A

Athikaalaiyil Ummai Theduvaen

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே

இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே!

போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா!

பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும்போது – தப்
பாது நின் கிருபை தாங்கிடவேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது?

நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினம்தினம் மெய்யே