தேவனே அருள் நிறைவே
தேவனே அருள் நிறைவே
ஒளியே மறையே
திருத்துவமே தினம் தினமே
வரமே தருவாய்
இந்நாளில் உம்மை நாடி
என்றென்றும் உம்மை சார்வேன்
மங்காத வாழ்வு மாறாத இன்பம்
எந்நாளுமே தந்தாளுவீர்
தேவன்பில் என்றும் பெருகிட
மென்மேலும் உம்மை அறிந்துமே
உம் பாதை செல்ல எந்நாளும் என்னை
என் தேவனே கண் பாருமே
அன்பாலே தேடி வந்தீர்
என் பாவம் யாவும் தீர்ப்பீர்
உம் ஆவி என்னை எந்நாளும் தாங்க
என் இயேசுவே கண் பாருமே