C

Chinna Manushanukilla

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா

சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள
தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும்

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும்

தெருவில் பேதுருவைத் தேடி
ஓடி வந்ததே ஓர் கூட்டம்
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாமப் போனதையா ஓடி
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

பெரிய ராட்சதனை பார்த்து
ஓடி ஒளிந்ததையா Army
கூலா வந்தானையா தாவீது
கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்