இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பெப்ரவரி 03

“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”  பிலி. 3:14

விசுவாச பந்தயத்தில் ஓடுகிறவன். பந்தயப் பொருள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தம், மகிமை, பரலோகம் இவைகளே இந்தப் பந்தையப் பொருள். அவன் ஓடவேண்டிய ஓட்டம் பரிசுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டத்தில் அNநுக சத்துருக்கள் எதிர்ப்படுவார்கள். துன்பங்களும், சோதனைகளும் வந்தாலும் நமது குறி இலக்கை நோக்கியே கவனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றே அவன் அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்து வைத்த வாழ்க்கையின் மாதிரியே அந்த இலக்கு. அவரைப்போலவே நாம் மாறவேண்டும். அவரைப்போன்றே பாவத்தைப்பகைத்து, சாத்தானை ஜெயித்து, சோதனைகளைச் சகித்து, ஓடவேண்டும்.

இயேசுவோ தமது முன்வைத்த சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே பந்தயச் சாலையில் ஓடி தமது இலக்கை அடைந்து, கிரீடத்தைப் பெற்று ஜெய வீரராய் தேவ வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நமது விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரும் அவரே. நமது கண்களும் கருத்தும் அவர் மேலிருக்க வேண்டும். அவர் தேடிய விதமாகவே நாமும் தேடவேண்டும். அப்போஸ்தலனைப்போல் ஒன்றையே நோக்கி, அதையே நாடி இல்கை நோக்கி தொடர வேண்டும். அப்போதுதான் பந்தையப் பொருள் கிடைக்கும். ‘நான் ஜெயங்கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததுப்போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி கிருபை செய்வேன்’ என்று கிறிஸ்துவும் சொல்லுகிறார்.

நாம் ஓடும் ஓட்டத்தில்
இரட்சகரையே நோக்குவோம்
அந்த இலக்கை நோக்கினால்
பந்தயப் பொருளைப் பெறுவோம்.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.

தம்மைச் சேர்ந்த ஜனம்

பெப்ரவரி 01

“தம்மைச் சேர்ந்த ஜனம்.”  சங்.148:14

இயேசு நம்மைப்போல மனுஷ சாயல் கொண்டு நம்மில் ஒருவராய் பூமியில் வாசம்பண்ணி நம்மைச் சேர்ந்தவரானார். அவர் தமது பரிசுத்தாவியைத் தந்து நம்மோடு ஐக்கியப்படும்போது நாம் அவரைக் சேர்ந்தவர்களாகிறோம். இது நமக்குக் கிடைத்த மேலான கனம். நமது சமாதானத்திற்கும் பாக்கியத்திற்கும் இது வற்றாத ஊற்று. நாம் அவருடைய பிள்ளைகளானால் அவரோடு ஐக்கியப்பட்டவர்களாகிவிடுகிறோம். நாம் அவரின் எலும்பில் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமுமானபடியால், அவரோடு ஒன்றாய் ஐக்கியப்பட்டிருக்கிறோம். ஒரு மனிதன் தன் நண்பனோடு பழகுவதுப்போல் தேவன் நம்மோடு சஞ்சரித்து ஐக்கியப்படுகிறார். அவர் தினம் தினம் நம்மைக் காத்து விசாரிக்கிறபடியால் அவருடைய கரிசனையில் ஐக்கியப்படுகிறோம். நமக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணும்போது அவரோமு இருப்பிடத்திலும் ஐக்கியப்படுகிறோம். நாம் மரிக்கும்போது அவருடன் அதிக ஐக்கியத்தில் பங்குள்ளவர்களாவோம்.

நாம் ஏழைகளாயிருந்தாலும் துன்பப்படும்போது அவரோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். நாம் அவரோடு ஐக்கியப்பட்டிருந்தால் நாம் துன்பப்படும்போது நமக்குத் துணை நின்று, சகல மோசங்களிலும் நம்மை ஆதரித்து, தனிமையாயிருக்கும்போது ஆறுதல் சொல்லி, நம்மோடு பேசி, தேவைப்படும்போதெல்லாம் தேவையானதைத் தந்து மகிமைப்படுத்துவார். தினம்தோறும் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருந்தால் அவரும் நம்மோடு ஐக்கியப்பட்டிருப்பார் என்பதை உணர்ந்துக் கொண்வோமாக.

நான் தேவனுடைய பிள்ளையா?
அவர் என் நேசரா?
விசுவாசத்தோடு ஜெபிப்பேன்
அவரை ஆரோசித்து நடப்பேன்.

Popular Posts

My Favorites

சமாதானத்தோடே போ

மார்ச் 24 "சமாதானத்தோடே போ." லூக்கா 7:50 உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ...