நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

பெப்ரவரி 12

“நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்.” சங். 71:14

இப்படித்தான் நான் தைரியமாய் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என் நம்பிக்கை அஸ்திபாரமானது, என்றும் மாறாமல் நிலையாய் நிற்கிறது. கிருபை நிறைந்த என் தேவனுடைய தகுதிகளும் அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் உண்மை வாக்குகளும் அதில் எழுதியிருக்கிறது. தேவனுடைய பக்தருடைய வாழ்க்கையிலும் என் அனுபவத்திலும் கண்மறிந்ததும், சகலமும் எப்போதும் தேவனிடம் நம்பிக்கைக் கொண்டிருக்க என்னை உற்சாகப்படுத்துகின்றன. என் அக்கிரமத்திற்கு தேவன் இறங்குவார். சகல துன்பத்திலும் என்i னஆதரிப்பார். சமயத்திற்கேற்ப உதவி செய்து என்னை விடுவிப்பார். எனக்கு வரும் எல்லா தீயக் காரியங்களிலிருந்தும் நன்மை பிறக்கும். இயேசுவானவர் தோன்றும்போது எனக்குத் தயை கிடைக்கும். நித்தியஜீவன் எனது படைபங்காயிருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருப்பேன். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையேல் நான் நிர்மூலமாகிவிடுவேன். வீண் கவலை என்னை நெருக்கி, அவநம்பிக்கை என் மனதை மூடினாலும் நான் அவரையே நம்பிக்கொண்டிருப்பேன்.

இப்படி நான் நம்புவதால் நம்பிக்கையின் தேவ னைக் கனப்படுத்துகிறோம். வருங்காரியங்கள் வெளிச்சமாய் இருக்கும். இது ஜெபத்திற்கும் முயற்சிக்கும் நம்மை தூண்டி விடுகின்றது. நமது ஜீண காலத்தை இனிமையாக்குகிறது. ஆனால் ஒன்றை நான் மறந்துவிடக்கூடாது.. என் நம்பிக்கை பரீட்சிக்கப்படும். தேவனும் என்னை ஆராய்வார். சாத்தானும் என்னைச் சோதிப்பான். ஆனாலும் நல்ல நம்பிக்கையானது பிழைத்து பலத்த காரியம் நடைபெற கிரியை செய்யும். நான் ஏன் அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டும்? நான் பயப்படேன். அதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

காற்றடித்தாலும் கொந்தளித்தாலும்
என் ஆத்துமா உம்மைப் பற்றும்
அப்போ என் மனம் சுகித்து
உம்மில் வாழ்ந்து களிக்கும்.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது

பெப்ரவரி 10

“என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது.”  சங். 63:1

தேவன் தன் பட்சத்திலிருக்கிறாரென்று அறிந்துகொள்வது மாத்திரம் ஒரு கிறிஸ்தவனுக்கு போதாது. அவர் சமுகத்தை அவன் தரிசத்து, அவரோடு இன்பமாய் இசைந்து அவருடைய அன்பை ருசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவில் அவன் புதிதாய்ப் பிறந்தபடியால் தேவன் கொடுக்கும் ஈவுகளின்மேல் வாஞ்சையடைய வேண்டும். அவராலன்றி அவன் ஆசைகள் நிறைவேறாது. தேவனுடைய இனிய முகத்தை நாடி வாஞ்சித்து, அதுவே தன் சந்தோஷம் என்று அறிந்து ஆனந்தங்கொள்ள வேண்டும். நீ ஆண்டவரின் முகத்தைக் காணாதுப்போவாயானால் சீக்கிரம் சேர்ந்துதுப்போவாய்.

தேவ வாக்கியங்களில் தேவனைக் காணாவிட்டால் அனலற்ற வெளிச்சம்போலவும், விசேஷித்த சிலாக்கியமாய்க் கர்த்தரைக் காணாவிட்டால் ஜீரத்தினால் பீடிக்கப்பட்டவனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற காய்கறிகளைப்போலவும் தோன்றும். தேவன்தான் ஒருவனுக்கு ஜீவன். இயேசுதான் ஒருவனுக்கு உயிர். கர்த்தருக்குள் சந்தோஷப்படுதலதான் அவன் பெலன். ஒருவன் தேவனைக் காணாவிட்டால் உயிரற்றவன். வியாதியஸ்தன். துக்கம் நிறைந்தவன். பாடுகளுள்வன்.

அன்பரே, இது உன் அனுபவமா? வெறும் அறிவும், வீண் சடங்குகளும், தெய்வ அனலை ஊட்டாத மார்க்கமும், உனக்கு மன திருப்தியை கொடுக்குமா? அப்படியிருக்குமானால் உன் நிலை சந்தேகத்திற்குரியது. தேவனில்லா மார்க்கத்தைப் பற்றியும், தேவனோடு பேசி உறவு கொள்ளாத மார்க்கத்தைப்பற்றியும் எச்சரிக்கையாயிரு.

உம்மேல் தாகமாய்
ஏங்குதே என் ஆத்துமா
என் சமீபமாய் வாரும்
அப்போ தென்வாஞ்சைகள் தீரும்.

நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்

பெப்ரவரி 09

“நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” சங். 109:4

விழிப்பும் விண்ணப்பமும் எப்போதும் இணைபிரியாதிருக்க வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவன் விழிக்க வேண்டும் விழிக்கிற கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டும். ஒன்று மற்றொன்றுக்குத் துணை. நம்முடைய வேலைகளைப் பார்க்கும்போதும் தினசரி அலுவல்களைக் கவனிக்கும்போதும் ஜெபம் மிகவும் அவசியம். அது எண்ணற்ற தீமைகளுக்கு நம்மைக் காத்து மேலான நன்மைகளை நமக்கு கொண்டு வருகிறது. ஜெபத்திற்குச் செவிகொடுப்பதே தேவனுக்குப் பிரியம். உத்தமருடைய விண்ணப்பம் அவருக்குப் பிரியம். அவரை நோக்கி மன்றாடுவது அவருக்குச் சந்தோஷம் என்று எண்ணத்தோடு அவர் சமுகம் போவோமாக.

ஒரு தகப்பனைப்போல் அவர் என்னைக் கண்ணோக்குகிறார். தகப்பனைப்போல் செவி கொடுக்கிறார். அவர் சிம்மாசனத்தண்டை நான் சேராமல் என்னுடைய விண்ணப்பங்களை ஆத்திரத்தோடு செய்து முடிக்கும்போது அவர் விசனப்படுகிறார். தைரியமாய் வா என்று அவர் அழைக்கிறார். அவர் கூப்பிடுதலைக் கவனியாதேப்போனால் ஏதாவது ஓரு துன்பத்தை அனுப்புவார். ஒரு பூசலைக் கட்டளையிடுவார். நம்மை அவர் சிம்மாசனத்தண்டை துரத்த ஒர சத்துருவை எழுப்பி விடுவார். நமது துயரங்கள் நம்மைப் பார்த்துத் தெளிவாய்ச் சொல்கிறதை நாம் கவனிப்போமானால் அவைகள், ‘முழங்கால் படியிடு. உன் ஜெப அறைக்குப்போ அறைக்குப் போ, உன் தேவனை நோக்கிக் கூப்பிடு’ என்று கூறும் சத்தங்கள் கட்டாயம் கேட்கும்.

இடைவிடாமல் ஜெபம்பண்ண
தாரும் வரம் தேவனே
நான் உம்மோடே நடக்க
உமதாவி அருளுமே.

உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08

“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15

நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.

என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06

“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2

இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.

நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.

இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.

சமாதானத்தின் தேவன்

பெப்ரவரி 05

“சமாதானத்தின் தேவன்.”  எபி. 13:20

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் தேவன் நம்மோடு முற்றிலும் சமாதானமாகி ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார். அவர் சமாதானத்தின் தேவன். பயப்படத்தக்கதொன்றும் அவரில் இல்லை. இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நடக்குக் கொடுப்பார். அவர் நம்மேல் மனஸ்தாபமாயிருந்தது உண்மைதான். இப்போதோ அவர் கோபம் நீங்கி ஆறுதல்படுத்துகிறார். நமக்கும், அவருக்கும் இப்போது சமாதானமுண்டு. நமது நன்மையை அவர் போருகிறார். அவருக்கு மகிமையை அதிகம் கொடுக்க வேண்டியதே நமது கடமை. யோகோவா நம்மிடம் சமாதானமாய் இருப்பது எத்தனை பாக்கியம். அவரின் சமுகத்தில் நமது இருதயத்தை ஊற்றி அவரில் நம்பிக்கை வைத்து முழுவதும் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.

கிறிஸ்துவானவர் நமக்காக நிறைவேற்றின கிரியையை, யோகோவா அங்கீகரித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, பரம ஸ்தலங்களில் அவரைத் தமது வலது பாரிசத்தில் வைத்து, அவர்மூலம் நமது வாழ்க்கைக்கு நன்மை செய்யப் பிரியப்படுகிறார். இப்போதும் அவர் அதிகமாய் நம்மோடு சமாதானப்பட்டிருக்குpறார். நாம் இதை அதிகமாய் நம்பி அதிகமாய் அனுபவிக்கலாம். பரிசுத்தாவியைத் தந்து நமக்கு நன்மை செய்கிறது அவருக்குப் பிரியம். இனி தேவனைக் குறித்து தப்பெண்ணங்கொள்ளாதபடிக்கும் அவர் கடினமனமு;ளவரென்று எண்ணாதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்போமாக. அவர் சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தின் தேவனே
அமர்ந்த மனநிலை தாருமே
இருதயத்தில் இரத்தம் தெளித்து
உமது நாமம் அதில் எழுதுமே.

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04

“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.”  மத். 24:6

அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.

நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.

என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.

Popular Posts

My Favorites

என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது

பெப்ரவரி 10 "என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது."  சங். 63:1 தேவன் தன் பட்சத்திலிருக்கிறாரென்று அறிந்துகொள்வது மாத்திரம் ஒரு கிறிஸ்தவனுக்கு போதாது. அவர் சமுகத்தை அவன் தரிசத்து, அவரோடு இன்பமாய் இசைந்து அவருடைய அன்பை...