பாடல்கள்

Home பாடல்கள் Page 6

ஆயனே தூயனே வாரும்

ஆயனே தூயனே வாரும்
இந்த பாவியை உம் மந்தையில் சேரும்
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன்
உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
கேளுங்கள் தரப்படும் என்றவர்
நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
தாயினை மிஞ்சிடும் அன்பையே
உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

அன்புள்ள மானிடனே

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

அழைக்கின்ற தெய்வம் இவர் போல
இந்த உலகத்தில் கிடையாது
அடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர்
அவர் அண்டையில் சென்றுவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

மானிடன் செய்யா அற்புதத்தை
இவர் செய்தே காட்டியவர்
மரித்தபின் உயிர்த்த தெய்வமென்று
இவர் மகிமையைப் பாடிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உன்னைப் போலவே பிறர் மீதும்
நீ அன்பினைக் காட்டிவிடு
இதுவே இயேசுவும் விரும்புவது
என்று இன்றே மனந்திரும்பு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உள்ளத்தில் இருக்கும் தேவனுக்கு
உன் உடம்பே ஆலயமாம்
அந்த உடலினை வீணே கெடுக்காதே
உன் பழக்கத்தை மாற்றிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு
அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வாழ்வு என்ற பயணத்தில் –நான்
வழி தவறிச் சென்றேனே
வாழ்வு என்ற பயணத்தில் – நான்
வழி தவறிச் சென்றேனே
பாவச் சேற்றில் எனை மீட்ட
பரமன் உம்மைத் துதிக்கின்றேன்
பாவச் சேற்றில் எனை மீட்ட பரமன்
உம்மைத் துதிக்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே

உமது அடிச்சுவட்டில் புதிய வாழ்வைத் தொடங்குகிறேன்
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
இறப்பின் விடுதலையை உலகில் மெய்ப்பித்த இரட்சகரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே

வேதத்தின் பொருள் நீரே – ஜீவ நாதத்தின் ஒளி நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
தவத்தின் தலைவராகி எம்மைக் காத்திட வந்தவரே
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ

மந்தைக் கூட்டத்துக்குள் நானும் சிந்தையைப் பறிகொடுத்தேன்
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
மன்னுயிர் காத்திடவே செஞ்சிலுவை சுமந்தவரே

என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்

நல்ல நேரம் வந்து அழைத்தது

நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது

நல்ல நேரம் வந்து அழைத்தது….
என்னைத் தேவனோடு இணைத்தது

Mulmudi Mudi Sumanthu – முள்மூடி முடி சுமந்து

முள்மூடி முடி சுமந்து
நீர் முதுகில் சிலுவைகொண்டு
கல்வாரி மலைமீது
நீர் தள்ளாடி நடந்தது ஏன்
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
கர்த்தாவே கதறுகின்றேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா
இங்கு கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா

கண்கெட்ட குருடர்களும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
குஷ்டம் வந்த ரோகிகளும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே
அன்று செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே

அத்தனையும் செய்த உம்மை
பின்பு சித்ரவதை செய்தது
ஏன் கர்த்தாவே கதறுகிறேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லடியும் கசையடியும்
வாய்ச் சொல்லடியும் ஏற்றது ஏன்
ஐயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய்
இவற்றைத் தாங்கித் தவித்தீரோ
இன்னும் நாம் உணரவில்லை
மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை

ஆயத்தமா (6)

  • Aayathamaa_6
❚❚

Tamil Christian Traditional Songs – Golden Hits Vol-1

  • Tamil-Christian-Traditional-Songs
❚❚

Popular Posts

My Favorites

என்னைச் சோதித்துப் பாரும்

செப்டம்பர் 26 "என்னைச் சோதித்துப் பாரும்" மல்.3:10 தேவன் தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி நம்மை அழைக்கிறார். அவரின் உண்மையைப் பரீட்சித்துப் பார்க்கச் சொல்லுகிறார். அவர் வாக்குப்பண்ணினதைச் செய்யாதிருப்பாரோ என்று யார் சந்தேகிக்க முடியும்? நாம் சந்தேகிப்போமானால், அது...