A Jebathotta Jeya Geethangal

Athikaalaiyil Um Thirmugam

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்
ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான் தேவனுக்கே

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் நேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்