முகப்பு வலைப்பதிவு

செவிகொடுங்கள்

இயேசு சொன்னார்: எனக்குச் செவிகொடுங்கள். (மாற்கு 7:14).

எல்லோரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 4:22).

இயேசு சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (லூக்கா 21:33).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 5:24).

இப்புஸ்தகம் தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்கள் அடங்கியது. நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ளவும் வாசிக்கவும் ஊக்கமாய் ஏவுகிறோம். ஏனெனில் அது  எல்லா மனிதருக்கும் தேவ வெளிப்படுத்துதலாயிருக்கிறது.

இரண்டு வீடுகள்

இயேசு சொன்னது : நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷலுக்கு ஒப்பிடுவேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழைசொரிந்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு 7:24-29).

போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல வேறே எந்த அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11).

காணாமற்போன ஆடு

இயேசு இந்த உவமையைச் சொன்னார்: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,

அவைகளில் ஒன்று காணாமறபோனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே வீட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து”: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிருக்கும். (லூக்கா 15:3-7).

நாம் எல்லாரும் ஆடுகளைப்போல் வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6).

காணுமற் போதலும் கண்டுபிடித்தலும்

இயேசு சொன்னார்: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

சில நாளைக்குப் பின்பு இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பணணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களிலே பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்த தெளிந்தபோது அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனை பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன்.

நான் எழுந்து. என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே. பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதரகு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதறகு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து. இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரடசையையும் போடுங்கள்: கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் புசித்துச் சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணுமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். (லூக்கா 15:11-24).

மன்னிப்பு ஈயாத ஊழியக்காரன்

இயேசு சொன்னார் : பரலோக ராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் கணக்கு பார்க்கத் தொடங்சினபோது பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒரு வனை அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். கடனைத் தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும அவன் பெண்சாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவரே, என்னிடத்தி ல் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி. அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தல் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்டிருந்தவனகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத்தீர்க்கவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் உடன் வேலைக்காரன் அவன் காலில் விழுந்து, என்னிடத்தல் பொறுமையாயிரும், எலலாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அவனோ சம்மதியாமல் அவன் பட்ட கடளைக்கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

அவனுடைய ஆண்டவன் அப்பொழுது அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் கொடுத்துத்தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு 18:23-34).

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32).

பேராசையுள்ள கமக்காரன்

இயேசு சொன்னார்: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல.

அல்லாமலும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு எனக்கு இடமில்லையே?

நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும், என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு என் ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது: நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

தேவனோ அவனை நோக்கி : மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தது யாருடையதாகும் என்றார்.

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சோத்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான். (லூக்கா 12:15-21).

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (லூக்கா 12:31).

பெருமையும் தாழ்மையும்

இயேசு தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக் குறித்து இந்த உவமையைச் சொன்னார்:

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுரைப் போலவும். இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன். என் சமபாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:9-14).

உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:3, 6).

Popular Posts

My Favorites

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02 "தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்" அப். 27:25 தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத்...