தினதியானம்

முகப்பு தினதியானம்

பயப்படாமலும் கலங்காமலும் இரு

மார்ச் 18

“பயப்படாமலும் கலங்காமலும் இரு.” உபா. 1:21

கர்த்தர் நம்மை சோதித்தாலும் நமக்குத் தைரியம் கொடுக்கிறார். அவர் தமது வசனத்தில் முன்னூற்று அறுபத்தாறு முறைக்குமேல் பயப்படாதே என்கிறார். ஆனால் நாமோ அடிக்கடி பயப்படுகிறோம். இதை ஆண்டவர் அறிந்துதான் நம்மைச் சந்தோஷப்படுத்தவும், நமக்கு உற்சாகம் அளிக்கவும் இத்தனை முறை சொல்லியிருக்கிறார். தேவன் நல்ல தேசத்தை நமக்கு முன்பாக வைத்து அதை நமக்கத் தருவேன் என்று வாக்களித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளப் போங்கள் என்று கற்பித்தபடியால் நாம் அதைரியப்படக்கூடாது. நமது சத்துருக்கள் பலத்திருக்கலாம். ஆனால் நமது சர்வ வல்லவரான தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார். நமது சத்துருக்கள் தந்திரக்காரராய் இருக்கலாம். ஞானமுள்ள ஒரே தேவன் நமது பட்சத்தில் இருக்கிறார். தேவக்கோபம் நம்மீது இருப்பதுப்போல தோன்றலாம். நமது ஜெபங்களுக்கு பதில் அளிக்காமல், காரியங்கள் மோசப்பட்டு போவதாய்க் காணலாம். ஆனால் நமது நற்குணங்களை அதிகப்படுத்த, நமது உத்தமத்தைச் சோதிக்க, கருத்தான ஜெபத்தை ஏறெடுக்க இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிக்கிறார் என்று அறிய வேண்டும்.

அன்பர்களே, ஆகவே நம்பிக்கையில் உறுதிப்பட்டு விசுவாசத்தில் விடாப்பிடியாய் இருக்க வேண்டும். கர்த்தர் நமக்காக வெளிப்படுவார். நமது அனுபவத்தால் அவர் வசனம் உண்மையுள்ளது என்று கண்டறிவோம். இப்போது எந்தப் பதிலும் அவர் சொல்லாவிட்டாலும் நமது இருதயம் விரும்புகிறபடி சீக்கிரம் செய்வார். ஆதலால் பயப்பட அவசியமில்லை. பயம், விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தி, தேவனைக் கனவீனப்படுத்தி, நமது சத்துருக்களை சந்தோஷப்படுத்தும். உங்களோடு தேவன் இருக்கிறார். அவர் உனக்கானவர்.

உமது சமுகம் தேடி
உம்மில் மகிழ்ந்திருப்போம்
உமது வாக்கை நம்பி
பயத்தை அகற்றுவோம்
விக்கினங்கள் பெருகினும்
உம்மால் வெற்றிபெறுவோம்.

நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்

மார்ச் 30

“நான் தேவனுக்குப் பயப்படுகிறேன்.” ஆதி. 42:18

இந்த வார்த்தைகளை யோசேப்பு, தன் சகோதரரைப் பார்த்துச் சொன்னான். தன் தகப்பனுக்குப் போஜன பதார்த்தங்களை அனுப்பும்போது இப்படிச் சொன்னான்;. கிpறஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாக நடக்க நாம் சோதிக்கப்பட்டால் நாம் இப்படி சொல்லலாம். உத்தமமான தேவபயம் அன்பினால் பிறந்து பிள்ளையைப்போல தேவனோடு உறவாடுவதனால் உறுதிப்படுகிறது. இந்தப் பயம் அவருடைய மகத்துவத்தைப் பார்த்துப் பயப்படும் பயம் அல்ல. அவருக்கு வருத்தம் உண்டாக்க கூடாதே என்கிற பயம்தான். இந்தப் பயத்திற்கு காரணம் பரிசுத்த ஆவியானவர்.. பாவம் செய்யாதிருக்க இவர் நல்ல மாற்று. தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கப் பயந்தால் எவ்விதமும் அவரைப் பிரியப்படுத்த பார்ப்போம். உண்மையாக நான் அவரை நேசித்தால் அவருக்கு மனஸ்தாபம் உண்டாக்க பயப்படுவேன். இந்தப் பயம் நம்மை எச்சரிப்புள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருக்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். இது நம்மை ஜெபத்திற்கு நடத்தும். தற்பரிசோதனை செய்ய ஏவி விடும். நமது நடக்கையை வசனத்தோடு ஒத்துப் பார்க்கப்பண்ணும். துணிகரத்திற்கும் அசட்டைக்கும் உண்மை தாழ்ச்சிக்கும் நம்மை விலக்கிக் காக்கும்.

தேவனுக்குப் பயப்படுகிறவன் பாவிகள் வழியில் நடக்கமாட்டான். துன்மார்க்கர் ஆலோசனையில் நிற்கமாட்டான். பரியாசக்காரருடைய இடத்தில் உட்காரமாட்டான். அவன் பிரியம் தேவ வசனத்தில் இருக்கும். அதை இரவும் பகலும் தியானிப்பான். இன்று தெய்வ பயம் நம்மை நமத்தினதுண்டா? நான் தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் சொன்னதுண்டா? அப்படியில்லை என்றால் நாம் கர்த்தருக்குப் பயப்படவில்லை என்றே சொல்லமுடியும். உன்னால் நான் கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்று சொல்லக்கூடுமா?

தேவ பயம் சுகம் தரும்
வெளிச்சம் இன்பம் அளிக்கும்
தெய்வ செயலை விளக்கும்
இரக்கத்தைப் பெரிதாக்கும்.

புத்திரசுவிகாரத்தின் ஆவி.

பெப்ரவரி 02

“புத்திரசுவிகாரத்தின் ஆவி.” ரோமர் 8:15

பாவிகளாகிய நம்மை இரக்கத்திற்காகக் கெஞ்சும்படி செய்கிறவர் ஆவியானவரே. பிறகு நேசிக்கும் பிள்ளைகளாகும்படி நம்முடன் உறவாடுகிறவரும் இவரே. யேகோவாவின் கிருபை நிறைந்த குணநலன்களை நமக்கு வெளிப்படுத்தி, நமது இதயத்தில் அவரில் வாஞ்சைக்கொள்ளும்படி செய்து பிதாவின் அன்பை நமது உள்ளங்களில் ஊற்றி அப்பா பிதாவே என்று நம்மை அழைக்கச் செய்கிறவதும் இந்த ஆவியானவரே. உலக தோற்றத்திற்கு முன்னே புத்திரசுவிகாரத்தின் சிலாக்கியத்திற்கு நாம் முன் குறிக்கபட்டிருந்தாலும்,பரிசுத்தாவியானவரின் துணைக் கொண்டுதான் சகலத்தையும் அறிய முடியும்.

ஆவியானவர்தான் இருதயத்தைத் திருப்பி, மேலான சிந்தனைகளைக் தந்து, உள்ளத்தைச் சுத்திகரித்து, நோக்கங்களைச் சீர்ப்படுத்தி, சத்தியத்தில் நடத்துகிறார். மேலும் பாவத்தைச் சுட்டிக்காட்டி உணர்த்தி, மனந்திரும்பச் செய்து சமாதானத்தினாலும், உத்தமத்தாலும் நிரப்புகிறார். அவர் நம்மை நடத்தும்போது ஜெபம் இனிமையாகிவிடும். தியானம் பிரயோஜனமாகிவிடும். விசேஷமான வெளிப்பாடுகள் ஆனந்தங்கொடுக்கும்.

நண்பரே, இந்தப் புத்திரசுவிகார ஆவியானவர் உன்னிடத்தி; உண்டா? பிள்ளையைத் தகப்பனிடம் நடத்துகிறதுப்போல நடத்துகிற ஆவியானவரை நாடுகிறாயா? ஆற்றி தேற்றி உன்னை அணைக்கும்போது அவரோடு இசைந்துப் போகிறாயா? அவரால் எழுதப்பட்ட தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிகிறாயா? அவர் ஜெபிக்க சொல்கிறபடி அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறாயா?

கர்த்தாவே உம் ஆவியை
என் உள்ளத்தில் ஊதிவிடும்
உமதன்பால் என்னை ஆள்கொள்ளும்
உம்மை விடேன் எந்நாளும்.

கர்த்தர் நன்மையானதைத் தருவார்

மார்ச் 31

“கர்த்தர் நன்மையானதைத் தருவார்.” சங். 85:12

நலமானது எதுவோ அதைக் கர்த்தர் நமது ஜனத்திற்குத் தருவார். நம்மை ஆதரிக்க உணவையும், பரிசுத்தமாக்க கிருபையையும், மகுடம் சூட்டிக்கொள்ள மகிமையையும் நமக்குத் தருவார். தலமானதை மட்டும்தான் தேவன் தருவார். ஆனால் நாம் விரும்பிக்கேட்கிற அநேக காரியங்களைத் தரமாட்டார். நலமானதைத் தருவார். தகுந்த காலத்திலதான் எந்த நன்மையையும் தருவார். கடைசியில் பெரிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இப்போது நமக்கு நலமானதைத் தருவார். எந்த நன்மையும் இயேசுவின் கரத்திலிருந்தே வரும். அவர் தமது ஜனங்களுக்கு நன்மையைத் தருவார் என்வது அவருக்க் அவர்களுக்கம் இருக்கும் ஐக்கியத்தினால் உறுதிப்படுகிறது. அவர்களுக்கு இவர் பிதா. அவர்களுக்காக அவர் அளவற்ற அன்பையும் உருக்கமான கிருபையையும் வைத்திருக்கிறார். அது கிருபையினாலும் வாக்குத்தத்தத்தினாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

தேவன் சத்துருக்களை நேசித்து சிநேகிதரைப் பட்டினிப்போடமாட்டார். அவர் நமக்குக் கொடுக்கும் நிச்சயம் நம் பொறுமையில்லாமையைக் கண்டிக்க வேண்டும். கர்த்தருக்குக் காத்திரு. ஜெபத்திற்கு அது உன்னை ஏவி எழுப்பட்டும். அவரிடம் நன்மையான காரியத்தைக் கேள். அது உன் விசுவாசத்தை வளரப்பண்ணும். அவரின் வார்த்தையை விசுவாசி. அது உனக்குத் திருப்பதியை உண்டாக்கு. தேவன் உனக்கக் கொடுக்கும் நன்மையில் திருப்பி அடையப்பார். அது உனக்குள் நம்பிக்கையை எழுப்பட்டும். எந்த நல்ல காரியத்தையும் கர்த்தரிடத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப் பார்.

கர்த்தர் நன்மை தருவார்
மகிமை அளிப்பார்
தம்முடையோர்களுக்கு அதை
அவசியம் அளிப்பது நிச்சயம்.

சமாதானத்தோடே போ

மார்ச் 24

“சமாதானத்தோடே போ.” லூக்கா 7:50

உண்மையான சமாதானம் பாவமன்னிப்பிலிருந்து உண்டாகிறது. தேவன் கிறிஸ்துவினால் நமது அக்கிரமங்களையல்லாம் மன்னித்துவிட்டாரென்று நாம் விசுவாசிக்கும்போது நமது ஆத்துமா அந்தச் சமாதானத்தை அனுபவிக்கும். நாம் விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்பட்டபடியினால் தேவ சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம். தேவனைப்பற்றி நாம் பயப்படவேண்டியதில்லை. நம்மை மன்னித்துவிட்டபடியால் நம்மீது அவர் குற்றஞ்சுமத்தமாட்டார். அவர் நமக்கு நன்மை செய்வார் என்று எதிர்ப்பார்க்கலாம். தம்முடைய குமாரனiயே தந்தவர், சகலத்தையும் நமக்கு இலவசமாய்க் கொடாமல் இருப்பாரா? நாம் எத்தீங்குக்கும் பயப்படாமல் எந்த நன்மையும் கிடைக்கும் என்று அவரை விசுவாசித்திருந்தால் நாம் சமாதானமாய் இருக்கலாம்.

இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை மன்னித்து சமாதானத்தோடே போ என்று சொன்னதுபோல் நம்மையும் பார்த்துச் சொல்லுகிறார். சாத்தான் சொல்வரை கவனியாதே. மனிதனின் செயல்களில் அக்கறைக்கொள்ளாதே. பயப்படாமல் உன் கடமையைச் செய் . துன்பமும் சோதனையும் நேரிட்டால் அவைகளைச் சகித்துக்கொள். தேவ பக்திக்குரிய சிலாக்கியங்களை அனுபவி. மோசங்கள் சூழலாம். பெலவீனங்கள் பெருகலாம். ஆனாலும் சமாதானத்தோடே போ. தேவன் உன்னை ஏற்றுக்கொள்வார். நீ தேவனோடு ஒப்புவாக்கப்பட்டபடியால் தேவ நாமத்தை பிரஸ்தாபம்பண்ணு. யேகொவாவின் அன்பையும் மன்னிப்பையும் எங்கும் போய் சொல். அவர் சொல்வது உண்மை என்று சாட்சி சொல். உன்னால் உன் சத்துருக்கள் எல்லாரையும் ஜெபிக்க வைக்க முடியும். இன்று சமாதானமாய் இளைப்பாறு. தேவன் என்னோடு இருக்கிறார் என்று சொல்லி உன்னை ஆற்றித் தேற்றிக்கொள். அவர் சமாதானத்துடன் போ என்கிறார்.

என்னை அன்பாய் பாருமே
என் துக்கத்தை நீக்கிடும்
பயம் சந்தேகம் போக்கிடும்.
சமாதானம் கூறிடும்.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்

ஜனவரி 31

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்.” நெகே. 8:10

பயமும் துக்கமும் நம்மை பெலவீனப்படுத்தும். விசுவாசமும் சந்தோஷமும் நம்மைப் பெலப்படுத்தும். அதுவே நமக்கு ஜீவனைக் கொடுத்து, நம்மை தைரியப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது. நமது தேவனைப் பாக்கியமுள்ள தேவனென்றும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனென்றும் சொல்லுச் செய்கிறது. அவர் நம்மை பாக்கியவான்களாக்குகிறார். அவர் சகலத்துக்கும் ஆறுதலில் தேவனாயிருக்கிறார். ஆகவே நம்மை ஆறுதல்படுத்தி மகிழ்ச்சியாக்குகிறார். இரட்சிப்பின் கிணறுகள் நமக்குண்டு, அதனிடத்திலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டும் கொள்ள வேண்டும். அந்த நிறைவான ஊற்றிலிருந்து எந்த அவசரத்திற்கும் தேவையானதை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அடிக்கடிப்போய் கேட்கிறோமே என்று அச்சப்படத் தேவையில்லை. உங்கள் சந்தோ}ம் நிறைவாயிருக்கும்படிக்குக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் சொல்பதைக் கேளுங்கள். நம்மை நாமே வெறுத்து இயேசுவின் சிலுவையைச் சுமந்துக்கெர்டு வாழ்க்கை நடத்தினால்தான் நாம் பாக்கியசாலிகளாவோம். சந்தோஷமுள்ள கிறிஸ்தவன் தான் பெலமுள்ள கிறிஸ்தவன். தேவனுக்கு அதிக மகிமையை அவனால் தான் கொடுக்க முடியும். நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதும் நமது கடமை. இரண்டும் தேவையானதே. முக்கியமானதே. நாம் எப்போதும் மன மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்வோம்.

நமக்குப் பரம நேசருண்டு
அவர் தயவில் மகிழ
அவர் மகிமை அளிப்பார்
பரம இராஜ்யமும் தருவார்.

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

Popular Posts

My Favorites

கிறிஸ்துவினுடைய அடிமை

டிசம்பர் 19 "கிறிஸ்துவினுடைய அடிமை" 1.கொரி.7:22 கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய...