E

Ennalumae Thuthi

எந்நாளுமே துதிப்பாய் – என் ஆத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது

பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தார்; உன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மாதயவை நினைத்து

எத்தனையோ கிருபை – உன் உயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்

பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது

தந்தை தன் பிள்ளைகட்கு – தயவோடிரங்காரோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கி சுமப்பாரே