அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

யூன் 05

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” 2.கொரி. 1:20

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், அவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கொடுத்த உறுதி மொழிகள் ஆகும். அவர் சுயாதிபதியான தேவனானபடியால் அவரிடத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள் அவருடைய அன்புக்கு அடையாளங்கள். அவைகள் வாக்குப்பண்ணினவரை ஒரு கட்டுக்குள்ளாக்குகிற திவ்ய தயவான செய்கைகள். அவர் பிதாவின் அன்பால் நமக்காக கவலை;படுகிறார். அவருடைய உண்மையும் உத்தமுமாகிய மாறாத அஸ்திபாரத்தின்மேல் அவைகள் நிற்கின்றன.

வாக்குத்தத்தங்கள் அவர் ஜனங்களி;ன் சொத்தாகவே இயேசுவில் பத்திரப்பட்டிருக்கின்றன. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலமும் அவைகளுக்குள் அடங்கி நமக்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன. இது தேவனுடைய இருதயத்தை அவைகள் திறந்து, விசுவாசியினுடைய விசுவாசத்தை வளர்த்து, பாவியின் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தை அவை அதிகப்படுத்துகின்றன. ஏனென்றால் தீர்க்கதரிசியாக அவைகளை முன்னுரைக்கிறார். ஆசாரியராக அவைகளை உறுதிப்படுத்துகிறார். அரசனாக அவைகளை நிறைவேற்றுகிறார். அவைகளெல்லாம் விசுவாசத்திற்குச் சொந்தம். நம்முடைய நன்மைக்காகத்தான் அவைகள் கொடுக்கப்பட்டன. யோகோவாவின் கிருபையைத் துதிப்பதே அவைகளி; முடிவு. அவைகளெல்லாம் கிறிஸ்துவின் ஊற்றாகிய நிறைவுக்கு நம்மை நடத்தி எச்சரிப்பு, நன்றியறிதல், துதி ஆகியவற்றைப் பிறப்பிக்கும்.

தேவவாக்கு உறுதியானது
இதுவே என் நம்பிக்கை
அவர் சொன்னது எல்லாம்
நிறைவேற்றுவார் அன்றோ.

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08

“சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.” ரோமர் 8:12

அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர். தேவதீர்மானத்தின்படி வாக்குத்தத்தப் புத்தகத்தில் நம்முடைய பேர் எழுதப்பட்டுள்ளதாலும் ஆண்டவரின் ஊழியத்தில் பங்கிருப்பதாலும் அவரின் கீழ்ப்படிதல், மன்றாட்டு, மரணம் இவைகளின் நன்மைகள் நமக்காயிருப்பதினாலும், நாம் தேவ கிருபைக்குக் கடன்பட்டவர்கள். பிராயசித்த, இரத்தத்தால் நீதிக்கு திருப்தி உண்டாக்கி நாம் தேவ கோபத்தினின்று விடுவிக்கப்பட்டதாலும், பிசாசின் வல்லமைக்கு தப்புவதாலும் நாம் அவருக்குக் கடன்பட்டவர்கள்.

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடந்த பொழுது, நாம் தேவ வல்லமையால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ சித்தத்தைக் கற்று, சுயாதீனத்திற்கும், சுகத்திற்கும் உள்ளானபடியினால் நாம் கடன்பட்டவர்கள். அனுதினமும் நிமிஷந்தோறும் நாம் பெற்றுக்கொள்ளுகிற விலையேறப்பெற்ற நன்மைகக்காகத் தேவனுக்குக் கடன்பட்டவர்கள். அன்பர்களே, நம் கடமையை உணர்ந்துப் பார்ப்போமாக. அன்பு நன்றியறிதல் என்னும் கடமை நமக்குண்டு. ஆகவே நமது பரம பிதாவின் கற்பனைகளை நன்கு மதித்து, ஆண்டவரின் வழிகளைக் கவனித்து, பரிசுத்தாவியானவரின் வழி நடத்துதலுக்கு இடங்கொடுத்து, தேவ வசனத்துக்கெல்லாம் சந்தோஷமாய் கீழடங்குவோமாக. கடனாளிகளாக நம்மைத் தாழ்த்தி, யோக்கியமாய் நடந்து, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்றும், நமது காலமும் பலமும் நமக்கு உரிமையல்லவென்றும் ஒத்துக்கொண்டு எல்லாம் கர்த்தருடையவைகளே என அறிக்கையிடுவோமாக.

நான் மன்னிப்படைந்த பாவி
என் கடன் மகா பெரியது
அவர் செய்த நம்மைக்கீடாக
எதைப் பதிலாய்த் தருவேன்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்

யூன் 25

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.” 1.கொரி. 3:23

யார் கிறிஸ்துவினுடையவர்கள்? தமக்கென்று தேவன் பிரித்து வைத்த பரிசுத்தவான். அவரைத் தங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் தொழுது கொள்ளுகிறார்கள். அவர் நாமத்தை விசுவாசித்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் செய்கிறவர்கள். எந்த ஒரு தேவ பிள்ளையானாலும், வளர்ச்சியில் குறைவுள்ளவர்களானாலும், பெலவீனர்களானாலும், பயங்களானாலும், சந்தேகங்களானாலும் சோர்ந்து போய் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாகும்போது பிதா அவர்களுடையவர்களாகிறார். பரிசுத்தாவியானவரும் அவர்களுடையவரே. தேவநீதி அவர்களுடையதாகிறது. அவருடைய சமாதானமும் அவருடையயதே. அவருடைய சகல ஐசுவரியமும் அவர்களுடையதாகிறது. அவரும், அவருடையதெல்லாம் அவர்களுடையது.

தேவன் கிறிஸ்துவினுடையவர்களைத் தமது சொத்தாகப் பாதுகாக்கிறார். தம்முடைய பிள்ளைகளாக அவர்களை ஆதரிக்கிறார். தம்முடைய மணவாட்டியாக அவர்களை அரவணைக்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் அவர் பேசும்போது, முற்றிலும் அவருக்குச் செவி கொடுக்க வேண்டும். அவர் கட்டளையிடும்போது நாம் சந்தோஷமாய்க் கீழ்ப்படியவேண்டும். சாத்தானும் அவன் மக்களும் அவருக்கு விரோதமாய்ச் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எப்போதும் அவரை நம்முடைய ஆண்டவரும் எஜமானுமாய் பாவிக்க வேண்டும். அடிக்கடி கிருபாசனத்தண்டையிலும், திருவிருந்திலும், தேவாலயத்திலும் அவரைச் சந்திக்க வேண்டும். வருங்காலத்தில் நித்தியமாய் அவரோடு வாழுவோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது அவரோடு ஜீவனம்பண்ண வேண்டும். நீர் கிறிஸ்துவினுடையவர் என்பதற்கு அத்தாட்சி உண்டா? உமக்கு அனுதினமும் வேண்டிய ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு இவைகளுக்காக நீர் அவரிடத்தில் கேட்கிறீரா?

எனக்குத் தேவை யாவையும்
அளிப்பவர் உண்டே
மன்னிப்பும் சமாதானமும்
அவர் அளிக்க வல்லவரே.

நானே வழி

யூன் 26

“நானே வழி.” யோவான் 14:6

இந்த வசனம் ஒரு நல்ல உவமானம். இரட்சகர் நமக்குத் தேவை எனக் காட்டுவதற்கு இந்த உவமானத்தைப் பயன்படுத்துகிறார். நாம் தேவனுக்குத் தூரமானவர்கள். நாம் பாவிகளானதால் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்குச் சுபாவப்படி வழி இல்லை. ஆனால் இயேசுவோ நமக்கு மத்தியஸ்தராகி நம்மைப் பிதாவிடம் வழி நடத்தும் வழியானார். இந்த வழிதான் நம்மைப் பாவத்திலிருந்தும், பரிசுத்தத்திற்கும், கோபாக்கினைக்குரிய பயத்தினின்று நித்திய சிநேகத்திற்கும் நம்மை நடத்துகிறது. தேவனை அறிவதற்கும், தேவனோடு ஒப்புரவாகுதற்கும், தேவனால் அங்கிகரிக்கப்படுவதற்கும், தேவனோடு சம்பந்தப்படுவதற்கும், தேவனை அனுபவிப்பதற்கும், தேவனுக்கு ஒப்பாவதற்கும், தேவ சமூகத்தண்டையில், அவர் மகிமையண்டைக்கும் நடத்த இயேசுதான் வழி.

எல்லாப் பாவிகளுக்கும், அவரை ஏற்றுக்கொள்ளுகிற யாவருக்கும் அவர் வழியாகத் திறக்கப்பட்டுள்ளார். அவரை நம்புகிற யாவருக்கும் அவரே நல்வழி. வரப்போகிற ஆக்கினைக்குத் தப்ப ஓரே வழி. ஆனால் நாமோ சுபாவப்படி அவர் வழியை விட்டு விலகிப்போனோம். ஆவியானவர் இதை நமக்கு உணர்த்துகிறார். இயேசுவைப் போலொத்த வழிதான் நமக்கு வேண்டுமென்று அறிகிறோம். விசுவாசத்தினால் அந்த வழிக்கு உட்படுகிறோம். கண்ணீரால் அந்த வழியை நனைக்கிறோம். அந்த வழியில் நாம் பிரயாணப்படவேண்டும். அவர் வழியில் செல்லும் எவரும் சுகத்தோடு தாங்கள் சேரும் இடம் அடைவர். அன்பர்களே! நாம் நிற்கிற இடம் நல்ல இடம். நாம் நடக்கிற பாதை நேரானது. நாம் தொடங்கி இருக்கும் பயணத்தின் முடிவு நித்திய ஜீவன்.

நீரே வழி உம்மால்தான்
பாவம் மாம்சம் ஜெயிப்பேன்
உம்மையன்றி பிதாவிடம்
சேரும் வழி அறியேன்.

நீ விசுவாசத்தால் நிற்கிறாய்

யூன் 13

“நீ விசுவாசத்தால் நிற்கிறாய்.” ரோமர் 11:20

இயேசுவில் வைக்கும் விசுவாசம் மகா விசேஷமானது. அதை அவருக்குமேல் வைக்காமல் மற்ற எதன்மீது வைத்தாலும் அதை அதிக மேன்மைப்படுத்திவிடுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தனாலாகிறது. நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தினால் நம் இதயத்தில் இடம் பெறகிறது. நாம் போராடுகிறோமா? அது விசுவாசப் போராட்டம். நமது விசுவாசம் தான் உலகை ஜெயிக்கிற ஜெயம். விசுவாசத்தினால் இயேசுவை நோக்கிப் போர்க்கிறோம். அவரை ஏற்றுக்கொள்ளுகிறோம். அவரோடு சஞ்சரிக்கிறோம். அவரில் நிலைக்கிறோம். ஏனெனில் விசுவாசத்தின் மூலமாய் தேவ வல்லமையினால் காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்து நமக்கு எப்படியிருக்கிறார்? அவர் நமக்காக எதையெல்லாம் செய்தார்? அவர் நமக்கு என்னத்தைக் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறதினால்தான் நாம் நிற்கிறோம். வருத்தமான பாதையில் நடக்க கிறிஸ்துவிடமிருந்து வெளிச்சத்தையும், போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் வேண்டிய பெலனையும், அவசரமான எந்தச் சூழ்நிலைக்கும் தேவையான கிருபையையும், விசுவாசத்தின்மூலம் பெற்றுக்கொள்கிறோம். ஜீவனுள்ள தேவனை விட்டுப் போவதால் அவிசுவாசமாகிய பொல்லாத இருதயத்தை அடையாதபடி எச்சரிக்கையாய் இருப்போமாக. சந்தேகங்களுக்கு விரோதமாகப் போராடி தேவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தைரியம் அடைவோமாக. நாம் பொதுவாக தேவனுடைய வசனத்தில் அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. இரட்சகர் முடித்த கிரியையில் மிதமிஞ்சி நம்பிக்கை வைப்பவர்களுமல்ல. தேவனுடைய உண்மையையும் அவ்வளவு உறுதியாய்ப் பிடிப்பவர்கள் அல்ல. ஆயிலும் விசுவாசத்தில் வல்லவர்களாகி, ஆபிரகாமைப்போன்று தேவனுக்கு மகிமை செலுத்துகிறவர்களாய் இருப்போமாக.

சத்துருக்கள் சீறி வந்தாலும்
இயேசுவே என் கன்மலை
அவர் கொடுக்கும் பலத்தால்
நிற்பேன் அவரே துணை.

தேவப்பிரியர்

யூன் 09

“தேவப்பிரியர்.” ரோமர் 1:2

தேவப்பிரியர் இன்னாரென்று எப்படித் தெரியும். இயேசுவில் அவர்கள் வைக்கும் விசுவாசத்தினாலும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதனாலும் தெரியும். தேவப்பிரியர் என்ற பெயர் கிடைப்பது பெரிய சிலாக்கியம். இதுவே எல்லா நன்மைகளுக்கும் காரணம். தேவப்பிரியர் என்பது தேவனை சிநேகிப்பதினாலும் அவருடைய மகிமைக்காக வைராக்கியம் காட்டுவதினாலும் தெரிந்துக்கொள்ளக்கூடியது. அவரின் சித்தம் செய்து பொறுமையாய்ச் சகிக்கிறதினாலும் தெரிந்துக்கொள்ள முடியும். அவர்களுக்குக் கிடைக்கும் மேன்மை என்ன? அவர்கள் தேவனுடையப் பிள்ளைகளாகிறார்கள். இயேசுவுக்குச் சகோதரராக ஒப்புக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுக்குக் கூட்டாளிகளாக அவரோடு சஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்குள் ஆவியானவர் தங்கியிருக்கிறார்.
திவ்ய செயல், அவர்களைத் தற்காத்து அவர்களுக்குத் துணை நின்று அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறது. தேவத்தூதர்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இவர்கள் சகலத்திற்கும் சுதந்தரவாளிகள். இவர்களுக்குக் கிடைப்பது என்ன? வெற்றி. எல்லா சத்துருக்களின் மேலும் ஜெயம். எல்லா அடிமை நுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வியாதிகளிலிருந்து சுகம் அடைவர்.

பரிசுத்த பாக்கியத்தைத் தேவனோடுகூட அனுபவித்து இயேசுவைப்போல் இருப்பார்கள். மகிமையின் சிங்காசனம், அலங்காரமான கிரீடம், மோட்சானந்த கின்னரம் அவர்களுக்குக் கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டிய கடமை, தேவனுக்காகவும் அவர் ஊழியத்திற்காகவும் தீர்மானமாய் பிரயாசப்படுதல் வேண்டும். முழுவதும் தேவனுக்கும் அவர் ஊழியத்திற்கும் தங்களை ஒப்புவிக்கவேண்டும். அவர் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நியமங்களை நேசித்து நடக்க வேண்டும். அவருடைய சித்தத்தைப் பெரிதாக மதித்து, சகலத்திலும், அவருடைய ஜனங்களுக்கு ஒத்து நடக்க வேண்டும். இதை வாசிக்கிறவரே, நீர் தேவனுக்குப் பிரியமானவர்தானா? நீர் அவரை நேசிக்கிறீரா? அவரோடு சஞ்சரித்து வருகிறீரா?.

இயேசுவின் நாமத்தில் எழுந்து
அவர் கைமேல் சார்வேன்
அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
என் அன்பைக் காண்பிப்பேன்.

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

யூன் 11

“உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” சங்.94:19

நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்குத்தத்தங்களினாலும், கிறிஸ்துவின் பூரண கிரியைகளிலும், நித்திய உடன்படிக்கையினாலும், பாவம், துன்பம், துக்கம் இவைகளினின்று முற்றிலும் என்றைக்கும் விடுதலையாவோம் என்ற நம்பிக்கையிலும் நமக்கு எவ்வளவு ஆறுதல் அடங்கியிருக்கிறது.

நமக்கு நாமே ஆறுதல்படுத்த அற்றவர்களாய் இருக்கிறோம். நம்முடைய தேவனிடத்தில் நம்மைப் பாக்கியவான்களாக்கத் தக்க தகுதி இருக்கிறது. நமது சொந்த நினைவுகள்கூட அடிக்கடி நமது துக்கத்திற்குக் காரணம். நம்முடைய தேவனைப்பற்றிய நினைவுகளோ, அன்பு, சமாதானம், சந்தோஷம் இவைகளால் நிறைந்திருக்கிறது. அவர் எக்காலத்திலும் நம்மை நேசிக்கும் சிநேகிதன். கண்ணீரைத் துடைக்க நமக்காகப் பிறந்த சகோதரன் நமக்கிருப்பது எத்தனை ஆறுதல். இவர் எப்போதும் பிதாவண்டை பரிந்து பேசும் மத்தியஸ்தர். இதனால் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு வருத்தங்களில் வருத்தப்பட்டு தம்மைப்போல் நம்மை முற்றிலும் மாற்றி, தாம் இருக்கும் இடத்தில் நம்மை சேர்க்கத்தக்கதான அவ்வளவு நெருங்கிய ஐக்கியம் உண்டென்று அறிவது எவ்வளவு ஆறுதல். இவர்தான் நமக்குத் தலையானவர். நாம் அவருக்குச் சரீரம். கிறிஸ்துவும் அவர் சபையும் ஒன்று என்ற சத்தியம் எத்தனை அருமையானது. எத்தனை பரிசுத்த ஆறுதல் நிறைந்தது. அவநம்பிக்கைக்கும் மனமடிவுக்கும் எத்தனை நல்ல மருந்து. உள்ளும் புறமும் எல்லாம் துக்கமும், துயரமும் வியாகுலமுமாய் இருக்கும்போது, அவருடைய ஆறுதல்களைப்பற்றி ஜீவனம் பண்ணுவோமாக.

துயரம் பெருகும் போதும்
துக்கம் நிறையும் போதும்
உமதாறுதல் அணுகி,
என்னைத் தேற்றும் அப்போது.

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

யூன் 12

“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.” எபேசி. 4:32

ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவர். மனதார மன்னிக்கிறவர். சந்தோஷமாய் மன்னிக்கிறவர். நியாயப்படி மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கிறதால் மன்னிக்கப்பட்ட பாவம் மறைக்கப்பட்டுப் போகிறது. இந்த மன்னிப்பு கிறிஸ்துவினால் மட்டுமே கிடைத்த ஒன்றாகும். இது மனந்திரும்புதல், விசுவாசம், நற்கிரியைகள், இவைகளினால் நாம் பெற்றவைகளல்ல. கிறிஸ்துவின் நிமித்தம்மட்டுமே நாம் மன்னிக்கப்படுகிறோம்.

இயேசுவானவர் நம்மை தேவனிடம் சேர்க்கும்படி அக்கிரமகாரருக்காய் நீதிமானால் ஒருதரம் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக நிறைவும், பூரணமும் நித்தியமுமான பிராயச்சித்தத்தை உண்டுபண்ணி, தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து பாவத்தைத் தொலைத்தார். ஆகவே நாம் இயேசுவை விசுவாசித்து, தேவன் தம் குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிருபாசனத்தைக் கிட்டிச்சேர்ந்து, அவர் நாமத்தைச் சொல்லி பாவ மன்னிப்புக்காக கெஞ்சும்போது தேவன் நமக்கு மன்னிப்பளித்து, தம் குமாரனை மகிமைப்படுத்துகிறார். எந்த விசுவாசிக்கும் மன்கிக்கிறார். எந்த அக்கிரமத்தையும் மன்னிக்கிறார். அவர் பாவங்களையெல்லாம் குலைத்துப்போடுகிறார். எல்லா குற்றங்கக்கும் பாவியை நிரபராதியாக்குகிறார். தேவன் மன்னித்தவரை ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? தேவன் தம்மை நீதிமானாக்கினாரே? கிறிஸ்து மனதார நமக்காக மரித்தார். நித்திய மீட்பைச் சம்பாதித்தார். அவர் நிமித்தம் இன்று நாம் தேவனுக்கு முன்பாக மன்னிப்புப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பாவிகளாக நிற்கிறோம்.

என் பாவம் மன்னிக்கப்பட்டதை
என் நேசத்தால் ரூபிப்பேன்
எனக்குரியது யாவையும்
அவருக்கே படைப்பேன்.

Popular Posts

My Favorites

தம்மைச் சேர்ந்த ஜனம்

பெப்ரவரி 01 "தம்மைச் சேர்ந்த ஜனம்."  சங்.148:14 இயேசு நம்மைப்போல மனுஷ சாயல் கொண்டு நம்மில் ஒருவராய் பூமியில் வாசம்பண்ணி நம்மைச் சேர்ந்தவரானார். அவர் தமது பரிசுத்தாவியைத் தந்து நம்மோடு ஐக்கியப்படும்போது நாம் அவரைக் சேர்ந்தவர்களாகிறோம்....