உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்

ஜனவரி 17

“உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்.” சங்கீதம் 110:3

எந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமோ தேவனால் உண்டாகிறது. தேவ போதனையால்தான் எவரும் பரிசுத்தம் பெறமுடியும். நாமும் மனதிலும் நடக்கையிலும் பரிசுத்தமாக்கப்பட வாஞ்சைக்கொண்டு பரிசுத்தாவியானவரின் போதனையில் தினந்தோறும் நடக்கவேண்டும். இப்படி ஒரு பாக்கியமான அனுபவம் கிடைப்பது எத்தனை கிருபை. நாம் சுபாவத்திலே நல்லவர்களாயும் மனதிலே பரிசுத்தமாயும் இருக்க இதுவே காரணம். அறிவினாலே நல் உணர்ச்சியும், நல் விருப்பமும், நற்கிரியையும் நம்மில் உண்டாகிறது என்று நாம் நினைக்கிறோம். இல்லை, கர்த்தரின் வல்லமையினால்தான் நாம் நல்மனமுடையவர்களாயிருக்கிறோம். இந்த வல்லமை நமது மனதிலும் சுபாவத்திலும் இரகசியமாய்ச் செயல்படுகிறபடியால் நமக்கு அது தெரிகிறதில்லை.

தேவன் உன்னைத் தம்முடைய கிருபையில் அழைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நீ சந்தேகம் கொள்கிறாயா? அப்படியானால், கெட்டுப்போன ஏழைப்பாவியாகிய இயேசுவினால் இரட்சிக்கப்பட எனக்கு மனமிருக்கிறதா? பாக்கியவானாக மட்டுமல்ல, பரிசுத்தமாக்கப்படவும் எனக்கு வாய்சையிருக்கிறதா? இரட்சிக்கப்பட மாத்திரமல்ல பிரயோஜயமுள்ளவனாயிக்கவும் வேண்டுமென்று ஜெபிக்கிறேனா? நீயே உன்னை சோதித்துப்பார். அப்படி செய்வாயானால் நீ கர்த்தரின் பிள்ளைதான். அவர் தமது வருகையின் நாளில் நீ தைரியமாய் சந்திக்கும்படி உன்னை மாற்றியிருக்கிறார்.

இரட்சிப்படைய வாஞ்சையுண்டு
உமது முகம் காட்டுமே
சுத்தனாக ஆசையுண்டு
என்னில் கிரியை செய்யுமே.

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

ஜனவரி 30

“நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்.” 1.யோவான் 5:19

இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். எவ்வளவு பெரிய ஆறுதல். நாம் தேவனால் உண்டானவர்கள். கிறிஸ்து இயேசுவின் வல்லமையினாலும் அவரின் இரத்தம் நம்மேல் தெளிக்கப்பட்டதினாலும், அவரின் சேவைக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டிருக்கிறோம். நித்திய காலமாய் நாம் அவரை ஸ்தோத்தரிக்கு, பரிசுத்தமும் பிரயோஜனமுள்ளவர்களாய் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம். முன்பு அவருக்கு விரோதமாய் கலகஞ் சொய்தோ. இப்போதோ மனமார அவருக்கு ஊழியம் செய்கிறோம். முன்பு அவருக்கு விரோதமான சத்துருக்கள். இப்போதோ அவருக்குப் பிரியமான சிநேகிதர். முன்பு கோபாக்கினையின் புத்திரர். இப்போதோ அவர் நேசத்திற்குரிய பிள்ளைகள்.

அவருடைய வசனத்தை விசுவாசிப்பதினாலும் அவரோடு ஜக்கியப்பட்டிருப்பதினாலும், பாவஞ் செய்வது நமக்கு துக்கமாய் இருப்பதினாலும், அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் இருப்பதினாலும், வாக்கிலும், செய்கையிலும், நோக்கிலும், ஆசையிலும் உலகத்தாருக்கு வித்தியாசப்படுவதினாலும், நாம் தேவனால் உண்டானவர்களென்று அறியலாம். தேவனால்தான், நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். நாம்தான் அவரின் சொத்து, அவரின் பொக்கிஷம். அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. என்ன பாக்கியம். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். இது நமக்கு கிடைத்த கிருபை. இக்கிருபை இல்லாமல் ஒருபோதும் நாம் வாழ முடியாது.

தேவனே என்னோடு வாரும்
என் சமீபத்தில் தங்கும்
எது போனாலும் போகட்டும்
நீர் இருந்தால் போதுமே.

கர்த்தாவே நான் உமது அடியேன்

ஜனவரி21

“கர்த்தாவே நான் உமது அடியேன்” சங்.116:16

நாம்கர்த்தருடைய ஊழியக்காரர். அவருடைய மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். அவர்துதியைச் சொல்லி வர மீட்கப்பட்டோம். அவரின் மேன்மையான குணங்களைவிளக்குவதற்கே உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய நெருங்கிய உறவினர்கள். இயேசுவானவர்நமது எஜமான். அவர் சித்தம் நமக்குச் சட்டம். அவருக்குப் பிரியமானதெதுவோ,அதுவே நமக்கு ஆனந்தமாயிருக்கவேண்டும். நமது எஜமானே நமக்கு முன்மாதிரி. அவர்பிதாவின் ஊழியக்காரனாக உலகத்துக்கு வந்து சகலத்தையும் பிதாவின் சித்தப்படியேசெய்து முடித்து பிதா கட்டளையிட்ட சகலத்தையும் முணுமுணுக்காமல் செய்து முடித்தார்.அன்று அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால் இப்பொழுது உயர்த்தப்பட்டு,மேன்மையாக்கப்பட்டு மகா உன்னதத்தில் இருக்கிறார்.

அவர்நம்மைப் பார்த்து ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்யமனதானால் அவன் என்னைபஇபோலிருக்கக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என் பிதா அவனைக் குனப்படுத்துவார் என்கிறார்.நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதினால் மனுஷன் நம்மைக் குறைவாய் எண்ணினாலும்எண்ணலாம். ஆனால் தேவனோ நம்மை மேன்மைப்படுத்துவார். உலகம் நம்மை நித்தித்துஅவமதிக்கலாம். அவர் தம்முடைய சமுகத்தாலும் அன்பான பார்வையாலும் நம்மைக்கனப்படுத்தி பிறகு நம்மை மகிமையில் சேர்த்துக் கொள்வார். இன்றைக்கு நாம்யாருக்கு ஊழியஞ் செய்தோம்? யாரைப் பிரியப்படுத்தினேம்? யாருடைய வேலைக்குமுதலிடம் கொடுத்தோம்? அவர் நம்மை அழைக்கும்போது அவரண்டைக்குப் போகமனமுள்ளவர்களாய், அல்லது நம்மை உலகத்தில் வைக்கும் பரியந்தமும் அவருக்குஊழியஞ்செய்ய முனமுள்ளவர்களாய் இன்றைய நாளில் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்அடியார்
மகாமேன்மை உடையார்
அவர்நுகம் சுமப்போர்
தேவாசீர்வாதம்பெறுவர்.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்

ஜனவரி 28

“வேண்டுதல் செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்.” எபி. 7:25

நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒரே தரம் மரித்தார். என்றாலும் தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் நமக்காகப் பரிந்து பேச அவர் உயிரோடிருக்கிறார். அவருக்கு முடிவில்லாத ஜீவனும் மாறாத ஆசாரியத்துவமும் உண்டு. Nhட்சத்தில் நம்முடைய பிரதான ஆசாரியராக அவர் வெளிப்படுவார். நம்முடைய பெயர்கள் அவருடைய இருதயத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. நமது காரியங்களையெல்லாம் அவர் நன்றாய் அறிவார். நமக்காகப் பரிந்துப் பேசத்தான் அவர் அங்கேயும் உயிரோடிருக்கிறார். தம் அருமையான இரத்தத்தையும், பூரண நீதியையும் தேவன் முன்பாக வைத்து, அவைகளின்மூலம் நமக்கு மன்னிப்பு, தந்து நம்மை மகிமைப்படுத்த வேண்டுமென்று வேண்டுகிறார்.

பிதா அவருக்குச் செவிக் கொடுக்கிறார். ஏனென்றால் அவர் அவரை அதிகம் நேசிக்கிறார். நமது செழுமைக்காக தம்மாய் ஆனதெல்லாம் அவர் செய்தார். அவர் அன்பு எத்தனை ஆச்சரியமானது. நமக்காக பரலோகத்தைத் துறந்தார். பூமியிலேவந்து பாடுபட்டு உத்தரித்து நமக்காக மரித்தார். பின்பு மோட்சலோகஞ்சென்று அங்கே நமக்காக வேண்டிக்கொண்டு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாம் மாறுகிறதை அவர் பார்க்கிறார். துக்கப்பட்டு இன்னும் நமக்காக மன்றாடுகிறார். நமக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இது எத்தனை ஆறுதல்! நம்பிக்கைக்கு எத்தனை ஆதாரம். நாம் தேவனுக்குச் சத்துருக்கயரிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாம்.

இரக்க ஆசனத்தின் முன்னே
நமக்காய் நின்று பேசுவார்
பாரியத்தில் உத்தமர்
வீரம் கொண்டு ஜெயிப்பார்.

Popular Posts

My Favorites