A

Athisayamaana Olimaya Naadaam

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான்
வாஞ்சிக்கும் நாடாம் – என்

பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா

சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்

விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும்

பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி, நிறம், ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி

கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர், செல்வர், சிறியவர், பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்

பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை, கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம்

இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்