சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்

மார்ச் 27

“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.”
யாக் 4:3

கொடுப்பதில் தேவன் மமற்றவரா? அவர் சொல் தவறி போகுமா? இல்லை போகாது. ஆனால் பாவத்திற்கு இடங்கொடுக்கவோ, மதியீனத்திற்கு சம்மதிக்கவோ அவர் சொல்லுவில்லை. நமது ஜெபங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்க முடியும. ஆனால் நாம் ஜெபிக்கும்போது நம்முடைய நோக்கம் இன்னதென்று தேவன் கவனிக்கிறார். நமது விண்ணப்பங்களுக்கு செவிகொடுக்கும்போது நம்முடைய மனதை அறிந்துக்கொள்கிறார். நம் ஆசைகளை நிறைவேற்று நம் இச்சைகளைத் திருப்பதிப்புடுத்த உலக காரியங்களை நாம் கேட்போமானால் அவைகளையுமு; தேவன் கொடுப்பாரென்று நாம் எண்ணக்கூடாது. மாம்சத்திற்குரிய நோக்கத்தை முடிக்க ஆவிக்கரிய நன்மைகளைக் கேட்கும்போது தேவன் அவைகளையும் மறுக்கிறது நியாயந்தான்.

ஒருவேளை நாம் கேட்கிறது நல்ல காரியங்களாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய நோக்கம் தேவனை மகிமைப்படுத்தி, இயேசுவை உயர்த்தி, அவருடைய காரியத்தை நிறைவேற்றுவதாய் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நமக்கிராவிட்டால் நாம் தகாவிதமாய் கேட்கிறவர்களாய் இருப்போம். உலக காரியங்களைப்பற்றி அதிக வாஞ்சைக்கொண்டு பரம காரியங்களைப்பற்றி அதிக கவலையற்றிருக்கலாம். கெட்ட இச்சைகளாகிய பெருமை, பொருளாசை, பொறாமை இவைகளும் நம்மை ஜெபத்தில்ஏவலாம். ஆகவே நமது ஜெபத்திற்கு பதில் கிடையாத காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். நமது சுயசித்தம், நம் சிந்தை, நமது நோக்கம் போன்றவை தகாததாய் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நாம் ஏன், எப்படி, எதற்காக ஜெபம்பண்ணுகிறோம் என்று நம்மை நாம் ஆராய வேண்டும்.

ஜெபத்தில் என் நோக்கம்
தப்பாய் இருப்பதால்
என் உள்ளம் சுத்திகரியும்
உம்மிடம் என்னை இழும்.

சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

மார்ச் 29

“சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத். 28:20

அப்படியானால் இயேசு இந்த நாளிலும் நம்முடன் இருக்கிறார். இனி சகல நாள்களிலும் இருப்பதுப்போல் இப்போதும் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். நம்மை பாதுகாக்க, ஆறுதல்படுத்த, நமக்கு பயத்தை நீக்கு, நமக்குள்ளே நம்பிக்கையைப் பிறப்பிக்க அவர் நம்மோடிருக்குpறார். நம்மோடு தம்மை ஒன்றாக்கிக் கொள்ளுகிறார். நமது காரியங்களைத் தமது காரியங்களாக்கிக் கொள்ளுகிறார். அவர் நம்மோடிருப்பேன் என்று வாக்களித்தபடியால் அந்த வாக்கு நம்மை காக்கிற கேடகம். நம் இருதயத்தின் பலன். நமது சந்தோஷத்தின் ஊற்று. நாம் தனிமையாய் ஓர் அடிவைத்தாலும் நம்மைவிட்டு போகமாட்டார். ஒரு நொடிப்பொழுதும் தமது கண்களை நம்மிதிலிருந்து எடுக்கமாட்டார்.

ஓர் அன்பு தாயிக்குத்தன் ஆசை குழந்தையின்மேல் இருக்கும் பாவத்தைவிட நம்மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இவ்வுலக கட்டுகளைவிட கிருபையின் கட்டுகள் அதிக பலத்ததும் உருக்கமுமானவைகள். இயேசுவானவர் நம்மோடிருக்கிறார். அவர் எப்போதும் நமக்க முன்னே இருக்கிறாரென்று நமது மனிதல் வைக்க வேண்டும். இவ்வுலகத்தில் கடைசி மட்டும் ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறவர் அவரே. ஆதலால் ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாய் கிடைக்கும். அது இயேசுவின் சமூகம். அது தேவதூதர்களுக்குச் சந்தோஷத்தையும், மோட்சத்தில் ஆனந்தத்தையும், நித்திய நித்திய காலமாய் மகிமையையும் கொடுக்கும். ஆகNவு, ‘இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாள்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குகளை நம்பி இந்த இராத்திரியில் படுக்கச் செல்வோமாக.

என் ஜீவ காலம் எல்லாம்
உமக்கொப்புவிக்கிறேன்
உம்மைத் துதிப்பது இன்றும்
என்னோடிருப்பேன் என்றதால்.

இரக்கங்களின் பிதா

மார்ச் 26

“இரக்கங்களின் பிதா.” 2. கொரி. 1:3

யேகோவா நமக்குப் பிதா, இரக்கமுள்ள பிதா, உருக்கம் நிறைந்த பிதா. அவர் இரக்கங்களின் ஊற்றாயிருக்கிறபடியால், இரக்கங்களெல்லாம் அவரிடத்திலிருந்து தோன்றி அவரிடத்திலிருந்தே பாய்கிறது. நமக்குக் கிடைத்த விசேஷ இரக்கம் இரட்சகர்தான். அவர் தேவனின் ஒரே பேறான குமாரன். அவர் குமாரனை நம்மெல்லாருக்காகவும் இலவசமாய் ஒப்புக்கொடுத்தார். நம்மை உயிர்ப்பித்து, ஆறுதல்படுத்தி, இன்னும் நம்மைப் பாதுகாத்து வருகிற இரக்கத்திற்கு காரணர் அவரே. இரக்கமாய் நமக்கு வருகிற துன்பங்களும், விடுதலைகளும், இடைஞ்சல்களும், சகாயங்களும், நம்மைகளும் அவரின் சித்தத்தின்படிதான் நமக்கு வருகிறது.

அவரே இரக்கங்களின் பிதா, நமக்கு வரும் உருக்கமான இரக்கமெல்லாம் அவரிடத்திலிருந்தே பாய்கிறது. அவர் நம்மிடம் கோபிக்கிறவர் என்றும், அவர் கடினமானவர் என்றும் பல சமயங்களில் தப்பாய் நினைக்கிறதை இனி நீக்கி நமது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் உற்சாகப்படுத்துகிறது. நாம் ஆராதிக்கிற தேவன் இரக்கம் நிறைந்தவர் என்று நம் ஆத்துமா அறிவதுதான் மிக முக்கியம். அப்போதுதான் சாத்தானின் அக்கினி அப்புகளைத் தடுக்க இது ஒரு நல்ல கேடகம். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சகல ஈவுகளிலும் அவரை அதிகமாய் நேசிக்க இது ஒரு நல்ல வழி.

அன்பர்களே, இன்றிரவு உங்களுக்கு என்ன தேவை? இரக்கமா? அது தேவனிடத்தில் உண்டு. அது உங்களுக்கு நன்மையென்றால் அதைத்தர மனதாயிருக்கிறார். இன்றிரவு ங்கள் பரம பிதாவை நோக்குp கெஞ்சுங்கள். அவர் உற்களுக்கு இரங்குவார். அது உங்களுக்கு தேவையாயிருக்கிறது. எந்த இரக்கமானாலும் அதை உங்கள் முன்பாகக் கொண்டு வந்து வைப்பார்.

ஆத்துமாவே, உன் நேகர்
எந்நாளும் மாறாதவர்
யார் போயினும் அவரில்
நிலைத்துப் பிழைத்து நில்.

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08

“நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?.” யோவான் 6:67

ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர் லோத்தின் மனைவிப்போல திரும்பிப் பார்க்கிறார்கள். பெத்தேலிலிருந்து வந்த தீர்க்கதரிசியைப்போல் சோதனைக்கு இடங்கொடுத்து விடுகிறார்கள். எத்தனைப் பேர் தோமைவைப்போல ஆண்டவரை நேசித்து பிறகு விசுவாசத்தை விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் நீங்களோ இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்வரை அவரை விட்டு பின் வாங்கவே கூடாது என்று தீர்மானியுங்கள்.

இயேசுவை விட்டுப் போகிறது பின்மாறிப்போகிறது ஆகும். இது ஒளியைவிட்டு இருளுக்கும், நிறைவை விட்டு குறைவுக்கும், பாக்கியத்தை விட்டு நிர்ப்பந்தத்துக்கும், ஜீவனை விட்டு மரணத்திற்கும் செல்வதாகும். கிறிஸ்துவை விட்டு போனால், வேறு யாரிடம் போவோம்? உலகமும் அதில் உள்ள பொருள்களும், நிலையான ஆத்துமாவுக்கு சமமாகாது. நம்மில் சிலர் நான் தேவ பிள்ளை என்று சொல்லி உலகத்தை இச்சித்து அதன்பின் சென்று விடுவதால் பின்வாங்கிப் போகிறோம் என்று அறியாதிருக்கிறோம். எச்சரிக்கையாயிருங்கள். எப்போதும் நாம் விழித்திருக்க வேண்டும். தேவனைவிட்டு விலகுகிறோமா என்று எல்லா காரியங்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். தன்னை நிற்கிறவன் என்று சொல்லுகிறவன், தான் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கடவன்.

ஒரு நிமிஷமாவது இரட்சகரை விட்டு பரிந்து போவதற்கு வழியே இல்லை. அவரை விட்டு பின் வாங்கிப் போவது புத்தியீனம். அவருடைய நியமங்களை அசட்டை செய்வது தவறு. அவருக்கு முதுகைக் காட்டுவது துரோகம். ஆத்துமாவே உன்னையும் பார்த்து, நீ என்னை விட்டுப் போகிறாயா என்று அவர் கேட்கிறார்.

ஒன்றை தேவை என்றீரே
அதை எனக்குத் தாருமே
நான் உம்மை விட்டு,
ஒருபோதும் விலகாதிருக்கட்டும்.

Popular Posts

My Favorites

என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்

யூலை 22 "என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்." நீதி. 8:32 கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும்...