E

En Neethiyai

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

இயேசையா இயேசையா
இயேசையா – என் நீதி நீர்தானைய்யா
யேகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை என் அடியை உறுதிப்படுத்துகிறீர்

நண்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்