவனால் போதிக்கப்பட்டோமெனில் அதுவும் தேவனால் ஆயிற்று. நமக்கு விசுவாசமும் மறுபிறப்பும் கிடைக்கிறதா? அதுவும் தேவனுடைய சுத்த ஈவு. நாம் சாத்தானை மேற்கொள்ளுகிறோமா? சமாதானத்தின்தேவன் அவனை நம்முடைய கால்களின் கீழே நசுக்கினபடியால் அப்படிச் செய்கிறோம். நாம் அதிகம் உழைக்கிறோமா? அது நமக்குள் வல்லமையாய் கிரியை செய்கிற அவருடைய சத்துவத்தினால் ஆயிற்று. நாம் பரிசுத்தராய் இருக்கிறோமா? அது தேவ கிருபைதான். நம்முடைய சத்துருக்கள் யாவரையும் மேற்கொள்கிறோமெனில் அது அவர்மூலம்தான். இவ்வுலகில் அவர்தான் சர்வவல்லவர். நாம் மோட்சம் சேர்ந்து வாழப்போகிறதும் அவரால்தான். தேவ நேசமும், நேசத்தின் தேவனுமே நமது நித்திய ஆனந்தத்திற்குக் காரணம். என்றுமுள்ள நிறைவான இரட்சிப்பில் தேவன்தான் சர்வவல்லவர்.

தேவனை அறியப்பார்
அவர் தன்மையை தியானி
நீதி அன்பு உள்ளவர்
மகா மகிமை நிறைந்தவர்.

தேவனுடைய வீட்டார்

யூன் 02

“தேவனுடைய வீட்டார்.” எபேசி. 2:13

கர்த்தர் தமக்குச் சொந்தமான ஒரு விசேஷித்த குடும்பத்தை வைத்திருக்கிறார். அது ஆவிக்குரிய குடும்பம். ஏனென்றால் அதைச் சேர்ந்த ஒவ்வொருவரும், தேவனால் பிறந்து, ஆவியானவரால் போதிக்கப்பட்டு ஆவியானவர் அவர்களுக்குள் வாசம் செய்து, ஒரே சரீரமாக அவரில் ஞானஸ்நானம் பெற்றவர்கள். இக்குடும்பம் அவர் நோக்கத்திலிருந்து தோன்றியது. இது அவருடைய சித்தம் எது என்று காட்டுகிறது. அவர் வல்லமையால் உண்டானது. தேவனுடைய வீட்டார் என்பது அதன் பெயர். உலகத்திலிருந்துப் பிரிக்கப்பட்டதால் தேவனுடைய வீட்டார். அவர் நடத்திச் செல்லும் மந்தை.

அவர் ஒவ்வொருவரைப் பாதுகாத்து, குறைவையெல்லாம் நீக்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் வேலை தந்து, நேசித்து, மகிழுகிறதால் பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த யாவரும் சகோதரர்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய கிருபையைப் பிரஸ்தாபப்படுத்த, அவருடைய காரியத்தை நடத்த, அவருடைய சித்தத்தை நிறைவேற்றவே இக்குடும்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பத்தில் அவர் அறியப்பட்டு, நம்பப்பட்டு, துதிக்கப்படுகிறார். அவருக்குக் கீழ்ப்படிந்து, நேசித்து, அவருக்குள் மகிழுகிறார்கள். நீ இக்குடும்பத்தைச் சேர்ந்தவனா? இந்தக் குடும் விருந்துக்கு நீ செல்கிறாயா? இந்தக் குடும்பத்தின் ஆராதனைகள் உனக்கு இன்பமா? இந்தக் குடும்பத் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நீ உண்மையாய் நேசிக்கிறாயா? இந்த கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டு.

தேவனே, என்னிடம் வாரும்
என் உள்ளத்தில் தங்கும்
உமது குடும்பத்தில் என்னைச் சேர்த்து
இரட்சியும் கண் பார்த்து.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்

மே 31

“உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தாரும்.” சங் 51:12

தாவீது ஒரு காரியத்தில் நஷ்டம் அடைந்தான். அதற்குக் காரணம் அவர் செய்த பாவம். அதைத் திருத்திக் கொள்ளப் பார்க்கிறான். நாம் இரட்சிப்பை இழந்துப் போகாவிட்டாலும், இரட்சிப்பினால் வரும் சந்தோஷத்தை இழந்துப் போகலாம். சந்தோஷம் சுவிசேஷத்திலிருந்து உண்டாகிறது. சுவிசேஷம் நல்ல செய்தி. சுப செய்தி. அதை விசுவாசித்தால் ஏறறுக்கொள்ளும்போது அது நம்மைச் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புகிறது. விசுவாசிக்கிற ஒவ்வொரு பாவிக்கும் அது நித்திய ஜீவனைக் கொடுப்பதாக அது உறுதி தருகிறது. தேவனிடமிருந்துப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்போது அந்த உறுதி நமக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவில் நமக்கு உள்ள நன்மையை அறிந்து, குற்றம் என்ற சுமை நம்மைவிட்டு நீங்கினதை உணர்ந்து, வாக்குத்தத்தங்களுக்;குள் நமக்கு இருக்கும் பாக்கியத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது.

இந்தச் சந்தோஷம் முன்னே கிடைத்தது. ஆனால் அதை இழந்துவிட்டோம். நமது தவறை உணர்ந்தும், சுவிசேஷத்தின் தன்மையை அறிந்தும் அதைச் சொந்தமாக்கிச் கொள்ளுகிற விசுவாசம் இல்லாமற்போகும்போது நாம் அந்தச் சந்தோஷத்தை இழந்துவிடுகிறோம். நாமாய் அடைய முடியாத சந்தோஷத்தைத் தேவனிடம் கேட்கலாம். நாமாய் சம்பாதிக்கக் கூடாததைக் கொடுக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சலாம். சந்தோஷத்தைத் திரும்பவும் தாரும் என்று கேட்பது நமது பெலவீனத்தைக் காட்டுகிறது. நம்முடைய புத்தியீனத்தை ரூபிக்கிறது. பாவத்தால் நாம் இழந்துவிட்டோம். தேவ ஒத்தாசை தேவை என்று அது காட்டுகிறது. அவர்தாம் நம்மை பாக்கியவான்களாக்கக் கூடும். இனி விழாதபடி நம்மை அது எச்சரிக்கிறது. நமது பாவங்களைக் குறித்துத் துக்கித்து, சோதனையில் விழாதபடி விழித்திருப்போமாக. அவநம்பிக்கைக்கும் இடங்கொடாதிருப்போமாக.

நான் முன்னறிந்த சந்தோஷம்
திரும்ப எனக்குத் தாரும்
உம்மைவிட்டு மறுபடியும்
பின் வாங்காதபடி தாரும்.

திட அஸ்திபாரம்

மே 30

“திட அஸ்திபாரம்.” ஏசாயா 28:16

மகிமை நிறைந்த இயேசு இரட்சகர் நிறைவேற்றின பூரண கிருபையானது பாவிகளின் நம்பிக்கைக்கு அஸ்திபாரம். மற்ற வேறு ஏதாவது ஒன்றின் பேரில் கட்டுவோமானால் நாம் நாசம் அடைந்துவிடுவோம். நமது நம்பிக்கைக்கு ஆதாரமாக கிறிஸ்துவோடு வேறெதையாவது சேர்ப்போமானால், அவரால் நமக்கு எவ்வித பயனும் இராது. கிறிஸ்து மட்டும்போதும். அவர் நமக்காக் கீழ்ப்படிந்து சம்பாதித்த புண்ணியம், அவர் பிராயச்சித்த பலி, காரிய சித்தியான அவர் மன்றாட்டு ஆகியவைகள்மேல் நித்தியத்திற்காக நாம் கட்ட வேண்டும். இவைகள் எல்லாம் ஒரே அஸ்திபாரம். இவைகளின்மேல் கட்டுவோமானால் பயம் இல்லை. இதுதான் உறுதியான அஸ்திபாரம்.

இரட்சகருடைய மகத்துவமும், அவருடைய குறைவற்ற குணாதிசயங்களும், அவர் செய்த புண்ணியமும், அவர் வாக்கின் உண்மையும் அஸ்திபாரத்தை இன்னும் பலமுள்ளதாக்குகிறது. கடந்த காலத்தில் அது உறுதியாய் நின்றது. இப்போதும் உறுதியாய் நிற்கிறது எப்போதும் அப்படியே நிற்கும். இயேசுவே அஸ்திபாரம். அவர்மேல் கட்டின எந்தப் பாவியும், எந்தக் குறையையும் கண்டதில்லை. எந்தப் புயலும் அதை அழிக்காது. எந்த வெள்ளமும் அதைக் கரைக்காது. பூமியதிர்ச்சியும் அதைச் சேதப்படுத்தாது. தேவனைப்போன்று அது உறுதியானது. நித்தியத்தைப்போல் நிலையுள்ளது. அதன்பேரில் மட்டும் கட்டுவோமாக. அப்படிக் கட்டி நம்முடைய அஸ்திபாரத்தைப் பார்த்து மகிழக்கடவோம். தீயமனிதரும் கேடு செய்கிறவர்களும் திரும்பத் திரும்ப தாக்கலாம். சாத்தான் அதை இடிக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவன்மேல் கட்டிய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கும். கர்த்தர் தம்முடையவர்களை அறிவார் என்பதற்கு இது முத்திரையாகிறது. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவையல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

எல்லாம் ஒழிந்துப் போனாலும்
இயேசு கன்மலை நிற்கும்
இதன்மேல் நிற்போம் எல்லோரும்
வாழ்வதென்றும் நிலைக்கும்.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.

மே 29

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக் 1:3

தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர் தேவன். தமது வசனத்தில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் குமாரனில் மட்டும் பூரண இரட்சிப்படைய நாம் விசுவாசிக்கிறோமா என்றும், அவருடைய வாக்கை நிறைவேற்றுவார் என்றும் அவருடைய உண்மையில் விசுவாசம் வைத்து எதிர்பார்க்கிறோமா என்றும் நம்மை அவர் சோதிக்கிறார். நம்முடைய விசுவாசம் தேவனால் உண்டானதா, அது வேர் கொண்டதா என்று சோதித்தறிகிறார். நமது நம்பிக்கையின் துவக்கத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறோமா என்று நம் உறுதியை சோதித்தறிகிறார். இப்படி சோதிப்பது நமது சொந்த நன்மைக்கும் நலனுக்கும். அவரின் சொந்த மகிமைக்கும் ஆகும். நம்மை கவனிக்கிற மற்றவர்களுக்காகவும், நமது அனுபவத்தின் பிரயோஜனத்திற்காகவும் இப்படிச் சோதித்தறிகிறார்.

இப்படிச் சோதிப்பது பொறுமையை உண்டாக்கும். இத்தகைய சோதனை பொறுமையை உண்டாக்கும். அடிக்கடி வருத்தமில்லாமல் இருக்கிறதற்குப் பதிலாக பொறுமையையும், ஐசுவரியத்திற்குப் பதிலாக மனதிருப்தியையும் நமது சொந்த பெலனுக்குப் பதிலாக கிறிஸ்துவின் பெலனை நம்பவும் செய்யும். ஆகவே விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். துன்பங்கள் விசுவாசத்தைச் சோதிக்கும். தேவாசீர்வாதம் பெற்ற துன்பங்கள் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக்கும். பொறுமை நிறைவாகும்போது சோதனைகள் அற்றுபோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. ஆகையால் நீங்கள் பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்.

சோதனை வரும் அப்போ
என் பக்கம் வந்திடும்
சாந்தம் பொறுமை அளியுமே
உமக்கடங்கச் செய்யுமே.

எக்காலமும் அவரை நம்புங்கள்

மே 27

“எக்காலமும் அவரை நம்புங்கள்.” சங் 62:8

எப்பொழுதும் தேவனை நம்பலாமென்று நமக்குத் தேவனே தைரியம் கொடுக்கிறது மட்டுமல்ல¸ எக்காலத்திலும் நம்முடைய நம்பிக்கைக்கு அவர் பாத்திரர்தான். இப்படி எப்போதும் அவரை நம்பச் சொல்லியும் நாம் அவரை எப்போதும் நம்பாமல் போகிறோம். நாம் அவரை நம்புவது மிக அவசியம். சிருஷ்டியானது நம்பாமல் இருக்கலாமோ? அவரைச் சார்ந்திருக்கிறோம் எப்பதற்கு அது அத்தாட்சியானதால் அந்த நம்பிக்கையைப்பெற முயற்சி செய்ய வேண்டும். வேலைக்காரன் எஜமானை நம்ப வேண்டும். சிநேகிதன் சிநேகிதனை நம்ப வேண்டும். பிள்ளை தகப்பனை நம்பவேண்டும். விசுவாசி தேவனை நம்ப வேண்டும். அவருடைய வார்த்தை உண்மையானதால் அதை நம்ப வேண்டும். இரட்சகர் செய்த கிரியை பூரணமானதால் அதை நம்ப வேண்டும். தெய்வ செயலை நம்புவது நியாயமானதே.

அவர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை ஒன்றும் கலைக்கக்கூடாது. அவுருடைய தன்மை அன்பு. அன்புகூற அவர் உடன்பட்டுள்ளார். அவர் பொக்கிஷம் குறையாதது. அவர் இரக்கம் என்றுமுள்ளது. ஆகையால் துக்கத்திலும்¸ சந்தோஷத்திலும்¸ அந்த காரத்திலும்¸ வெளிச்சத்திலும்¸ நிறைவிலும்¸ குறைவிலும்¸ சோதனையிலும்¸ அமைதியிலும் அவரை நாம் நம்புவோமாக. அவரை நம்பினால் பயங்களை ஜெயிப்போம். துன்பங்களைச் சகிப்போம். வேலையில் காரியசித்திப் பெறுவோம். கவலைகளை ஒழித்து சத்துருக்களை விழத்தாக்குவோம். நாம் அவரை நம்பும்படிக்குதான் தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்தி¸ தம்முடைய வாக்கையருளியுள்ளார். நம்மீது கோபமாய் இரேன் என்று சொல்லி¸ தாம் மாறாதவர் என்று உறுதிமொழி சொல்லியிருக்கிறார். ஆகையால் என்றைக்கும் கர்த்தரை நம்புவோமாக.

எக்காலமும் கர்த்தாவே
உம்மையே நம்புவேன்
நீரே எனக்கு எல்லாம்
என்றும் உம்மில் மகிழுவேன்.

நேசம் மரணத்தைப்போல் வலிது

மே 26

“நேசம் மரணத்தைப்போல் வலிது.” உன். 8:6

மரணம் யாவரையும் சந்திக்கக் கூடியது. ஞானமுள்ளவனும்¸ பலசாலியும்¸ தைரியஸ்தனும்¸ பரிசுத்தன் யாவருமே மரணத்தின் வாசலைத் தாண்டியர்வகள். அது எல்லாரையும் கொன்று உலகத்தைப் பெரிய கல்லறையாக்கி விட்டர். அன்பும் மரணத்தைப்போல் வலியதுதான். இது சகலத்தையும் வென்று விடுகிறது. இயேசுவின் நேசமோ அனைத்திலும் பெரியது. இது மரணத்தை ஜெயித்துப் போட்டது. இயேசு நமது பேரிலும் அப்படிப்பட்ட அன்பை வைத்திருக்கிறார். நான் உங்களை நேசிக்கிறேன் என்கிறார். ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

அவர் நமக்கு ஈந்த ஈவுகளாலும்¸ நம்மைச் சந்திக்க வந்தாலும்¸ நமக்காக அவர் விட்ட கண்ணீராலும்¸ அவர் செய்த கிரியையாலும் நமக்காக அவர் சகித்த துன்பங்களாலும்¸ அடைந்த மரணத்தினாலும்¸ நமக்காக அவர் கொண்ட வாஞ்சையினாலும்¸ எப்பொழுதும் நமக்காக அவர் செய்யும் வேண்டுதலினாலும் அவருடைய அன்பு எவ்வளவு வலமையுள்ளதென்று காண்பித்திருக்கிறார். அவருடைய அன்பு அனைத்து வருத்தங்களையும் மேற்கொண்டு¸ எல்லா விரோதங்களையும் ஜெயித்து¸ எல்லா சத்துருக்களையும் அழித்து¸ தெய்வீகத்துக்குரிய மகிமை நிறைந்த விளக்காகப் பிரகாசிக்கிறது. அவருடைய அன்பு அழிந்துப்போகாது. நம்முடைய அறிவுக்கு எட்டாதது. கிறிஸ்துவின் அன்பு இவ்வாறு ஆச்சரியமுடையதாயிருப்பினும்¸ வலிதும் மகிமையுள்ளதாயிருப்பினும்¸ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற நம்மீது மறவாமல் இருக்கிறதென்று நினைவோடு இந்த இராத்திரி படுக்கப்போவோமாக.

கர்த்தாவே ஏழை என்னையும்
எவ்வளவாய் நேசித்தீர்
என் இதயம்¸ அன்பு¸ ஜீவன்
யாவையும் அங்கீகரிப்பீர்.

நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்

மே 25

‘நீங்கள் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலா. 3:28

கிறிஸ்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கிறார்கள். தேவ பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு அவர்தான் மையம். நாம் எல்லாரும் அவரில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். அவர் ஒருவரே நம் எல்லாருக்கும் தெய்வம். அவரோடு ஐக்கியப்பட்டு ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம். ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டோம். இனம்¸ வயது¸ அந்தஸ்து என்ற வேறுபாடுகளே இல்லை. எல்லாரும் வரப்போகிற அதே சிலாக்கியங்களை¸ இன்பங்களை¸ நன்மைகளைச் சுதந்தரிக்கப் போவதால் கிறிஸ்துவில் ஒன்றால் இருக்கிறோம். வயதிலே வித்தியாசம் இருந்தாலும் ஒரே குடும்பம்தான். பலவைத் தொழுவங்களிருந்தாலும் மந்தை ஒன்றுதான். வௌ;வேறு கற்களாக இருந்தாலும் கட்டப்படும் கட்டடம் ஒன்றுதான். பலவித ஆலயங்களும் அலுவல்களும் இருந்தாலும் ஒரெ சரீரம்தான். பல இடங்களில் சிதறிக்கிடந்தாலும் சபை ஒன்றுதான். இயேசு தம் சொந்த இரத்தத்தால் சம்பாதித்த ஒரே மணவாட்டிதான்.

ஆகவே நாம் எல்லாரும் கிறிஸ்துவுகள் ஒன்றாய் இருக்கிறது உண்மையானால்¸ சகோதரரைப்போல் ஒருவரை ஒருவர் நேசித்து சில வேளைகளிலாவது ஒன்று கூடி உணவருந்தி¸ உத்தம அன்பால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். சரீரத்தின் அவயவங்களைப்போல் ஒன்றுபட்டிருப்போம். எவ்விதத்திலும் வித்தியாசமி;ன்றி அனைத்திலுமே ஏக சிந்தையாய் இருக்க வேண்டும். இட வித்தியாசமானாலும்¸ காரிய போதனைகளினாலும் வேறு பட்டிருந்தாலும் கிறிஸ்துவுகள் அனைவரும் ஒன்றாய் இருக்க வேண்டும். நம்முடைய மேன்மையிலும்¸ நற்காரியங்களிலும் ஒருவரிலொருவர் சந்தோஷப்பட வேண்டும். அன்பர்களே¸ நாம் ஒவ்வொரு கிறிஸ்தவனையும்¸ கிறிஸ்துவிலிருக்கிறவனாக எண்ணி கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமாகப் பாவித்து¸ அதற்கேற்றவாறு நடந்துகொள்ளுவோமாக.

கர்த்தாவே எங்கள் இதயத்தை
ஒன்றித்து வளர்ப்பியும்
உம்மைப்போல் இருப்போம்
அன்பில் வளருவோம்.

Popular Posts

My Favorites

Mulmudi Mudi Sumanthu – முள்மூடி முடி சுமந்து

https://youtu.be/QC9wjh1p-wk?si=Qe2zc6sAYMCALBFd முள்மூடி முடி சுமந்துநீர் முதுகில் சிலுவைகொண்டு கல்வாரி மலைமீது நீர் தள்ளாடி நடந்தது ஏன் பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோ பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோகர்த்தாவே கதறுகின்றேன்அந்தக் காட்சியை நினைக்கின்றேன்...