I

Imaipozhuthum Naan Ummai

இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா

இமைப் பொழுதும் நான் உம்மைப்பிரிந்திடா
வரம் எனக்குத்தா இயேசு நாதா
கண்ணயர்ந்து நான் உறங்கும் பொழுதும் கனவும் நீயே இயேசுநாதா
உமைப்பிரிந்து ஒரு பொழுதும் வாழ்வதறியேனே
உமக்கு எங்கும் சாட்சி பகர்வேன்
நீர் கொடுக்கும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் நாளும்
உமக்காக சுமந்து வருவேன்

சொந்தமென்று சொல்வதற்கு நீர் ஒருவர் போதும் இங்கு
உம்மைப் பின் செல்பவர்கட்கு பெருமை அதுவே
பந்தமொன்று வேறெதற்கு திருச்சபையின் நிழலிருக்கு
நாளும் நம்மை அர்ப்பணித்தால் மீட்பு அதுவே
ஒரு கோடி சுகமெனக்கு கிடைத்திருந்தும் அமைதியில்லை
மனம் தினமும் உம் நினைவில் லயித்திருக்க திழைத்திருக்க
வரமெனக்குத்தா இயேசுநாதா

உம்மை மட்டும் வணங்குவதும் உம்மை விசுவாசிப்பதும்
உம் பெயரைப் போற்றுவதும் மகிழ்ச்சி தருமே
ஆலயத்தின் சந்நிதியில் அமைதியுடன் நான் அமர்ந்து
உம்மிடத்தில் பேசுவதும் ஊவகைதருமே
உறங்காத நினைவுகளையும் உறங்கிவிட்ட செவிகளையும்
இருமிவிட்ட இதயத்தையும் உம்மருளால் மாற்றிவிட
வரமெனக்குத்தா இயேசுநாதா