E

Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

தோளில் பாரம் அழுந்த தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து