துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள் பக்கம் 2

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து…..

மெத்தை படுக்கைகள் வாங்கலாம்,
நித்திரையைப் பெற முடியாது.
மருந்துகள் வாங்கி சாப்பிடலாம்,
சுகத்தைப் பெற இயலாது.
புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்,
அறிவை அடைய முடியாது.
ஆபரணங்கள் வாங்கி அணியலாம்,
அழகைப் பெற முடியாது.
வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
ஆயினும் வாழ்க்கை அமையாது.
வீடுகளைக் கட்டலாம்,
குடும்பத்தைக் கட்ட முடியாது.
வசதிகள் பலதும் பெறலாம்,
மெய்யின்பத்தை நுகர முடியாது.
உறவுகள் பெற்றிருக்கலாம்,
அன்பைப் பெற முடியாது.
தான தருமங்கள் செய்யலாம்,கடவுளைக் காண இயலாது.
புண்ணிய யாத்திரை செல்லலாம்,
ஆன்ம இரட்சிப்பை அடைய முடியாது.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாதவைகளை எல்லாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாகவே அருளுகிறார். மெய்தேவனிடம் சிபாரிசுகள் பலிக்காது; பணமும் செல்லாது. “நமக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி தேவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்று தூய வேதம் கேட்கிறது. பணம் கொடுத்து நாம் தேவனை திருப்தி செய்ய முடியாது. நமக்கு ஜீவன் கொடுத்து, நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், நீரையும் இலவசமாக கொடுக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு பாவமன்னிப்பையும், ஆன்ம இரட்சிப்பை யும் பணமுமின்றி விலையுமின்றி வழங்குகிறார்.

“வருத்தப்பட்டுப்பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:28-30) தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டுபண்ணி, உன்னதத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார்.

ஆன்ம இரட் சிப்பையும் தேவ சமாதானத்தையும் அவரிடம் வரும் எவருக்கும் இலவசமாக அருளுகிறார்.

“சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, அவரையே உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே அவரிடம் வருவீர்களா?

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!

பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!

‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.

சத்தியம் என்றால் என்ன?

நம்மை உண்டாக்கின தேவன் சத்தியமுள்ளவர் (யோவான்8:26), இயேசு கிறிஸ்து சத்தியமுள்ளவர் (யோவான்14:6), பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் (யோவான்16:13).

இவர்களை அறிய அறிய நம் வாழ்க்கையில் விடுதலை உண்டாகும். இவர்களை எப்படி அறிந்து கொள்வது? சத்திய வசனமாகிய வேத வசனங்கள் மூலமாகத்தான் சத்திய தேவனை அறிந்து கொள்ள முடியும் (யோவான்17:17).

வேத வசனம் சத்தியம். வேத வசனங்களை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் விடுதலையை அனுபவிக்க முடியும்.

வேத வசனங்கள் மனிதனால் எழுதப்பட்ட தத்துவங்களல்ல.
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” 2.தீமோ.3:16

பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த மனிதர்களைக்கொண்டு
எழுதியதுதான் வேத வசனங்களாகிய வேத புத்தகம்.

உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகம் வேத புத்தகம்தான்!

தமிழில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம்தான்!

உலகிலேயே அதிகமான புத்தகங்கள், விளக்க உரைகள் எழுதப்பட்டது வேத புத்தகத்திற்குத்தான்!

காரணம்,
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.

தேவனுடைய வார்த்தையாகிய சத்தியம் வல்லமையுள்ளது.
பாவியை பரிசுத்தமாக்கும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு! வியாதியஸ்தரை குணமாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையில் உள்ளது! துக்கத்தில் மூழ்கிப்போகிறவர்களை ஆறுதல்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு! சோர்ந்து போகிறவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை வேத வசனத்தில் உள்ளது! எந்த சூழ்நிலையில் இருக்கிற மனிதனையும் விடுவிக்கிற வல்லமை வேத வசனத்திற்கு உண்டு!

வசனத்தில் வல்லமை மட்டுமல்ல, ஜீவனும் (உயிர்) இருக்கிறது. வேத வசனங்களை வாசிக்கும்போது, அது நம்மோடு பேசுவதை உணர முடியும்! இந்த ஜீவனும், வல்லமையுமுள்ள வேத வசனங்களை வாசிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! உங்களுக்கென்று ஒரு வேத புத்தகம் இல்லாவிட்டால் உடனே ஒரு வேத புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

தினமும் வேதத்தில் பிரியமாய் இருந்து. அதை வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தமும், சுகமும், விடுதலையும், ஆசீர்வாதமும் உண்டாவதை காண்பீர்கள்.

சத்தியம் உங்களை பரிசுத்தமாக்கும்.
வேத வசனமாகிய சத்தியத்தை வாசித்து அறியும்போது உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?

‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.” யோவான்17:17
வேத வசனங்கள் நம்மை பரிசுத்தப்படுத்தும்.

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் ரோமர் 13:12,13,14.

நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.

‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான?  உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.

வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.

விசுவாசம்!

“விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17

அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.

வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து  எபி. 12:1.

இயேசுவை ஒரு மனிதன் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அவனுக்குள் விசுவாசம் துவக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால் தேவனுடைய வசனங்களை கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், தியானிக்கவேண்டும்.

உங்களுக்குள் ஆண்டவர் மீது விசுவாசம் பெருக வேண்டுமா?  அதிகமாக வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள்.

“விசுவாச வீரன்” என்று அழைக்கப்பட்டவர் ஜார்ஜ் முல்லர் என்கிற தேவ ஊழியர். கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்தவர். விசுவாசத்தினால் கர்த்தருக்காக இவர் பெரிய காரியங்களை சாதித்தார்.

இவர் விசுவாச வீரனாக திகழ்ந்ததற்கு காரணம், வேத வசனங்கள்தான். இவர் தேவ புத்தகத்தை இருநூறு (200) முறை வாசித்து முடித்திருக்கிறார். நூறு முறைக்கு மேலாக முழங்காலிலேயே நின்று வேதத்தை வாசித்து முடித்தாராம்!

விடுதலை!

“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32

வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!

“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92

தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.

ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.

இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:

“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.

பயத்திலிருந்து விடுதலை!

ஒரு சகோதரன் தன் அனுபவத்தை கூறினார். இவர் உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு பயம். எதற்காகவும் பயந்து கொண்டேயிருப்பார். பயம் இவரை அடிமையாக்கி விட்டது.

ஒருசமயம் ஏசாயா 41:10ஐ வாசித்தபோது ஆண்டவர் இவரோடு பேசினார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் பேசினவுடன் பயம் உள்ளத்தை விட்டு விலகினது. இந்த சத்திய வசனம் விடுதலை கொடுத்தது.
நீங்களும் விசுவாசத்தோடு வேத வசனத்தை வாசிக்க வாசிக்க பயத்திலிருந்து விடுதலையடைவீர்கள். உங்களுக்குள் தைரியமும், பெலனும் உண்டாகும்.

ஆதலால், தினமும் தவறாமல் வேதத்தை வாசியுங்கள்!
வசனத்தை கருத்தாய் தியானியுங்கள்! வசனத்தின்படி வாழுங்கள்!

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

சத்தியமுள்ள தேவனே!

உமது வசனமாகிய சத்திய வசனத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்!

நீர் விரும்புகிற வண்ணமாக சத்தியத்தை அறிந்து கொள்ள எனக்கு கிருபை தாரும்!

உம்முடைய சத்தியத்தினால் என்னை பரிசுத்தமாக்கும்!
உம்முடைய சத்திய வசனங்களினால் என் விசுவாசத்தை பெருகச் செய்யும்!

உம்முடைய வசனமாகிய சத்தியம் என்னை விடுதலையாக்கட்டும்!

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு பகல் பாராது மக்களுக்குச் சேவை புரிவதால் அம்மருந்தகத்திற்குமட்டும் ஒரு தனிச் சிறப்பு. சுமார் 35 வயது மதிக்கக்கூடிய வாலிபன் சுந்தர் ஓர் மருந்தாளுநன். தன் பணியில் எப்பொழுதுமே மிக உண்மையுள்ளவனும், மனச்சாட்சிக்குப் பயந்தவனும், மருந்துகளைப் பற்றிய நல்ல அனுபவமுள்ளவனுமாயிருந்தான். ஆனால், சில நேரங்களில் மருந்து பெறுமிடத்தில் அமர்ந்தவாறே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். அப்பொழுது மருந்து வாங்க வருவோரின் அவசர நடைச் சப்தம் கேட்டு விழித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு! மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாய்க்கு மருந்து வாங்க ஒரு சிறுமி மருந்துச் சீட்டைக் கொண்டுவந்து சுந்தரிடம் கொடுத்தாள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சுந்தரோ வெறுப்போடுகூட, பல்வேறு மருந்துப்புட்டிகளை எடுத்து, வைத்திய நியமத்தின் விகிதாச்சார முறைப்படி கலந்து ஒரு புட்டியில் ஊற்றி, புட்டியின் மேல் ஒரு அடையாளச் சீட்டையும் ஒட்டி அச்சிறுமியிடம் கொடுத்தான். அதை வாங்கிய அச்சிறுமி அதிவேகமாக ஓடி மறைந்தாள். அச்சிறுமி சென்றவுடன் பல்வேறு மருந்துப்புட்டிகளை அதனதன் இடத்தில் எடுத்து வைக்கும் பொழுது சுந்தரைப் “பெரும் பயம்” ஆட்கொண்டது. சுந்தர் என்ன காரியம் செய்து விட்டான்? தப்பிதமான வேறு ஒரு புட்டியையும் எடுத்திருந்தான். மருந்துகளை மருந்தோடு கலப்பதற்குப் பதிலாக கொடிய விஷத்தையும் கலந்துவிட்டான். நோயால் படுத்திருக்கும் அத்தாய் அதைச் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! தாங்கொண்ணாத் துயர் கொண்ட மரணம்!!

சுந்தரால் என்ன செய்யமுடியும்? அச்சிறுமியையோ அல்லது அவள் வசிக்கும் இடத்தையோ அவன் அறியான். அச்சிறுமியை மட்டும் இப்போது அவன் கண்டு கொண்டானானால்! தன் மருந்தகத்தை விட்டு இருள் நிறைந்த வீதிக்கு ஓடினான்! தன்னால் முடிந்தமட்டும் வலதுபுறமும் பின் இடது புறமும் ஓடினான்!! தேடினான்!!! மூடிவோ பலனற்றுப் போயிற்று. அநேக வீதிகளின் ஊடாகக்கடந்த அச்சிறுமியையோ கரும் இருள் கவ்விக்கொண்டது. அச்சிறுமியோ வேறு அதிகப் பரபரப்புடன் காணப்பட்டாள். ஒருவேளை, தன் வீட்டையடைந்த சிறுமி அதே நிமிடத்தில் அவ்விஷத்தை ஊற்றித் தன் தாய்க்குக் கொடுத்திருந்தால்? ஆறியா சுந்தருக்குக் குப்பென்று வியர்த்துக்கொட்டியது! அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்பொழுது …… தன் கிறிஸ்தவ நண்பன் மறக்க வேண்டாமெனச் சொன்ன திருமறையின் தேவவாக்கு திடீரென அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”, கடந்த நாட்களில் சுந்தர், தன் கிறிஸ்தவ நண்பனிடம் குதர்க்கமும் கேலியும் செய்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்திருந்தாலும் அவன் நினைவில் நின்ற நீங்காத வேத வாக்கு இதுவே.

சுந்தர் தன் மருந்தகத்துக்கு மிக அவசரமாகத் திரும்பினான். முழங்காலிட்டுத் தன்னை முற்றுமுடியத் தாழ்த்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி வேண்டுதல் செய்தான். இப்பொழுது அவன் எந்தவிதமான குதர்க்கமோ கேலியோ செய்யவில்லை. தன்னுடைய தாங்கொண்ணா வேதனையில் ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட்டு உதவி செய்யும்படி மன்றடினான். தன்னுடைய இருதயத்தை முற்றிலுமாகத் தேவனிடத்தில் ஊற்றி வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரெனக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தான். என்ன ஆச்சரியம்!!

கண்ணீர் வழிந்தோட, உடைந்த மருந்துப் புட்டியைப் பிடித்தவாறே, தான் அதிவேகமாக ஓடியதால் கீழேவிழுந்து மருந்துப் புட்டியை உடைத்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் விம்மியழுது கெஞ்சினாள் அச்சிறுமி! ஆனந்தப்பெருக்கில் சுந்தர் வேறு ஒரு புதுப் புட்டியை எடுத்து இம் முறை மிகக்கவனத்தோடு நிரப்பி அனுப்பினான். தான் அதிக நாட்களாகப் புறக்கணித்து வந்த தேவனின் ஒப்பற்ற பரிகாரத்துக்கு எவ்வளவு தகுதியற்றவன் என்று தன்னை நொந்துகொண்டான். சுந்தர் தன் கண்களை மூடினபொழுதோ, அவன் உள்ளத்துறைந்திருந்த சகல அசுத்தத்தையும், புத்தியில் புதைந்திருந்த துர்ச்சிந்தை யாவையும் கண்டான். தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ‘என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொள்ளும்’ என்று வேண்டுதல் செய்தான். அக்கணமே அவன் ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளையாக மாறினான். இப்பொழுதோ சுந்தர் அதிகச் சந்தோஷமுள்ளவனாகவும் உண்மையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் காணப்பட்டான்.

இக்கைப்பிரதியை வாசிக்கின்ற என் அருமையான நண்பரே! சுந்தர் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து விடுதலை பெற்றன் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். ஒருவேளை அவருடைய அன்பான அழைப்பைத் தொடர்ந்து புறக்கணித்திருந்தால் சுந்தரின் முடிவு எப்படியிருந்திருக்கும்? இதை வாசிக்கும் சிநேகிதரே! ஆண்டவர் உம்மைப் பார்த்து “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்கிறார். உமக்கு மெய்வருத்தம் உண்டா? சுந்தருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல நீர் ஈடுபட்டிருக்கும் எப்பொறுப்பிலும் இவ்வித நிர்ப்பந்தமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.“ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோ.6:37) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது கையை மிகுந்த ஆவலோடும் அன்போடும் நீட்டிக்கொண்டிருக்கிறார். உருகி அழைக்க உமக்கு மனமில்லையா? உருகி அழைத்தால் உமக்கேது துயரம்? வருந்தும் மனமே ஒளிவீசும் ஆலயம் என்பதை மறவாதேயும் !!

எனவே இதை வாசிக்கும் அன்பரே! பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23) என்று தேவன் கூறுகிறார். ஒருவேளை இத்தேவ அழைப்பின் சப்தத்திற்கு நீர் செவிசாய்க்காது போனால்….? ” மனமே மருளாதே! நீர் இன்றே அவரை உமது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் உமக்கு இளைப்பாறுதல் தந்து இளமையும் முதுமையுமற்ற நித்திய ஜீவனை உமக்களிப்பார்.

டீனேஷாவின் சோகவாழ்வும் புதிய திருப்பமும்

விக்கிரகத் தேவர்கள் யாவும் கடலில் மூழ்கின

இந்தியாவிலிருந்து கென்னியாவிற்குக் குடிபெயர்ந்த டினேஷா, தனது குடும்பத்துடன் அங்கு வாழ்ந்து வந்தாள். இளவயதிலிருந்து ஒரு இந்துப்பற்றுள்ள அந்தப் பெண்மணி, வழக்கப்படி விரதம் இருந்து, கும்பிட்டு, அர்ச்சனை செய்துவந்தாள். டினேஷாவின் குடும்பத்தில் அதிக பிரட்சனைகள் இருந்தன, ஆகவே அவர்கள் அதிகமாக விக்கிரகத் தேவர்களை வணங்கி வந்தார்கள். “சிலவேளையில் அவைகளில்ஒன்றாவது எமக்கு உதவலாம்….” என்று நம்பிய டினேஷாவும் அவளது சகோதரியும் அதிகாலையில் மூன்றுமணிக்கு வீட்டில் உள்ள விக்கிரகங்களைக் கழுவிவந்தார்கள். அவர்கள் வீட்டில் பொன்னாலும், வெள்ளியினாலுமான நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் காணப்பட்டன. அவைகளில் ஒவ்வொன்றும் உடுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, உணவு படைக்கப்பட்டும் வந்தன. அதன் பிற்பாடு அவர்கள் இருவரும் மணித்தியாலக் கணக்காக அந்த விக்கிரகங்கள் முன்பாக இருந்து தியானம் செய்து, எல்லாச் சடங்குகளையும் செய்து முடிப்பார்கள். காலை ஒன்பது மணிக்கு அவர்கள் தங்கள் கடையைத் திறப்பதற்கு முன்னதாக, காலைதோறும் அந்த வழிபாட்டைச் செய்து வருவார்கள். விக்கிரகங்களுக்குச் செய்யவேண்டிய சகல கிரியைகளும் டினேஷாவுக்கும் அவளது சகோதரிக்கும் முக்கியமாக இருந்தது.

டினேஷாவினதும் அவளது குடும்பத்தாரினதும் வாழ்வு இன்னும் கஷ்டமாகவே சென்று கொண்டிருந்தன. அவளது உடலில் நோய்கள் ஆரம்பித்து, அவைகள் பாரிசவியாதியை ஏற்படுத்தின. டினேஷா பதினான்கு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பதினொரு தடவைகள் சத்திர சிகிச்சை பெற்றாள். அவள் வியாதிப்பட்டுங் கூட, அவளது சமயச் சடங்குகள் யாவும் இன்னும் அதிகரித்தே வந்தன. மூடநம்பிக்கைகள் போன்ற பயங்கரச் செய்கைகளும் அவளிடத்தில் ஆரம்பித்தன. என்னவெனில் பறவைகள், மிருகங்கள் போன்றவைகளின் ஆவிகளுக்கு அவள் பலி செலுத்தினாள். மந்திரம், சூனியம், சாஸ்திரம் போன்றவற்றில் வசீகரிக்கப்பட்ட டினேஷா, தனது குடும்பத்தார் ஒவ்வொருவரிலும் சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஆகவே அவள் தனது குடும்பத்தாருடன் பகையை உருவாக்கி தனிமையும் ஆனாள்.

இந்த நாட்களிலேயே டினேஷா தனது விக்கிரகங்களைத் திட்டத்தொடங்கினாள்.”நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவுகின்றவர்களா?”என்றுகேட்ட அவள்” நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? எனக்கு நிம்மதியில்லை, சமாதானமில்லை நான் நோய்வாய்ப்பட்டும் போனேன், எனக்கு இருந்ததெல்லாம் உங்களுக்குச் செலுத்தினேன். இனி உங்களுக்குத் தருவதற்கு என்னிடத்தில் எதுவும் இல்லை, நீங்கள் எனது வீட்டில் இருந்த வண்ணம் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் பொன்னும், வெள்ளியுமாய் இருக்கிறீர்கள். நீங்கள் ஊமைகளும், காதுகேளாதவர்களுமானவர்கள், நான் கும்பிட்டுப் பிரார்த்திக்கும் போது உங்களால் கேட்க முடியாதுள்ளது. இனி எனக்கு எல்லாம் போதும்!” இவைகளைக் கூறிய டினேஷா, அந்த விக்கிரகத் தேவர்களுக்குப் பரிட்சை கொடுக்க முன்வந்தாள். பொன்னிலும், வெள்ளியிலும் செய்யப்பட்ட அந்த விக்கிரகங்களால் நீந்த முடியுமா? என்று கேட்ட டினேஷா: “நீங்கள் உண்மையிலேயே தேவர்கள் என்றால், நான் உங்களைக் கடலில் எறியும் போது, நீங்கள் மீண்டும் மேலே வரவேண்டும். நீங்கள் உங்களைக்காத்துக்கொள்ள முடியாவிடில் மூழ்கிப் போகுங்கள், நான் இனிமேல் உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி அவைகளைக் கடலிலே எறிந்தாள். அவைகள் யாவும் கடலில் மூழ்கின.

இந்த நாட்கள் கடந்த பின்னர், ஒரு நாள் டினேஷாவின் இந்து நண்பி ஒருத்தி அவளிடத்தில் வந்து, அவள் இதுவரையில் கேள்விப்படாத ஒரு கடவுளைக் குறித்து அறிவித்தாள். அந்த கடவுள் “இயேசு பிரபு” இயேசு கிறிஸ்து என்று டினேஷாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தன்னிடத்தில் இதுவரையில் இருந்தவைகளிலும் பார்க்க இயேசு அதிகமானவர் என்பதை டினேஷா உணர்ந்தாள். அவர்கள் இருவரும் ஒருமித்து வேறொரு இந்தியப் பெண்ணிடம் சென்றார்கள். அப்பெண் இயேசுவில் விசுவாசம் உள்ளவளாக இருந்தாள். அவளுடன் ஆழ்ந்த சம்பாசணையை வைத்த டினேஷா, இயேசு கிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்பதை நன்கு அறிந்தாள். எல்லா இருளான அசுத்த வல்லமைகளிலிருந்து, இயேசு அவளை விடுவிக்க வல்லவர் என்று உணர்ந்த டினேஷா அவரை ஜெபத்தில் ஏற்றுக் கொண்டாள்

அந்த நாளிலிருந்து டினேஷா தனது வாழ்வை இந்த உண்மையுள்ள ஆண்டவரிடம் ஒப்படைத்தாள். அவள் அவருக்கு ஊழியம் செய்து, தனது சமயத்தாரும் இயேசுவை அறிய விரும்பினாள். இக்காலம் கழிந்த நாட்களில் டினேஷாவின் முழு குடும்பமும் இயேசுவில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள்.

நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கோளது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவை களை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

(பைபிள்) சங்கீதம் 115: 3-8

My Favorites

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26 "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே" யாக். 5:11 நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம்...
Exit mobile version