முகப்பு வலைப்பதிவு பக்கம் 36

தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

பெப்ரவரி 18

“தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.” 1.தெச. 1:10

நம்மை மீட்டுக்கொள்ளவே கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். நம்மைப்பரிசுத்தமாக்க இயேசு பரிசுத்தாவியை அனுப்பினார். அவரே திரும்ப வந்து நம்மை அழைத்துக்கொண்டு தாம் இருக்கும் இடத்தில் சேர்த்துக்கொள்ளப் போகிறார். இது மகிழ்ச்சிக்குரிய மகிமையான காரியம். புதிய ஏற்பாட்டில் தேவ ஜனங்களுக்கு இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். இதுவே நமது நம்பிக்கை. மிக அவசியமான ஒன்றும் மிக முக்கியமானதுமாகையால் இதையே அடிக்கடி தியானிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் அவருடைய ஊழியர். நம்மிடம் கணக்கு கேட்க நமது எஜமான் வரப்போகிறார். நாம் அவரின் பிள்ளைகள். நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ள நமது தகப்பன் திரும்ப வரப்போகிறார். நாம் அவரின் மணவாட்டிகள். நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளும் மணவாளனாய்த் திரும்பவும் வரப்போகிறார். அவர் திடீரென்று வருவார். எதிர்பாராதபோது வருவார். திருடனைப்போல் வருவார். நாமோ நித்திரை மயக்கம் கொண்டு மற்றவர்களைப்போல் தூங்குகிறர்களாயிராமல் எப்போதும் விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பொழுது விடியும்முன் அவர் வருவார். அவர் நிச்சயம் திட்டமாக சீக்கிரம் வருவார்.

அவர் பரலோகத்திற்குப் போனவிதமாகவே திரும்ப வரும்போது நாம் சந்தோஷப்படுவோமா? ஒருவேளை அவர் வருகை தாமதப்பட்டால் நாம் அவரோடிருக்க சந்தோஷத்தோடே அவரிடம் போவோம். இதற்கு நாம் உடனே ஆயத்தப்படுவோமாக.

துன்பம் துக்கம் பாவம் யாவும்
இரட்சகராலே நீங்கும்
பொறுமையாய் காத்திருப்போம்
அப்போ பெரும் மகிழ்ச்சி அடைவோம்.

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

பெப்ரவரி 16

“கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” எபேசி. 2:5

நாம் இலவசமாய் இரட்சிக்கப்படுகிறது எவ்வளவு பெரிய தேவ இரக்கம். நமது இரட்சிப்பு துவக்கம் முதல் முடிவுவரை கிருபைதான். உலகம் தோன்றுமுன்னே அது தேவ சித்தமாய் முன் குறிக்கப்பட்டது. நாம் இரட்சிப்புக்கென்றே தெரிந்துக்கொள்ளப்பட்ட்டோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். தேவன் நம்மை தெரிந்தெடுத்து அவரோடு நித்திய நித்தியமாய் நாம் வாழவே. கர்த்தர் தமது சுய சித்தப்படியே நம்மை இரட்சிப்புக்கு தெரிந்தெடுத்தார். அவர் மாறாதவர். ஆகவே அவர் திட்டமும் மாறாது. தேவ புத்தகத்தில் நம்முடைய பெயர் இருக்கிறது. தேவன் ஆரம்பித்த கிரியைகளில் நமக்கும் பங்கிருக்கிறது. பரிசுத்தவான்களின் சுதந்தரமும் நமக்குண்டு. நாம் உலகத்திலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்டோம். இது பெரிய தேவ தயவு.

நாம் மீட்கப்படவே நமக்காக கிரயம் செலுத்தப்பட்டது. நம்மை விடுவிக்கவே வ்லமை புறப்பட்டது. நாம் தேவனோடு பேசுகிறோம். தேவ இராஜய்த்தின் இரகசியங்களை தெரிந்துக்கொள்வதும் எத்தனை தயவு. தேவன் நமக்குக் கொடுக்கும் கிருபை எத்தனை பெரியது. இது வல்லமையும் மேன்மையுமுள்ளது. இப்படி நாம் அழைக்கப்பட்டதினால் புது ஜீவனுக்கும், பரம அழைப்புக்கும், சகல நன்மைகளுக்கும் பங்குள்ளவர்களாகிறோம். தேவ வல்லமையால் நாம் காக்கப்படுகிறோம். இதுவும் பெரிய கிருபை. சத்துருவின் கைகளுக்கும், விசுவாசத்தைவிட்டு வழுவாமல் காக்கப்படுவதும் கிருபையே. இப்படி செய்வதினால் தேவன் நம்மை எல்லாவற்றிலிருந்தும் இரட்சிக்கிறார் என்பது உண்மையாகிறது. நாம் சீக்கிரத்தில் மறுரூபமாவோம். அப்போது மோட்சத்தில் இலவசமாய் நுழைவோம். இரட்சிப்பு இலவசமாய் கிடைப்பதினால் அதை எவரும் பெற்றுக்கொள்ளலாம். துவக்க முதல் முடிவு மட்டும் அதினால் உண்டாகும் மகிமை கர்த்தருடையதாகவே இருக்கும்.

தேவகுமாரன் மரித்ததால்
நமக்கு இரட்சிப்புண்டாயிற்று
பாவிகளை மீட்டதால்
துதிகள் வானம் எட்டியது.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்

பெப்ரவரி 12

“நானோ எப்போதும் நம்பிக்கைக் கொண்டிருப்பேன்.” சங். 71:14

இப்படித்தான் நான் தைரியமாய் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஏனென்றால் என் நம்பிக்கை அஸ்திபாரமானது, என்றும் மாறாமல் நிலையாய் நிற்கிறது. கிருபை நிறைந்த என் தேவனுடைய தகுதிகளும் அவருடைய வசனத்தில் கண்டிருக்கும் உண்மை வாக்குகளும் அதில் எழுதியிருக்கிறது. தேவனுடைய பக்தருடைய வாழ்க்கையிலும் என் அனுபவத்திலும் கண்மறிந்ததும், சகலமும் எப்போதும் தேவனிடம் நம்பிக்கைக் கொண்டிருக்க என்னை உற்சாகப்படுத்துகின்றன. என் அக்கிரமத்திற்கு தேவன் இறங்குவார். சகல துன்பத்திலும் என்i னஆதரிப்பார். சமயத்திற்கேற்ப உதவி செய்து என்னை விடுவிப்பார். எனக்கு வரும் எல்லா தீயக் காரியங்களிலிருந்தும் நன்மை பிறக்கும். இயேசுவானவர் தோன்றும்போது எனக்குத் தயை கிடைக்கும். நித்தியஜீவன் எனது படைபங்காயிருக்குமென்று நம்பிக்கைக் கொண்டிருப்பேன். இந்த நம்பிக்கை மட்டும் இல்லையேல் நான் நிர்மூலமாகிவிடுவேன். வீண் கவலை என்னை நெருக்கி, அவநம்பிக்கை என் மனதை மூடினாலும் நான் அவரையே நம்பிக்கொண்டிருப்பேன்.

இப்படி நான் நம்புவதால் நம்பிக்கையின் தேவ னைக் கனப்படுத்துகிறோம். வருங்காரியங்கள் வெளிச்சமாய் இருக்கும். இது ஜெபத்திற்கும் முயற்சிக்கும் நம்மை தூண்டி விடுகின்றது. நமது ஜீண காலத்தை இனிமையாக்குகிறது. ஆனால் ஒன்றை நான் மறந்துவிடக்கூடாது.. என் நம்பிக்கை பரீட்சிக்கப்படும். தேவனும் என்னை ஆராய்வார். சாத்தானும் என்னைச் சோதிப்பான். ஆனாலும் நல்ல நம்பிக்கையானது பிழைத்து பலத்த காரியம் நடைபெற கிரியை செய்யும். நான் ஏன் அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்க வேண்டும்? நான் பயப்படேன். அதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?

காற்றடித்தாலும் கொந்தளித்தாலும்
என் ஆத்துமா உம்மைப் பற்றும்
அப்போ என் மனம் சுகித்து
உம்மில் வாழ்ந்து களிக்கும்.

தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்

பெப்ரவரி 11

“தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல்.” ரோமர் 8:32

தமது ஜனங்களை இரட்சிக்கும்படிக்கு பிதா தம்முடைய குமாரனையும் பெரிதாக எண்ணவில்லை. இவர்களை ஆறுதல்படுத்த அவரைத் தண்டித்தார். பாவம் செய்த தூதர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத்தில் அதிகமாய் பாவம் செய்தவர்களையும் தண்டித்தார். ஆனால் நம்மையோ இரட்சிப்பதற்கு அதிகம் விருப்பம் கொள்கிறார். இந்த அன்பை யோசித்தால் ஆச்சரியமானது. அவரே நம்மை இரட்சித்தார், இரட்சிக்கிறார், இரட்சிப்பார். இதற்காகத்தான் இயேசுவையும் ஒப்புக்கொடுத்தார். நமக்hகத்தான் பிதாவும் அவரோடு உடன்படிக்கை செய்தார். நமக்காகவே அவர் உலகத்தில் வந்தார். நமக்காகவே சகல நீதியையும் நிறைவேற்றினார். நமக்காகவே பாவ பலியானார். நமக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து பரமேறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

கிறிஸ்து நம்முடைய பதிலாளி. மேலான உடன்படிக்கைக்குப் பிணையாளி. ஆகையால்தான் நம்மை விடுவிக்க தேவன் அவரை தண்டித்தார். நம்மைத் தப்பிவிப்பது மட்டுமல்hமல் ஜீவனும், புத்தியும், சகல உரிமையையும் இலவசமாய் தருகிறார். எங்கள் அருமை இரட்சகரே, எங்களுக்காக பிதா உம்மைத் தண்டித்தார். பிசாசும் உம்மைச் சும்மா விட்டு வைக்கவில்லை. குற்றவாளியான மனுஷர்களும் உம்மைக் கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நாங்களோ, உம்மைக் கோபப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும், உம்மை மனம் நோகச் செய்யாதபடி காத்துக் கொள்ளவும், உமது நாமத்தை வீணிலே வழங்காதிருக்கும்படி நடக்கவும், எங்களுக்குக் கீழ்ப்படிகிற இருதயத்தைத் தந்தருளும்.

முள்கிரீடத்தில் எங்களுக்கு
மகிமை சம்பாதித்தீர்
ஐங்காயங்களால் பாவிகட்கு
சுகம் வரப்பண்ணினீர்.

என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது

பெப்ரவரி 10

“என் ஆத்துமா தேவன் மேல் தாகமாயிருக்கிறது.”  சங். 63:1

தேவன் தன் பட்சத்திலிருக்கிறாரென்று அறிந்துகொள்வது மாத்திரம் ஒரு கிறிஸ்தவனுக்கு போதாது. அவர் சமுகத்தை அவன் தரிசத்து, அவரோடு இன்பமாய் இசைந்து அவருடைய அன்பை ருசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவில் அவன் புதிதாய்ப் பிறந்தபடியால் தேவன் கொடுக்கும் ஈவுகளின்மேல் வாஞ்சையடைய வேண்டும். அவராலன்றி அவன் ஆசைகள் நிறைவேறாது. தேவனுடைய இனிய முகத்தை நாடி வாஞ்சித்து, அதுவே தன் சந்தோஷம் என்று அறிந்து ஆனந்தங்கொள்ள வேண்டும். நீ ஆண்டவரின் முகத்தைக் காணாதுப்போவாயானால் சீக்கிரம் சேர்ந்துதுப்போவாய்.

தேவ வாக்கியங்களில் தேவனைக் காணாவிட்டால் அனலற்ற வெளிச்சம்போலவும், விசேஷித்த சிலாக்கியமாய்க் கர்த்தரைக் காணாவிட்டால் ஜீரத்தினால் பீடிக்கப்பட்டவனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற காய்கறிகளைப்போலவும் தோன்றும். தேவன்தான் ஒருவனுக்கு ஜீவன். இயேசுதான் ஒருவனுக்கு உயிர். கர்த்தருக்குள் சந்தோஷப்படுதலதான் அவன் பெலன். ஒருவன் தேவனைக் காணாவிட்டால் உயிரற்றவன். வியாதியஸ்தன். துக்கம் நிறைந்தவன். பாடுகளுள்வன்.

அன்பரே, இது உன் அனுபவமா? வெறும் அறிவும், வீண் சடங்குகளும், தெய்வ அனலை ஊட்டாத மார்க்கமும், உனக்கு மன திருப்தியை கொடுக்குமா? அப்படியிருக்குமானால் உன் நிலை சந்தேகத்திற்குரியது. தேவனில்லா மார்க்கத்தைப் பற்றியும், தேவனோடு பேசி உறவு கொள்ளாத மார்க்கத்தைப்பற்றியும் எச்சரிக்கையாயிரு.

உம்மேல் தாகமாய்
ஏங்குதே என் ஆத்துமா
என் சமீபமாய் வாரும்
அப்போ தென்வாஞ்சைகள் தீரும்.

நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்

பெப்ரவரி 09

“நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” சங். 109:4

விழிப்பும் விண்ணப்பமும் எப்போதும் இணைபிரியாதிருக்க வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவன் விழிக்க வேண்டும் விழிக்கிற கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டும். ஒன்று மற்றொன்றுக்குத் துணை. நம்முடைய வேலைகளைப் பார்க்கும்போதும் தினசரி அலுவல்களைக் கவனிக்கும்போதும் ஜெபம் மிகவும் அவசியம். அது எண்ணற்ற தீமைகளுக்கு நம்மைக் காத்து மேலான நன்மைகளை நமக்கு கொண்டு வருகிறது. ஜெபத்திற்குச் செவிகொடுப்பதே தேவனுக்குப் பிரியம். உத்தமருடைய விண்ணப்பம் அவருக்குப் பிரியம். அவரை நோக்கி மன்றாடுவது அவருக்குச் சந்தோஷம் என்று எண்ணத்தோடு அவர் சமுகம் போவோமாக.

ஒரு தகப்பனைப்போல் அவர் என்னைக் கண்ணோக்குகிறார். தகப்பனைப்போல் செவி கொடுக்கிறார். அவர் சிம்மாசனத்தண்டை நான் சேராமல் என்னுடைய விண்ணப்பங்களை ஆத்திரத்தோடு செய்து முடிக்கும்போது அவர் விசனப்படுகிறார். தைரியமாய் வா என்று அவர் அழைக்கிறார். அவர் கூப்பிடுதலைக் கவனியாதேப்போனால் ஏதாவது ஓரு துன்பத்தை அனுப்புவார். ஒரு பூசலைக் கட்டளையிடுவார். நம்மை அவர் சிம்மாசனத்தண்டை துரத்த ஒர சத்துருவை எழுப்பி விடுவார். நமது துயரங்கள் நம்மைப் பார்த்துத் தெளிவாய்ச் சொல்கிறதை நாம் கவனிப்போமானால் அவைகள், ‘முழங்கால் படியிடு. உன் ஜெப அறைக்குப்போ அறைக்குப் போ, உன் தேவனை நோக்கிக் கூப்பிடு’ என்று கூறும் சத்தங்கள் கட்டாயம் கேட்கும்.

இடைவிடாமல் ஜெபம்பண்ண
தாரும் வரம் தேவனே
நான் உம்மோடே நடக்க
உமதாவி அருளுமே.

Popular Posts

My Favorites

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6 "மார்த்தாளே, மார்த்தாளே... நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்" லூக்கா 10:41 இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார்....